News May 31, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மே 31) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

News May 31, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

* செல்போனில் பேசியபடி கார் ஓட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட டிடிஎப் வாசன் ஜாமீனில் விடுதலை.
* விழுப்புரம் வானூர் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவம் உடல்நலக்குறைவால் காலமானார்.
* வெயில் காரணமாக புதுச்சேரியில் ஜூன் 6க்கு பதிலாக ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.
* வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லை – ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் * மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது.

News May 31, 2024

கண்களை பாதுகாக்க சில டிப்ஸ்…

image

*தினமும் 8 மணி நேரம் தூங்கி கண்களுக்கு ஓய்வளிக்க வேண்டும். *அதிக நேரம் டிவி, கணினி மற்றும் ஸ்மார்ட்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். *குறைவான வெளிச்சத்தில் புத்தகங்களை படிக்க கூடாது. *பழங்கள், காய்கறிகள், கீரை, மீன், முட்டை போன்ற வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். *ஆண்டுக்கு ஒருமுறை கண்களை பரிசோதிக்க வேண்டும். *அவ்வப்போது கண்களை மூடி, விரல் நுனியால் மெதுவாக அழுத்தி விடலாம்.

News May 31, 2024

குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் நயன்

image

விடுமுறைக்காக தாய்லாந்து சென்றுள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி பல்வேறு போஸ்களில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று அவர்கள் ஜோடியாக வெளியிட்ட புகைப்படங்கள் வைரலான நிலையில், புகைப்படங்களில் குழந்தைகளை காண முடியவில்லையே என பலர் கமெண்ட் செய்திருந்தனர். இந்நிலையில், குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

News May 31, 2024

வெயிலால் தீ விபத்துகள் அதிகரிப்பு

image

வட இந்தியாவில் அதிகப்படியான வெயில் பதிவாகி வரும் சூழலில், தீ விபத்துகளும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, டெல்லியில் நேற்று 52.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில், தீயணைப்புத்துறைக்கு ஒரே நாளில் 220 அழைப்புகள் வந்துள்ளன. இதில், 183 அழைப்புகள் தீ விபத்து தொடர்பான அழைப்புகள் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை தீ விபத்து தொடர்பாக 8,912 அழைப்புகள் வந்துள்ளது.

News May 30, 2024

12 ராசிகளுக்கான பலன்கள்

image

*மேஷம் – அமைதி தேவை * ரிஷபம் – ஆர்வம் மேலோங்கும் *மிதுனம் – சுப பலன்கள் உண்டாகும் *கடகம் – கோபத்தை குறைக்கவும் *சிம்மம் – முயற்சிக்கு ஏற்ற பலன், *கன்னி – பிறர் மீது பரிவு உண்டாகும் *துலாம் – பாராட்டு கிடைக்கும் *விருச்சிகம் – சிக்கலான நாள் *தனுசு – புதிய முயற்சி கை கொடுக்கும் *மகரம் – பொறுமை அவசியம் *கும்பம் – சோர்வு அதிகரிக்கும் *மீனம் – புகழ்ச்சி ஏற்படும்

News May 30, 2024

நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு நான்கு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நள்ளிரவு 1 மணி வரை விழுப்புரம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், குமரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News May 30, 2024

‘குட் பேட் அக்லி’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு?

image

அஜித் நடித்து வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்படப்பிடிப்பில் முக்கிய சண்டைக் காட்சி படமாக்கப் பட்டுள்ளதாகவும், கதாநாயகியாக நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஸ்ரீலீலா உள்ளிட்டோரிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற உள்ளதாக தெரிகிறது.

News May 30, 2024

ஜூன் 4ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

image

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதி அன்று அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கடைகளை ஒட்டியுள்ள பார்கள் என அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். இதை மீறி கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

News May 30, 2024

தலைமை பதவிகளுக்கு போராடும் பெண்கள்

image

தலைமைப் பொறுப்புகளில் பெண்களை பணியமர்த்துவது இந்தியாவில் அதிகரித்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 2016ஆம் ஆண்டு 18.8% ஆக இருந்த பெண்களின் பங்களிப்பு, தற்போது 23.2% ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம், வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்த அளவிற்கு, தலைமை பொறுப்பேற்கும் பெண்களின் எண்ணிக்கை உயரவில்லை. தலைமை பொறுப்புகளை பெற பெண்கள் பல சவால்களை எதிர்கொள்வதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!