News April 18, 2024

இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

image

துபாயில் பெய்துவரும் வரலாறு காணாத கனமழையால், பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைப் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், துபாயில் சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு உதவி தேவைப்பட்டால் +971501205172, +971569950590, +971507347676, +971585754213 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

News April 18, 2024

அக்பர் – சீதா, சிங்கங்களின் பெயர் மாற்றம்

image

மேற்கு வங்கத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் ஒரு ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும், பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயர் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஷ்வ ஹிந்து பரிஷத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இதில் சிங்கங்களின் பெயரை மாற்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், அக்பர் சிங்கத்திற்கு சூரஜ் என்றும், சீதா சிங்கத்திற்கு தயா என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

News April 18, 2024

தமிழகத்தில் நாளை இவையெல்லாம் இயங்காது

image

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாகத் தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 19) பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் நாளை வங்கிகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், சர்வீஸ் சென்டர்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் கிடைக்காது. அதே சமயத்தில் பால், குடிநீர், மளிகை, காய்கறி, மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கவும், பேருந்து போக்குவரத்துக்கும் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News April 18, 2024

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 30% உயர்வு

image

இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்த நிதியாண்டின் 4ஆம் காலாண்டிற்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. தரவுகளின்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 30% அதிகரித்து ரூ.7,969 கோடியாக உயர்ந்துள்ளது. வருவாயை பொறுத்தமட்டில், 1.3% உயர்ந்து ரூ.37,923 கோடியாக உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் ரூ.37,441 கோடியாக இருந்தது. இதனிடையே, கடைசி ஈவுத்தொகையாக ரூ.20 மற்றும் சிறப்பு ஈவுத்தொகையாக ரூ.8 என மொத்தமாக ரூ.28 அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 18, 2024

ஈரானில் இருந்து இந்தியா திரும்பினார்

image

ஈரான் ராணுவத்தால் சிறைப் பிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலில் சிக்கியிருந்த கேரளாவின் திருச்சூரைச் சேர்ந்த ஆன் டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் மாலுமி இந்தியா திரும்பினார். ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம், ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை மீட்டுள்ளது. மீதமுள்ள 16 இந்திய மாலுமிகள் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

News April 18, 2024

வாக்காளர்களின் வீட்டிற்கே வரும் வாகனம்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் வயதானவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் வாக்களிக்க ஏதுவாக, அவர்களது வீட்டிலிருந்து வாக்குச் சாவடிக்கு செல்ல சிறப்பு வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. வாகன உதவி தேவைப்படுவோர் 1950 என்ற இலவச எண்ணை அழைத்துப் பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 18, 2024

தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடி முதலீடு

image

உலகின் தலைசிறந்த சொகுசு கார்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்கள் தமிழ்நாட்டில் தயாராகவுள்ளன. இந்த கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இதுவே முதல்முறை. இதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.9,000 கோடி முதலீடு செய்யவுள்ளது. ராணிப்பேட்டையில் அமையும் தொழிற்சாலையில் ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர், டிஃபெண்டர் கார்கள் தயாரிக்கப்பட உள்ளன. மார்ச் மாதத்தில் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

News April 18, 2024

இன்ஸ்டா கணக்கு குறித்து யுவன் விளக்கம்

image

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், சமூக வலைதளத்தில் பல்வேறு யூகங்களும் பரவத் தொடங்கின. இந்நிலையில், இன்ஸ்டா கணக்கு முடக்கப்பட்டது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இன்ஸ்டா கணக்கு முடக்கப்பட்டதாகவும், மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

News April 18, 2024

பூக்கள் விலை குறைந்தது

image

தமிழகத்தில் பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. கோடை வெயில் காரணமாக பூச்செடிகள் கருகி வரத்து குறைந்ததால் மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இந்த நிலையில், முகூர்த்த நாள்கள் இல்லாததால் ஒரு கிலோ மல்லி ₹400, முல்லை ₹360, ஜாதி மல்லி ₹300, கனகாம்பரம் ₹500, அரளி 250, சாமந்தி ₹240க்கு விற்பனையாகிறது. இதனால், பூக்களை பயிரிட்ட விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

News April 18, 2024

தேர்தலை முன்னிட்டு மேலும் ஒரு சிறப்பு ரயில்

image

தேர்தலை முன்னிட்டு ஏற்கெனவே பல சிறப்பு ரயில்களை அறிவித்துள்ள தெற்கு ரயில்வே, தற்போது தாம்பரம் – நெல்லை இடையே மேலும் ஒரு சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. இந்த ரயில் இன்று (ஏப்ரல் 18) இரவு 9:50 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நாளை (ஏப்ரல் 19) 11:15 மணிக்கு நெல்லையை அடையும். மறுமார்க்கத்தில் நாளை இரவு 7 மணிக்கு நெல்லையில் இருந்து கிளம்பும் ரயில் மறுநாள் காலை 8:45 மணிக்கு தாம்பரத்தை அடையும்.

error: Content is protected !!