India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒடிஷாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜகவுக்கு எதிராக செயல்படும் தன்மீது கிரிமினல் வழக்கு, அவதூறு வழக்கு உள்பட 24 வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறினார். எம்பி பதவி பறிக்கப்பட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதாகவும், ED 50 மணி நேரம் விசாரித்ததாகவும் கூறிய அவர், நவீன் பட்நாயக், உண்மையில் பாஜகவை எதிர்த்தால் அவர் மீது ஏன் வழக்கு பதிவாகவில்லை என கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் உள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332 பள்ளிகளில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மீதமுள்ள 17,221 அரசுப் பள்ளிகளில் ஜூன் மாத 2 வாரத்திற்குள் இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளி மாணவர்கள் கற்றல் செயல்பாட்டில் புதுமையான அனுபங்களோடு கல்விக் கற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் எம்.பி.க்களில் 324 பேரின் சொத்துகள் கடந்த 5 ஆண்டுகளில் 43% அதிகரித்துள்ளதாக ஏ.டி.ஆர். தெரிவித்துள்ளது. அதன் ஆய்வு அறிக்கையில், “2019இல் ₹21.55 கோடியாக இந்த எம்.பி.,க்களின் சொத்து மதிப்பு தற்போது ₹30.88 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் பாஜக (183) மட்டுமல்ல காங்கிரஸ் (36), திமுக, சமாஜ்வாடி, விசிக எம்.பி.க்களும் அடங்குவர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரபல தனியார் யூடியூப் சேனலில் தொகுப்பாளராகப்
பணியாற்றிய குறுகிய காலத்தில் இளைஞர்களிடையே பிரபலமானவர் VJ பார்வதி. 29 வயதாகும் பார்வதிக்கு அவரது தாயார் மிகத் தீவிரமாக மாப்பிள்ளை தேடத் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக திருமணத் தகவல் மையத்தில் அவரது பெயரைப் பதிவு செய்துள்ளாராம். இந்த வருடம் நிச்சயம் அவரிடம் கல்யாணச் சாப்பாட்டை எதிர்பார்க்கலாம் என அவரது நண்பர்கள் கூறுகிறார்கள்.
மூன்று நாள்கள் பயணமாக கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என தேசிய பாஜக தலைமை அறிவித்துள்ளது. பிரதமரின் தனிப்பட்ட தியான நிகழ்வை அரசியல் கட்சி நிகழ்வாக மாற்றக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை ஆகியோருக்காக, விடுதியில் அறைகள் புக் செய்யப்பட்டிருந்த நிலையில், அவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
நமது நாடு சர்வதேச அளவில் இந்தியா என்ற பொதுவான பெயரிலேயே அழைக்கப்படுகிறது. ஹிந்தி மற்றும் பிற மொழி பாடங்களில் மட்டும் பாரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு INDIA என பெயர் வைத்தபோது, மோடி உள்ளிட்டோர் நாட்டை பாரத் எனக் குறிப்பிட்டனர். அப்போது நாட்டின் பெயர் “இந்தியா”வா அல்லது “பாரத்”தா என சர்ச்சை எழுந்து ஓய்ந்தது குறிப்பிடத்தக்கது.
1947இல் நாடு சுதந்திரம் அடைந்தபிறகு, நாட்டிற்கு அதிகாரப்பூர்வமாக வைக்க வேண்டிய பெயர் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில், இந்தியாவில் உள்ள பலமொழிகள், வேற்றுமையில் ஒற்றுமைக்கு முக்கியத்துவம் அளித்து, பாரத், இந்தியா என 2 பெயர்கள் வைப்பதென தீர்மானிக்கப்பட்டது. அரசியலமைப்பு சட்டத்தின் முதலாவது பிரிவில், “இந்தியா, அதுவே பாரத், மாநிலங்களைக் கொண்ட ஐக்கியம்” எனக் கூறப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு நமது நாடு பல பகுதிகளாக பிரிந்து, தனித்தனி ஆட்சியாளர்களால் ஆளப்பட்டு வந்தன. அவற்றை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி கைப்பற்றி ஒரே நிர்வாகத்தின்கீழ் கொண்டு வந்தது. இதுபோல கடந்த 1757 – 1947 வரை நாட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். அப்போது சிந்து நதிக்கரையோரம் உள்ள பிரதேசத்துக்கு பிரிட்டிஷ் இந்தியா என பெயரிட்டு ஆங்கிலேயர்கள் அழைத்து வந்தார்கள்.
AI மூலம் ஒருவரின் குரலை அவருக்கு தெரியாமல் மாதிரி எடுத்து, அவருடன் தொடர்புடையவரிடம் மர்ம நபர்கள் பேசி நிதிமோசடி, குற்றங்களில் ஈடுபடுகின்றனர். இதைத் தடுக்க AI Call Scanner வசதியை முதல்முறையாக அமெரிக்காவில் கட்டண வாடிக்கையாளர்களுக்கு மட்டும் Truecaller அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியானது, செல்போனுக்கு வரும் அழைப்பை கிரகித்து, அது உண்மையான குரலா இல்லை AI குரலா எனத் திரையில் காண்பிக்கும்.
‘ALL EYES ON RAFAH’ என்று பாலிவுட் பிரபலங்கள், எழுத்தாளர்கள் பலர் பதிவிட்டு வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் தெவாடியா பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ‘ALL EYES HINDUS IN PAKISTAN’ என குறிப்பிட்டு பாகிஸ்தானில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அவரது பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sorry, no posts matched your criteria.