India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை அனுமதிக்க கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். தியான நிகழ்ச்சி தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது என்ற அவர், வாக்கு அரசியல் செய்வதற்காகவே பிரமதர் மோடி குமரியில் தியானம் செய்ய இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். விவேகானந்தர் மண்டபத்தில் மோடி, மே31 முதல் 2 நாள்களுக்கு இரவும் பகலாக தியானம் மேற்கொள்ள உள்ளார்.
தென் கொரியா எல்லைக்குள் வட கொரியா 260க்கும் மேற்பட்ட ராட்சத பலூன்களை அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குப்பைகள், கழிவுகள் உள்ளிட்ட சில பொருட்களை போடுவதற்காக அந்த ராட்சத பலூன்கள் அனுப்பப்பட்டதாகவும், அதில் இருந்த பொருட்களை ராணுவ வெடிமருந்து பிரிவினர் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பாக இருக்கும்படி அந்நாட்டு மக்களுக்கு தென் கொரியா அறிவுறுத்தியுள்ளது.
வாக்கு எண்ணிக்கையின் போது திமுகவினர் தில்லுமுல்லு நடத்துகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும் என கட்சி முகவர்களுக்கு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். வாக்குகளை களவாடி புறவாசல் வழியாகவே திமுக ஆட்சிக் கட்டிலில் ஏறியுள்ளதாக விமர்சித்த அவர், வாக்கு எண்ணிக்கையின் போது திமுகவின் மடை மாற்றும் முயற்சியை தடுக்க வேண்டும் என்றார். அதிமுகவுக்கு மக்கள் வெற்றியை வழங்குவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பருவநிலை மாற்றத்தால் ஆண்டுதோறும் இந்தியாவில் வெயில் அதிகரிக்கிறது. குறிப்பாக, டெல்லியில் இன்று வரலாறு காணாத வகையில், 52.3 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. வெயில் காலங்களில் நாட்டில் மின் தேவை அதிகரிப்பதோடு, குடிநீர் பற்றாக்குறைக்கும் வழி வகுக்கிறது. 2015 – 2022 காலக்கட்டத்தில் 3,812 பேர் வெப்ப அலையால் உயிரிழந்திருப்பதாக கூறும் உலக சுகாதார அமைப்பு, இது கவனிக்கத்தக்க பிரச்னையாக கருதுகிறது.
மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், இதுவரை 6 கட்டத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளன. 7ம் கட்டமாக 57 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி நடக்க உள்ள நிலையில், அங்கு நாளையுடன் தேர்தல் பரப்புரை முடிவுக்கு வரவுள்ளது. தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் இருக்கும் வெளியூர், வெளிமாநிலங்களைச் சோ்ந்தவர்கள் நாளை 5 மணிக்கு மேல் இருக்கக்கூடாது.
உலகம் அழியும் வரை, உங்களை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது என நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ளார். உங்களை மக்கள் எவ்வாறு நினைவு கூர நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மிக மிகச் சிறந்த மனிதர்களே நினைவு கூரப்படுவதாகவும், இருக்கும் ஆயிரம் நடிகர்களில் தானும் ஒருவன் என்பதால், மறைவுக்குப் பின் ஓராண்டுக்கு மேல் மக்களின் நினைவில் இருப்பேனா எனத் தெரியாது என்றார்.
காந்தி தொடர்பான மோடியின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். காந்தி படம் வெளியான பின்புதான் அப்படிப்பட்ட மனிதர் இருந்துள்ளார் என்று உலகில் பலருக்கு தெரிந்தது என பேட்டி ஒன்றில் மோடி கூறியிருந்தார். காந்தி படம் 1982இல் வெளியானது என்றும், 1930ஆம் ஆண்டிலேயே தண்டி யாத்திரை மூலம் காந்தி உலகறிந்த தலைவராக திகழ்ந்தார் என காங்கிரஸார் மோடிக்கு பதிலடி தந்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகர மக்கள், மன்ஹாட்டன்ஹெஞ்ச் என்ற இயற்கையின் பிரம்மிக்கத்தக்க அழகை ஆண்டுக்கு இருமுறை கண்டு களிக்கின்றனர். அதாவது, மன்ஹாட்டன் கட்டட அமைப்புகளுக்கு இடையே சூரியன் அஸ்தமனமாவது போன்ற தோற்றம், அவர்களை பிரம்மிக்க வைக்கிறது. ஆண்டுதோறும் மே 28, ஜூலை 13ஆம் தேதிகளில் தோன்றும் இந்த நிகழ்வு, நேற்றும் அரங்கேறி தெருக்களை ரம்மியமான சூரிய கதிர்களால் நிரப்பியது.
அரசு, தனியார் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் ஆதார் எண் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டிலேயே மாணவர்கள் பயிலும் பள்ளியில் ஆதார் பதிவு தொடங்கப்படும் என்றும், பள்ளி தொடக்க நாளான ஜூன் 6ம் தேதி அனைத்து வட்டாரங்களிலும் முழுவீச்சில் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.
காந்தி குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு ராகுல் கிண்டலாக பதிலளித்துள்ளார். காந்தி பற்றி அறிந்து கொள்ள ‘முழு அரசியல் அறிவியல்’ படித்த மாணவர் மட்டுமே அந்த படத்தை பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, காந்தி திரைப்படம் வெளியாகுவதற்கு முன்பு காந்தியை உலகில் யாருக்குமே தெரியாது என பேட்டி ஒன்றில் மோடி கூறியிருந்தார். மோடியின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
Sorry, no posts matched your criteria.