News May 31, 2024

நீட் தேர்வு விடைத்தாள் நகல் விடைக்குறிப்பு வெளியீடு

image

நீட் தேர்வுக்கான விடைத்தாள் நகல்கள் மற்றும் விடைக்குறிப்புகளை தேசியத் தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. மே5ம் தேதி நடந்த இத்தேர்வை நாடு முழுவதும் 24 லட்சம் பேர் எழுதினர். இந்நிலையில், தேர்வுக்கான விடைக்குறிப்புகள், மாணவர்களின் விடைத்தாள் நகல்கள், அதற்கு வழங்கப்பட்ட மதிப்பெண்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. விடைகளுக்கான மதிப்பீட்டில் ஆட்சேபனை இருந்தால், நாளை இரவு 11.50 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News May 31, 2024

சரிவில் இருந்து மீண்ட வீரன் ரிஷப் பண்ட்

image

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் 17 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தேசிய அணிக்காக விளையாடவுள்ளார். சாலை விபத்தில் சிக்கி, ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் மருத்துவ ஓய்வில் இருந்த அவர், ஐபிஎல் மூலம் மறுபிரவேசம் செய்தார். அதில் அபாரமாக ஆடியதால் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கும் தேர்வானார். அவரை சரிவில் இருந்து மீண்ட ஆடுகள வீரனாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

News May 31, 2024

‘டிரம்ப் குற்றவாளி’ நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு

image

நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு முறைகேடாக பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என்று நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2016 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னர் தனது அந்தரங்க ரகசியங்களை மறைக்க நடிகைக்கு சுமார் ரூ.110 கோடி அளித்திருந்தார். இந்தப் பணப் பரிமாற்றத்தை மறைக்க நிறுவனக் கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News May 31, 2024

சூரிய உதயத்தை ரசித்த பிரதமர் மோடி

image

விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து சூரிய உதயத்தை பிரதமர் மோடி ரசித்து பார்த்தார். 3 நாள்கள் பயணமாக நேற்று மாலை குமரி வந்துள்ள அவர், தனது 45 மணி நேர தியானத்தை நேற்று மாலை தொடங்கினார். இதற்காக விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்ற அவர், இரவு 7 முதல் 7.30 வரை தியானத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அறைக்கு திரும்பிய அவர், இன்று காலை முதல் மீண்டும் தியானத்தைத் தொடங்குகிறார்.

News May 31, 2024

ராகுல் அரசியலில் இருந்தே காணாமல் போவார்: எல்.முருகன்

image

மக்களவைத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பாஜக சரித்திர மாற்றத்தை ஏற்படுத்தப் போவதை உறுதிசெய்யும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நமபிக்கை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மீது தமிழர்கள் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் எனக் கூறிய அவர், ஜூன் 4இல் வெளியாகும் முடிவுகள் அதனை வெளிப்படுத்தும் என்றார். அத்துடன், ராகுல் அரசியலில் இருந்தே காணாமல் போகிற நாளாக அது இருக்கும் எனத் தெரிவித்தார்.

News May 31, 2024

நாளை நமக்கும் இந்த நிலை வரலாம்

image

வட மாநிலங்களில் நிலவி வரும் வெப்ப அலை காரணமாக பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் தண்ணீருக்காக மக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராடி வருகின்றனர். அங்கு, லாரி ஒன்றில் இருந்து 20க்கும் மேற்பட்ட பைப்புகள் மூலம், நீண்ட வரிசையில் நின்று மக்கள் தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர். தண்ணீரை சிக்கனமாக சேமிக்காவிட்டால் நாளை நமக்கும் இந்த நிலை வரலாம் என்பதை இப்படம் உணர்த்துகிறது.

News May 31, 2024

சென்னையில் மீண்டும் நாய்க்கடி

image

சென்னை அண்ணா நகரில் இரண்டரை வயது குழந்தையை நாய் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெருவில் விளையாடிக் கொண்டிருந்த யாஸ்மிகாவை நாய்கள் கடித்ததில் அவரது கன்னம் கிழிந்து தொங்கியது. இதனால், குழந்தைக்கு உடனடியாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் குழந்தைகளை நாய்கள் கடிப்பது தொடர் கதையாகி வருகிறது. நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

News May 31, 2024

சென்னை ஏன் அனலில் தகிக்கிறது?

image

தென்மேற்கு பருவமழை தொடங்கும்போது, மேற்கு திசை நோக்கி காற்று வலுவாக இருக்கும். இதனால் ஈரப்பதம் கடலை நோக்கி ஈர்க்கப்படும். எனவே ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்குவதற்கு முந்தைய வாரங்களில் கடலோரப் பகுதிகளில் வெப்பம் அதிகமாக காணப்படும். அதே போல, மேற்கில் இருந்து வரும் காற்று வலுவாக இருப்பதால், கடல் காற்று நிலப் பகுதிகளுக்குள் வருவது கிடையாது. இதன் காரணமாகவே கடலோர மாவட்டமான சென்னையில் அனல் வீசுகிறது.

News May 31, 2024

நாளை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

image

நாடு முழுவதும் இரண்டரை மாதங்களாக அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்றோடு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து நாளை இறுதிக்கட்ட (7ஆவது) வாக்குபதிவு நடைபெறவுள்ளது. 543 மக்களவைத் தொகுதிகளில் ஏற்கெனவே 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்துவிட்ட நிலையில் நாளை 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

News May 31, 2024

கடன் தொல்லை தீர்க்கும் செந்நெறியப்பர்!

image

தீராத கடன் பிரச்னையில் சிக்கி அல்லல்படுவோர் செந்நெறியப்பரை வழிப்பட்டால் நிம்மதியை அடையலாம் என்று தேவாரப்பாடல் கூறுகிறது. கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை செந்நெறியப்பர் திருக்கோயிலுக்கு திங்கட்கிழமை விரதமிருந்து சென்று, பிந்துசுதா தீர்த்தத்தில் நீராடி, ஈசனுக்கு பால் அபிஷேகம் செய்து, வில்வ மாலை சாற்றி, நெய் தீபமேற்றி, “செந்நெறி யான்கழல்” பதிகம் பாடி வழிபட்டால் கடன் தொல்லை தீரும் என்பது ஐதீகம்.

error: Content is protected !!