News May 29, 2024

கோமாவில் உள்ள கணவரின் சொத்தை மனைவி விற்கலாம்

image

கோமாவில் உள்ள கணவரின் சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கணவரின் சொத்துக்களை கையாளும் வகையில் தன்னை பாதுகாவலராக நியமிக்க வேண்டும் என சசிகலா என்பவர் வழக்குத் தொடுத்தார். இதை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன், பாலாஜி அடங்கிய அமர்வு, கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை சுட்டிக்காட்டி, கணவரின் சொத்துக்களை கையாள மனைவிக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது.

News May 29, 2024

சிரஞ்சீவி பட ஷூட்டிங்கில் அஜித்

image

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் சிரஞ்சீவியின் ‘விஷ்வம்பாரா’ படப்பிடிப்பும் அதே இடத்தில் நடந்து வந்த நிலையில், அஜித் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அஜித் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நாளையுடன் நிறைவடைகிறது.

News May 29, 2024

பாகிஸ்தானை விட 2 மடங்கு அதிக நிதி வைத்துள்ள LIC

image

ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC-யின் பங்கு மதிப்பு, தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. தற்போதைய அதன் சந்தை மதிப்பு ₹51.21 லட்சம் கோடியைக் கடந்துள்ளது. இது கடந்த 2023ம் ஆண்டில் ₹43.97 லட்சம் கோடியாக இருந்தது. இந்த மதிப்பு ஒரே ஆண்டில் சுமார் ₹10 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுகையில், இது 2 மடங்கு அதிகம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

News May 29, 2024

முன்ஜாமின் கோரி பிரஜ்வால் மனு

image

பாலியல் புகாரில் சிக்கிய கா்நாடக எம்.பி பிரஜ்வால் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள அவர், நாளை பெங்களூரு வரவுள்ள நிலையில், அவரை விமான நிலையத்தில் கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்படுவதை தவிர்க்க, எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் பிரஜ்வால் முறையிட்டுள்ளார்.

News May 29, 2024

தமிழக வீரர்கள் பயிற்சிக்கு 81 வெளிநாட்டு பயிற்சியாளர்கள்

image

ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுகளில் பதக்கம் வெல்ல ஏதுவாக, தமிழக விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க 81 வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. திமுக ஆட்சியில் விளையாட்டுத் துறையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது. அதில், சென்னையில் உலகத் தரத்தில் விளையாட்டு நகரை அமைக்கும் பூர்வாங்க பணி தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

News May 29, 2024

அடுத்தடுத்து 4 பேர் வெட்டிக்கொலை

image

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக கொலை குற்றங்கள் அதிகரித்துள்ளதால், சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தையே உலுக்கிய தீபக் ராஜா படுகொலை சம்பவம் அடங்குவதற்குள், தலைநகர் சென்னையில் நேற்று நள்ளிரவு அடுத்தடுத்து 4 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் கையில் இருக்கும் காவல்துறை என்ன செய்துக்கொண்டு இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

News May 29, 2024

ராமரின் பக்தர்களுக்கும், துரோகிகளுக்குமான தேர்தல்

image

டெல்லியை மீண்டும் ஆட்சி செய்ய போவது ராம பக்தர் தான் என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். ராமர் கோயில் இந்தியாவின் அடையாளம் என்ற அவர், இந்த தேர்தல் ராம பக்தர்களுக்கும், ராம துரோகிகளுக்கும் இடையே நடக்கும் தேர்தல் எனக் கூறினார். ராமர் கோயில் கட்டப்பட்டிருக்க கூடாது என்றும், அது சரியான முறையில் கட்டப்படவில்லை எனவும் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் கூறுவதாகவும் விமர்சித்தார்.

News May 29, 2024

ஆடியோ லேபிள் இருந்தால் இளையராஜா உரிமை கோரலாம்

image

‘குணா’ படத்தின் இசைக்கான ஆடியோ லேபிள் இளையராஜாவிடம் இருந்தால், அவர் தாராளமாக உரிமை கோரலாம் என நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இசைக்கான ஆடியோ லேபிள் இளையராஜாவிடம் இல்லை என்றால், படத்தின் தயாரிப்பாளருக்கு தான் அதன் உரிமை உள்ளது என்றும், இருந்தாலும், ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படக்குழுவினர் மரியாதை நிமித்தமாக இளையராஜாவிடம் அனுமதி கேட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

News May 29, 2024

இங்கிலாந்து, பிரிட்டன் என்ன வித்தியாசம்?

image

இங்கிலாந்து, பிரிட்டன் தனித்தனி நாடுகளா? ஒரே நாடா? என்ற குழப்பம் உண்டு. அதை தெளிவுபடுத்தி கொள்வோம். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகியவையே யுனைடெட் கிங்டம் ஆப் பிரிட்டன் என அழைக்கப்படுகிறது. 4 பகுதிகளுக்கும் சுயாட்சி அளிக்கப்பட்டுள்ளது. தனி நாடு உரிமை அளிக்கப்படவில்லை. இதனால் வெளிநாடுகளுடன் நேரடி தொடர்பு வைக்க முடியாது. கூட்டாட்சி அரசே வெளிநாடுகளுடன் பேசும்.

News May 29, 2024

மதவெறி பிடித்த பாஜக மிகவும் ஆபத்தானது: ஜெயக்குமார்

image

மதவெறி கொண்ட யானையை விட மதவெறி பிடித்த பாஜக மிகவும் ஆபத்தானது என்று ராமர் கோயில், பாபர் மசூதி விவகாரத்தில் ஜெ., பேசிய உரையை வெளியிட்டு ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். ஒற்றுமையும், ஒருமைப்பாடும் மிக்க தேசத்தை துண்டாட நினைப்பதை பாஜக விட்டுவிட வேண்டும் என்றும் மக்கள் பிரச்னைகளை பேசுவதே நாட்டின் நலம் என்பதை எத்தனை ஜென்மங்கள் கழித்து பாஜக உணரப் போகிறதோ எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!