India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரளா மாநிலம் பாலக்காட்டில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ரோடு ஷோ நடத்தினார். பாலக்காடு தொகுதி பாஜக வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட அவர், ரோடு ஷோவில் கலந்துகொண்டு ஆதரவு திரட்டினார். அண்ணாமலை போட்டியிட்ட கோவை தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 26ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடக்க உள்ள கேரளாவில் அவர் பரப்புரையை தொடங்கியுள்ளார்.
டெல்லிக்கு எதிரான போட்டியில் 46 ரன்னில் ஆட்டமிழந்த அபிஷேக் ஷர்மா புதிய சாதனை படைக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். 11 பந்துகளில் 46 ரன்கள் இருந்த அவர், 50 ரன்கள் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 12ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். ஒரு பவுண்டரி அடித்திருந்தால் IPL இல் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்திருப்பார். ஜெய்ஸ்வால் 13 பந்தில் 50 ரன்கள் எடுத்ததே சாதனையாக உள்ளது
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. SRH அணியின் தொடக்க வீரர்கள் ஹெட் மற்றும் அபிஷேக் DC பவுலர்கள் வீசும் பந்தை நாலாபுறமும் பறக்கவிட்டு வருகின்றனர். குறிப்பாக பவர் பிளேவில் (முதல் 6 ஓவர்களில்) 125 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக 2017 ஐபிஎல் தொடரில் RCB-க்கு எதிராக KKR அணி அடித்த 105 ரன்களே பவர் பிளேவில் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
எவ்வளவுதான் சம்பாதித்தாலும் பணத்தைச் சேர்க்க முடியவில்லை என பலர் புலம்புகின்றனர். அவர்கள் 50 – 30 – 20 விதியை பயன்படுத்தினால் பணத்தை எளிதாக சேர்க்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மொத்த சம்பளத்தில் 50%ஐ வாடகை, மளிகை, காப்பீடு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும். 30%ஐ மொபைல், பைக், சினிமா உள்ளிட்ட விருப்பங்களுக்கு பயன்படுத்தலாம். 20%ஐ கட்டாயம் சேமிப்பிற்காக ஒதுக்க வேண்டும்.
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பாஜகவை INDIA கூட்டணி தடுத்து நிறுத்தும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மோடி ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறி வருகிறார்கள், ஏழைகள் அப்படியே இருக்கிறார்கள். நாட்டில் 70% பேரிடம் இருக்க வேண்டிய பணம் 22 தொழிலதிபர்களிடம் இருப்பதாக கூறிய அவர், தேர்தல் வெற்றிக்கு பிறகு INDIA கூட்டணி அனைத்தையும் மாற்றி அமைக்கும் என்று வாக்குறுதி அளித்தார்.
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 16 பந்துகளில் அரைசதம் (54 ரன்கள்) அடித்து ஹைதராபாத் அணி வீரர் டிராவிஸ் ஹெட் அசத்தியுள்ளார். டெல்லியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற DC, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய SRH வீரர்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர். SRH அணி தற்போது வரை 4 ஓவர்களில் 83 ரன்களை குவித்துள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?
தேர்தல் ஆணையம், பாஜக அரசின் கட்டளை படி செயல்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை காபந்து அரசாக இருந்தாலும், தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அமைப்புக்களும் அவர்களின் விருப்பப்படி நடப்பதாக கூறிய அவர், இந்த தேர்தல் முடிவில் நாட்டில் இருந்து பாஜக துடைத்தெறியப்படும் என்று ஆவேசமாக தெரிவித்தார்.
சித்ரா பெளர்ணமியையொட்டி ஏப்ரல் 22, 23-இல் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் உள்ள பக்தர்கள் சித்ரா பெளர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கம். அவர்களது வசதிக்காக திருவண்ணாமலைக்கு கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. www.tnstc.in என்ற இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு பண்ணலாம்.
கோடை சீசனையொட்டி பொதுமக்கள் பயணிக்க 9000 சிறப்பு ரயில் பயணங்களைத் திட்டமிட்டிருபப்தாக ரயில்வே அறிவித்துள்ளது. கோடை விடுமுறையை கொண்டாட மக்கள் அதிக அளவில் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் ரயில்கள் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க நாட்டில் உள்ள முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. IRCTC இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சீனாவின் முக்கிய நகரங்கள் பூமிக்குள் புதைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நிலத்தடி நீர் பெருமளவில் சுரண்டப்படுதல், நகரமயமாதல் ஆகிய காரணங்களால் நிலப்புதைவு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். ஆறில் ஒரு நகரம் ஆண்டுக்கு 10 மி.மீ அளவில் கீழ் நோக்கி நகர்ந்து வருகின்றன. சுமார் 6.7 கோடி மக்கள் நிலப்புதைவு ஏற்படும் நகரங்களில் வாழ்ந்து வருவதால் அவர்களின் நிலை என்னவாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.