India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
‘டைம்’ இதழ் வெளியிட்ட 2024ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்குமிக்க பிரபலங்கள் பட்டியலில் பாலிவுட் நடிகை ஆலியா பட் இடம்பிடித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘டைம்’ இதழ் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மிகவும் செல்வாக்குமிக்க 100 பேர் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்தாண்டிற்கான கலைஞர் பிரபலங்கள் பட்டியலில், ஆலியா பட் & பாலிவுட் இயக்குநர் தேவ் பட்டேல் ஆகிய இருவர் இடம்பெற்றுள்ளனர்.
குடியுரிமை திருத்த மசோதா குறித்து காங்., எம்.பி. ராகுல் காந்தி ஏன் கருத்து சொல்லவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார். பாலக்காட்டில் பிரசாரம் செய்த அவர், “பாரத் ஜோடோ யாத்திரையின் போது தேசிய அரசியல், சர்வதேச அரசியல் பற்றி ராகுல் பேசினார். ஆனால் மத்திய அரசு அமல்படுத்திய சிஏஏ குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கடைசிவரை வாய் திறக்கவில்லை” எனக் கூறினார்.
இன்று (ஏப்ரல் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
*மோடியின் வாக்குறுதிகளை நம்பி கேரள மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – பினராயி விஜயன்
*18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வாக்களிக்க வேண்டும் – ஜக்கி வாசுதேவ்
*செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டது.
*வெப்ப அலை காரணமாக மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றப்பட்டார்.
*GT அணிக்கு எதிரான 32ஆவது லீக் போட்டியில் DC அணி அபார வென்றது.
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நாளன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென அனைத்து நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஃபிளிப்கார்ட் மற்றும் பிக்பாஸ்கெட் ஆகிய நிறுவனங்கள் டெலிவரி ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆனால், தகுதியான ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்போம் என அந்நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன.
தவிடு நீக்கப்பட்ட கோதுமையை மிருதுவாக அரைத்தால் கிடைப்பதுதான் மைதா. அதே தவிடு நீக்கிய கோதுமையை சாதாரணமாக அரைத்தால் கிடைப்பது ரவை. இரண்டிற்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால், மைதா மீதான பயம் ரவை மீது இருப்பதில்லை. மைதா குறித்து பரவும் சில தவறான தகவல்களே இதற்கு காரணம். மைதாவை அதிகம் உட்கொண்டால் ஆரோக்கியத்திற்கு நல்லதல்லதான். ஆனால், மைதா மீதான அதீத பயம் தேவையில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.
“இசை மும்மூர்த்திகளான முத்துஸ்வாமி தீக்ஷிதர், தியாகராஜர் & சியாமா சாஸ்திரிகளை அனைவருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம். ஆனால், இளையராஜா அப்படி சொல்வதை ஏற்க முடியாது” என்று உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கருத்து தெரிவித்துள்ளார். “காப்புரிமை தொடர்பான விவகாரத்தில் மட்டுமே இளையராஜா அப்படி கூறினார். ஆனால், அவர் தன்னை அப்படி நினைத்துக் கொள்பவர் அல்ல” என்று வழக்கறிஞர் இன்று வாதம் செய்தார்.
சூரியன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் இணையும் போது, சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகும். ராம நவமியன்று மேஷ ராசியில் இந்த 3 கிரகங்களும் சஞ்சரித்துள்ளதால் கடகம், சிம்மம், கன்னி, மகர ராசியினருக்கு ராஜயோகம் காத்திருக்கிறது. வேலைக்கு செல்வோர் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு தேடி வரும். வீடு, மனை வாங்கும் யோகம், பொன், பொருள் சேர்க்கை என மேற்கண்ட ராசியினர் ராஜ வாழ்க்கை வாழப் போகின்றனர்.
வாக்களிக்க யாராவது பணம் தந்தால் தயவு செய்து வாங்கி விடாதீர்கள். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 123(1)இன் கீழ் வாக்களிக்கப் பணம் பெறுவது லஞ்சம் பெறுவதற்கு இணையான குற்றமாகும். இப்படி பணம் பெறுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 171(b)இன் படி வழக்குப்பதிவு செய்து ஒரு வருடம் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கலாம். அதனால், பணம் வாங்காமல் ஜனநாயக கடமை ஆற்றுவதே நமக்கும், நாட்டுக்கும் நல்லது.
ஒருவர் படுக்கைக்குச் சென்ற 15 நிமிடங்களில் தூங்க வேண்டும் என்பதுதான் இயற்கையான தூக்க முறை. ஆனால், அரை மணி நேரம் ஆகியும் தூக்கம் வராமல் சிரமப்படுகிறீர்கள் என்றால், தூக்கமின்மை நோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். இது உடல் பிரச்னையா? அல்லது மனநலம் சார்ந்த பிரச்னையா? என்பதை கண்டறிய வேண்டும். பிறகு மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம். தூக்கமின்மை பிரச்னை குறித்து பயப்பட அவசியமில்லை.
Sorry, no posts matched your criteria.