India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொருளாதார சவால்களை சமாளிக்கும் வகையில், சுற்றுலா துறைக்கு புத்துயிர் அளிக்க தாய்லாந்து அரசு முயன்று வருகிறது. அந்த வகையில், ஜூன் மாதம் முதல் 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 60 நாள்கள் வரை தங்க அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளது. முன்னதாக, 57 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் 30 நாள்கள் வரை தங்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், 4 கோடி பயணிகள் இந்த ஆண்டு தாய்லாந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் திமுக தொடங்கி பாஜக வரை அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் மாறிமாறி கட்சித் தாவினர். தற்போது, தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இபிஎஸ் தலைமையை ஏற்று, முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளனர்.
உயிரணு சிகிச்சை மூலம் நீரிழிவு நோயை குணப்படுத்தலாம் என்று சீனா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகளவில் பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயால் அவதி அடைந்து வரும் நிலையில், சீனாவில் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 59 வயதுடைய நபர் உயிரணு மாற்று சிகிச்சைக்கு பிறகு 33 மாதங்களாக இன்சுலின் இல்லாமல் உயிர் வாழ்ந்து வருகிறார். சீனாவில் 4 கோடி பேர் இன்சுலின் ஊசியைச் சார்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான IRCTC கடந்த ஆண்டின் 4ஆவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்நிறுவனத்தின் நிகர லாபம் 2% உயர்ந்து, ₹284 கோடியாக அதிகரித்துள்ளது. வருவாயைப் பொறுத்தமட்டில், 19% அதிகரித்து, ₹1,155 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டு ₹965 கோடியாக இருந்தது. இதனிடையே, பங்கு ஒன்றுக்கு ₹4 ஈவுத்தொகை (Divident) வழங்க இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது.
டெல்லி அமைச்சர் அதிஷி கைது செய்யப்படலாம் என வெளியான தகவல், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மியைச் சேர்ந்த அதிஷி, தங்கள் கட்சி MLA-க்களை ₹25 கோடி கொடுத்து வாங்க பாஜக முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். இதனால், பாஜகவுக்கு களங்கம் ஏற்பட்டதாகக் கூறி பிரவீன் ஷங்கர் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், நாளை அதிஷி ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பணம் இல்லாத போதுதான் அதன் மதிப்பு தெரியும் என ரிங்கு சிங் கூறியுள்ளார். IPL தொடருக்கான KKR அணியில் ரிங்கு ₹55 லட்சம், ஆஸி., வீரர் மிட்செல் ஸ்டார்க் ₹24.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். இது குறித்து அவரிடம் கேட்டபோது, ₹55 லட்சமே தனக்கு மிகப்பெரிய பணம் என்றார். மேலும், ஒரு காலத்தில் ₹10-₹15 கிடைத்தாலே அது எனக்கு பெரிய விஷயம் தான் எனவும், தனது பழைய நியாபகங்களை அவர் நினைவு கூர்ந்தார்.
PRAVAAH இணையதளம், RBI Retail Direct மொபைல் செயலி மற்றும் ஃபின்டெக் ரிபோசிட்டரி ஆகிய வசதிகளை RBI அறிமுகம் செய்துள்ளது. PRAVAAH தளத்தின் மூலம் தனிநபர் அல்லது நிறுவனங்கள் பல்வேறு ஒப்புதல்களுக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க முடியும். Retail Direct செயலி மூலம் முதலீட்டாளர்கள் அரசு கடன் பத்திரங்களில் நேரடியாக முதலீடு செய்யலாம். ஃபின்டெக் துறையின் பல்வேறு தகவல்களை ஃபின்டெக் தரவு தளத்தில் பெறலாம்.
குமரியில் பிரதமர் மோடி 2 நாள் தியானம் செய்யும் நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கக் கூடாது என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணிநேர அமைதிக் காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகங்கள் வாயிலாக, மோடி மறைமுகப் பிரசாரம் செய்ய முயற்சிக்கிறார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், அனுமதி வழங்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
தமிழக கல்லூரிகளின் பாடத் திட்டம் திராவிட இயக்க கதைகளால் நிரம்பியுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஊட்டியில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மாநாட்டில் பேசிய அவர், பிஏ உள்ளிட்ட கல்லூரி பாடத்திட்டத்தில் சுதந்திரப் போராட்டம் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதனால், தமிழர்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து பிரித்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
GPAY, Phonepe-க்கு போட்டியாக UPI சேவையில், அதானி நிறுவனம் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் UPI பேமெண்ட் முறை அதிகரித்துள்ளது. குறிப்பாக, GPAY, Phonepe அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், UPI சேவையில் களமிறங்க முடிவு செய்துள்ள அதானி நிறுவனம், அது தொடர்பாக வங்கிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக, அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.