India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆந்திரா, தெலங்கானாவில் வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. மக்களவைக்கு 4ஆவது கட்டமாக, 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு மே 13இல் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கும் வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது. மனுத் தாக்கலுக்கு ஏப்.25 கடைசி நாளாகும்.
தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்.19) நடைபெறவுள்ளது. கடந்த சில நாள்களாக வெயில் உச்சத்தில் இருப்பதால், வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று ஜனநாயக கடமையை ஆற்றுங்கள். வெயில் அதிகமாக இருக்கும் நேரத்தில் முதியோர், கர்ப்பிணிகள் வாக்கு செலுத்துவது கடினம். உடல்நலனும் பாதிப்பு ஏற்படலாம். எனவே, முன்கூட்டியே சென்று வாக்கு அளிக்கவும்.
சாதி, மத பாகுபாடு காட்டியிருந்தால், தேர்தலில் தமக்கு வாக்களிக்க தேவையில்லை என்று நாக்பூர் மக்களை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். நேற்று நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் நாக்பூர் தொகுதி பணிகளிலோ, தலித்துகள், முஸ்லிம்களிடமோ பாகுபாடு காட்டியதாக கருதினால் வாக்களிக்க வேண்டாம், உண்மையாக பணியாற்றியிருந்தால் வாக்களியுங்கள் என்றார்.
‘வாத்தி’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்றவர் மலையாள நடிகை சம்யுக்தா மேனன். ராம நவமியை முன்னிட்டு அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், ‘ஆதி சக்தி’ பிறந்த நாளில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனிதமான முயற்சியாக இதைத் தொடங்குகிறேன். இந்தப் புனிதமான பயணம் குறித்த கூடுதல் தகவலை விரைவில் பகிர்கிறேன் எனக் கூறியுள்ளார்.
பக்தர்களுக்கு துன்பம் ஏற்பட்டால், பெருமாளுக்கே இடையூறு ஏற்பட்டதுபோல் விரைந்து காப்பவர் சுதர்சனச் சக்கரத்தாழ்வார். சனிக்கிழமையன்று விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வாருக்கு சிவப்பு வண்ண மலர் சாத்தி, 9 நெய் விளக்கேற்றி சந்நிதியை 9 முறை வலம் வந்து, ‘ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’ எனும் இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி வேண்டினால் மங்காத செல்வங்களை அவர் வாரி வழங்கிடுவார் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
தமிழகம் உள்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை முதல்கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைக்கு நாளை முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி உள்பட 102 தொகுதிகளுக்கு நாளை ஒரேகட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
‘ஆங்கிரி ரான்ட்மேன்’ என்ற பெயரில் அறியப்படும் பிரபல யூடியூபர் அப்ரதீப் சாஹா (27) காலமானார். கடந்த சில நாள்களுக்கு முன் இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து பல்வேறு உறுப்புகள் செயலிழப்பால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவிற்கு இயக்குநர் ஜெயம் மோகன் ராஜா, தமன் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உத்தம வில்லன் படம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருவதாக திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. உத்தம வில்லன் லாபகரமான படம் என்று லிங்குசாமி கூறியதாக சிலர் கூறி வருகின்றனர். அது மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திய படம். இது கமலுக்கும் தெரியும். நஷ்டத்தை ஈடுகட்ட, மீண்டும் ஒரு படம் நடித்துத் தர அவர் ஒப்புக்கொண்டார். தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என தயாரிப்பு நிறுவனம் கேட்டுக் கொண்டது.
பஞ்சாப் – மும்பை அணிகளுக்கு இடையேயான 33ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு மொஹாலியில் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த 6 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் (MI- 9, PBKS- 8) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சென்னைக்கு எதிரான முந்தைய போட்டியில் தோல்வி அடைந்த மும்பை அணி, வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இன்று வெற்றி பெறப்போவது யார்?
மக்களவைத் தேர்தலில் தபால் வாக்கைச் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஏப்.,18) நிறைவடைகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் தங்களது வாக்கை மாலைக்குள் செலுத்த வேண்டும். அதன்பிறகு தபால் வாக்குப் பெற விண்ணப்பித்திருந்தாலும் வாக்கைப் பெற்று பூா்த்தி செய்து அளிக்க முடியாது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தபால் வாக்கைச் செலுத்த விண்ணப்பங்களை அளித்திருந்தனர்.
Sorry, no posts matched your criteria.