India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏப்ரல்19ஆம் தேதி மக்களவைத் தேர்தலையொட்டி இன்று இரவு வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும். நாளை முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு ஏப்.19 வரை விடுமுறை தான். தேர்தல் முடிந்த மறுநாள் ஏப்.20ஆம் தேதி மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும். அதன்பின், ஏப்.21 மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அன்றும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதாவது இன்று இரவு முதல் ஏப்.21-க்கு இடையில் ஒருநாள் மட்டுமே டாஸ்மாக் இயங்கும்.
கடன் கட்டணங்கள் உள்ளடக்கிய விரிவான அறிக்கையை வாடிக்கையாளர்களுக்கு அக்.1 முதல் அளிக்க வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் RBI உத்தரவிட்டுள்ளது. அதில், கடனுக்கு ஒரு ஆண்டு முழுவதும் வசூலிக்கப்படும் கட்டணம், கடன் மீட்பு கொள்கைகள், பிறரிடம் கடனை ஒப்படைப்பது தொடர்பான விவரங்களும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்க RBI இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
தேர்தல் பத்திர ஊழலின் மூளையே மோடிதான் என்று ராகுல் சாடியுள்ளார். தேர்தல் பத்திரத்தை முடக்கினால், அனைவரும் வருந்துவர் என மோடி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடியாக, உலகத்திலேயே மிகப்பெரிய பணப்பறிப்பு இதுதான்,. சிபிஐ வழக்குப்பதிந்த அடுத்த நாளில், பாஜகவுக்கு தேர்தல் பத்திர நிதி வந்தது குறித்தும், அதன்பிறகு சிபிஐ வழக்கை முடித்தது குறித்தும் மோடி பதிலளிக்க வேண்டுமென ராகுல் வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூருவுக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், ஹைதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட்டிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், 9 Four, 8 Six என விளாசி அசத்தினார். 41 பந்துகளில் 102 ரன்கள் குவித்த அவர், தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். இதனால் அணியின் ஸ்கோர் 287 ஆக உயர்ந்தது. மேலும், ஹைதராபாத் அணிக்காக அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
கூட்டணியில் இருந்துகொண்டே எந்த கட்சியையும் பாஜக விமர்சிக்காது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதிமுகவை ஊழல் கட்சி என தற்போது விமர்சிப்பது போல் கடந்த தேர்தலில் விமர்சிக்கவில்லை. இதற்கு கூட்டணி தர்மமே காரணம். கூட்டணியில் இருந்துகொண்டு அவர்களை விமர்சிப்பது என்பது பாஜகவுக்கு வழக்கமில்லை என்ற அவர், வைகோ திமுகவை பற்றி பேசியதை எல்லாம் இப்போது பேச முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
அரசியலில் நம்பியவர்களே நம்மை காயப்படுத்துவது அதிகப்படியான வலியை கொடுக்கும் என கனிமொழி தெரிவித்துள்ளார். எமர்ஜென்சி காலத்தில் எங்களிடம் பேச கூட யாரும் தயாராக இல்லை. பேசியவர்களையும் கைது செய்தார்கள். அந்த காலகட்டம் மிகவும் வலியை கொடுத்தது. அரசியலில் வலிகளையும், வேதனைகளையும் தாண்டி தான் பயணிக்க வேண்டும் என்று கூறிய அவர், அந்த வலிகள் தான் அநீதிக்கு எதிராக நம்மை போராட தூண்டும் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் சர்க்கரை நோய்க்கு, ஆண்களை விட பெண்களே அதிகம் உயிரிழந்திருப்பது பொது சுகாதார இயக்குநரக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2015இல் பலியான ஆண்களின் சராசரி விகிதம் 3.4%ஆகவும், பெண்களின் விகிதம் 5%ஆகவும், 2021இல் ஆண்களின் விகிதம் 4%ஆகவும், பெண்களின் விகிதம் 4.3%ஆகவும் இருப்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. சுகாதார விழிப்புணர்வு, பெண்களுக்கு குறைவாக இருப்பதே காரணமாக கூறப்படுகிறது.
‘G.O.A.T’ படத்தில், நடிகர் விஜயகாந்த் நடித்துள்ளதாக அவரது மனைவி பிரேமலதா கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், AI தொழில்நுட்பம் மூலம் கேப்டனை படத்தில் நடிக்க வைக்க விரும்புவதாக வெங்கட் பிரபு என்னிடம் கூறினார். தேர்தலுக்கு பிறகு, விஜய்யும் இதுகுறித்து பேச வேண்டுமென தெரிவித்திருந்தார். கேப்டன் இருந்திருந்தால் இதற்கு சம்மதித்து இருப்பார். அதனால் நானும் ஒப்புக்கொண்டேன் எனத் தெரிவித்தார்.
நாட்டின் அனைத்து துன்பம், துயரங்களுக்கு காங்., பாஜக கட்சிகள்தான் காரணம் என சீமான் விமர்சித்துள்ளார். நாட்டின் முறையற்ற நிர்வாகம், ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு இக்கட்சிகள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆட்சியை கலைத்துவிடுவார்கள் என்று தமிழகத்தில் உள்ளவர்கள் (திமுக, அதிமுக) இதை தட்டிக்கேட்கவில்லை என விமர்சித்த அவர், கொசுவை ஒழிக்க முடியாத இவர்கள், எப்படி ஊழல், லஞ்சத்தை ஒழிப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.
பாஜக தலைவர் அண்ணாமலை கன்னட மொழியில் பேசி வாக்கு சேகரித்தார். கோவை தொகுதியில் போட்டியிடும் அவர், சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்போது கன்னடம் பேசும் மக்கள் வசிக்கும் பகுதியில் பரப்புரை செய்த அவர், தமிழில் பேசுவதை நிறுத்திவிட்டு கன்னட மொழியில் பரப்புரையை தொடர்ந்தார். அண்ணாமலை ஏற்கெனவே சில இடங்களில் இந்தியில் பேசி வாக்கு சேகரித்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.