India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விழுப்புரம், பெரம்பலூர், விருதுநகர், திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
டி.வி., லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு தேவையான காற்றோட்டம் கிடைக்காத போது, அவை சூடாகத் தொடங்கும். ஓய்வின்றி நீண்ட நேரம் பயன்படுத்துவதால், அதில் உள்ள பாகங்கள் சூடாகும். அதிக வெளிப்புற வெப்பநிலை, மின்னணு சாதனங்களை பாதிக்கும். அதாவது, சூரிய ஒளி படும் இடத்தில் செல்ஃபோன் உள்ளிட்ட பொருட்களை வைக்கும் போது சூடாகும். செல்ஃபோன், லேப்டாப் ஆகியவற்றில் கூலிங் சிஸ்டம் பழுதானால் அதிகளவில் சூடாகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 49.68% வாக்குகள் பதிவாகியுள்ளன. பிஹார்- 42.95%, சண்டிகர்- 52.61%, இமாச்சல்- 58.41%, ஜார்கண்ட்- 60.14%, ஒடிஷா- 49.77%, பஞ்சாப்- 46.38%, உத்தரப் பிரதேசம்- 46.83%, மேற்கு வங்கம்- 58.46% வாக்குகளும், ஒடிஷா சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவில் 49.77% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
கெஜ்ரிவால் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஜூன் 5இல் வழங்கப்பட உள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஜாமின் கோரி டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். கெஜ்ரிவால் உடல்நிலையில் தவறான தகவல்களை கூறி ஜாமின் பெற முயற்சிப்பதாக அமலாக்கத்துறை குற்ற சாட்டுக்களை முன்வைத்தது. இந்நிலையில், நாளை காலை கெஜ்ரிவால் திகார் சிறையில் சரணடைய உள்ளார்.
நேற்று ஏற்பட்ட திருவள்ளூர் பெயிண்ட் ஆலை விபத்தில் 3 தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது ஆலையின் சுவர் விழுந்து உயிரிழந்தார். இவர்கள் நான்கு பேரின் குடும்பத்தினருக்கும் முதல்வர் ஸ்டாலின் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். இவர்களது குடும்பத்தினருக்கு தேவையான நிவாரணத்தை அரசு செய்யும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
விண்வெளித் துறையில் 3டி அச்சுத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், ராக்கெட் என்ஜினைத் தயாரிக்கும் செலவும், காலமும் பன்மடங்கு குறைவதாக குறிப்பிடும் விஞ்ஞானிகள், இம்முறையில் என்ஜினைத் தயாரிக்க 3 மாதங்களுக்கு பதிலாக, 72 மணி நேரமே தேவைப்படுவதாக தெரிவிக்கின்றனர். வழக்கமான என்ஜினுடன் ஒப்பிடும் போது, 3டி என்ஜினை தயாரிக்க 10இல் ஒரு மடங்கு தொகையே செலவாவதாகவும் கூறுகின்றனர்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான திட்ட அறிக்கையை சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் அரசு சமர்ப்பித்துள்ளது. டெல்லி, சிங்கப்பூர் அரசுகளும் விருப்பம் தெரிவித்துள்ளதால், 3 விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு அடுத்த வாரம் முடிவெடுக்கப்படவுள்ளது. உலக செஸ் சாம்பியன் டிங் லிரன், தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் மோதவுள்ளனர்.
தமிழகத்தில் யாருமே பெற்றிராத வரலாற்று திருப்புமுனை வெற்றியை பாஜக பெறும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மோடியின் அலை வீசுவதாகவும், பாஜக 3ஆவது முறையாக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது என்று குற்றம் சாட்டிய அவர், ஸ்டாலின் முதல்வராக இருக்கிறாரா? என்பதே சந்தேகமாக இருப்பதாக தெரிவித்தார்.
பிரதமர் மோடி தேர்தலுக்காக அரசியல் தியானம் செய்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். முந்தைய காலத்தில் மக்கள் நலனுக்காகவும், நாட்டு நலனுக்காகவும் மகான்கள் தியானம் செய்ததாக கூறிய அவர், இன்றைக்கு பிரதமர் மோடி 14 கேமராக்களை வைத்துக்கொண்டு தியானம் செய்து வருவதாக விமர்சித்தார். வாக்கு அரசியலுக்காக செய்யும் தியானம் மக்கள் முன் வெளிப்பட்டு விடும் என்றும் அவர் விமர்சித்தார்.
இந்தியா – வங்கதேசம் இடையேயான டி20 உலகக் கோப்பை பயிற்சி போட்டி, இன்றிரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக, இந்திய அணியினர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை நியூயார்க் வந்தடைந்த விராட் கோலி, போட்டியில் பங்கேற்பாரா? ஐபிஎல்லில் சரியாக விளையாடாத ஹர்திக் பாண்டியா கம்பேக் கொடுப்பாரா, சஞ்சு சாம்சன்/ரிஷப் பண்ட் இருவரில் யார் அணியில் இடம்பெறுவார்? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.