India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரிய வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. ரயிலில் ₹4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், நயினார் நாகேந்திரனும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், அவரை தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் நெல்லையை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ₹400 கோடிக்கு மது விற்கப்பட்டதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுவதால், நேற்று இரவு 10 மணி (ஏப்.16) முதல் ஏப்.20 காலை 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில், வழக்கத்தை விட நேற்று 2.5 மடங்கு அதிகம் விற்பனையானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
✍ஒரு மனிதன் கடவுள் என்று அழைப்பதை, இன்னொருவன் இயற்பியல் விதி என்று அழைக்கிறான். ✍அறிவியலானது உண்மையை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இறையியல் கோட்பாடுகளை எதிர்க்கிறது. ✍போர்க்களத்தில் இறப்பதை விட அறியாமைக்கு எதிராக போராடுவது மிகவும் போற்றத்தக்கதாக இருக்கும்.✍இணக்கவாதிகள் நிறைந்த உலகில் சமூக விரோத நடத்தை என்பது புத்திசாலித்தனத்தின் ஒரு பண்பாகும் மதிக்கப்படுகிறது.✍உள்ளுணர்வு என்பது அறிவை மீறிய ஒன்று.
இனி நடக்கும் ஒவ்வொரு போட்டியையும் மிகுந்த கவனத்துடன் விளையாடுவோம் என்று RCB அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ ஃப்ளவர் கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், புள்ளிகள் பட்டியலில் 10ஆவது இடத்தில் நிற்போம் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. இந்த சரிவில் இருந்து மீண்டு வரும் நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது. RCB அணியால் தோல்வியின் விளிம்பிலிருந்து மீண்டு வர முடியும் எனக் கூறினார்.
இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியோடு ஒப்பிடும்போது, வேலைவாய்ப்பின்மை மிக மோசமான அளவில் உயர்ந்துள்ளதாக ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு இல்லாததால், அரசுப் பணிக்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டுமெனக் கூறினார்.
GT-க்கு எதிரான 32ஆவது லீக் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற DC அணி பல சாதனை பட்டியல்களில் இடம்பிடித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:- 1. குறைந்த பட்ச ஸ்கோரில் (89 ரன்கள்) எதிரணியை வீழ்த்திய அணிகளின் வரிசையில் முதலிடம். 2. 17ஆவது சீசனில் பவர் பிளே ஓவரில் அதிக விக்கெட் சாய்த்த அணிகளின் வரிசையில் முதலிடம் (13). 3. குறைந்த ஓவர்களில் 90+ சேஸிங் செய்த அணிகளில் 3ஆவது இடம்.
*மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 180 இடங்கள் கூட கிடைக்காது – சச்சின் பைலட்
*தமிழகத்தில் தபால் வாக்கு செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
*2023-24இல் $9.56 பில்லியன் மின்னணு பொருள்களை தமிழ்நாடு ஏற்றுமதி செய்துள்ளது.
*டைம் இதழின் ‘டாப்-100’ பட்டியலில் சாக்ஷி மாலிக் இடம்பிடித்துள்ளார்.
*இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் – அமெரிக்கா
▶ஏப்ரல் – 18 | ▶ சித்திரை – 05
▶கிழமை: வியாழன் | ▶திதி: தசமி
▶நல்ல நேரம்: காலை 10:30 – 11:30 வரை
▶கெளரி நேரம்: காலை 12:30 – 01:30 வரை, மாலை 06:30 – 07:30 வரை
▶ராகு காலம்: நண்பகல் 01:30 – 03:00 வரை
▶எமகண்டம்: காலை 06:00 – 07:30 வரை
▶குளிகை: காலை 10:30 – 12:00 வரை
▶சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்
▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்
2023-24 ஆம் நிதியாண்டில் $9.56 பில்லியன் டாலர் மதிப்பிலான மின்னணு பொருள்களை தமிழ்நாடு ஏற்றுமதி செய்துள்ளது. மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் தமிழ்நாடு 32.84% பங்களிப்பு செய்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் மின்னணு பொருள்கள் ஏற்றுமதி மதிப்பு $1.86 பில்லியன் டாலராக இருந்தது.
PBKS அணியின் கேப்டன் ஷிகர் தவான் தனது மகனுக்காக வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது இன்ஸ்டா பதிவில், “நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்…” என குறிப்பிட்டு தனது மகனின் பெயர் (ஜோரவர்) பதிந்த ஜெர்சியுடன் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது ஜோரவர், தவானை பிரிந்து அவரது தாயுடன் வாழ்ந்து வருகிறார்.
Sorry, no posts matched your criteria.