India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாக்கு எண்ணிக்கை முழுவதும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படும். EVM வாக்குகளும் VVPAT சீட்டுகளும் அதற்கென உள்ள விதிப்படி ஒப்பிட்டு சரி பார்க்கப்படும். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும், EVM இயந்திரங்கள், VVPAT இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் பாதுகாப்பாக வைக்கப்படும். யாரேனும் சந்தேகம் எழுப்பினாலோ, வழக்குத் தொடுத்தாலோ, இதை வைத்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.
கருத்துக்கணிப்புகள் தவறானவை, INDIA கூட்டணி 295 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். உளவியல் ரீதியில் எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையம், வாக்கு எண்ணும் முகவர்கள், ரிடர்னிங் அதிகாரிகள் ஆகியோருக்கு தாங்கள் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வருவோம் என போலி கருத்துக்கணிப்பு மூலம் மோடி, அமித் ஷா அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
INDIA கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தேசபந்து நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் கூறியுள்ளது. INDIA கூட்டணிக்கு 255 – 290 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. NDA கூட்டணி 207 – 241 தொகுதிகளை கைப்பற்றக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் NDA கூட்டணி ஆட்சி அமைக்கும் எனக் கூறிய நிலையில், தேசபந்து INDIA கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகக் கணித்துள்ளது.
புதிய செல்களை உருவாக்கவும், நோய்த்தொற்றை எதிர்த்து போராடவும் புரதச் சத்து உதவுகிறது.
100 கிராம் முட்டையில் 13 கிராம் புரதம் உள்ளது. முட்டையைவிட அதிகமான புரதம் கொண்ட உணவுப்பொருள்கள் சில உங்கள் பார்வைக்கு இதோ:- *பூசணி விதை (19 கிராம்) *பாதாம் (21 கிராம்) * சாமை அரிசி (16.5 கிராம்) *யோகர்ட் (16 கிராம்) *வேர்க்கடலை (26 கிராம்) *பாலாடைக்கட்டி (25 கிராம்)* டூனா மீன் (28 கிராம்) *ஓட்ஸ் (15 கிராம்)
தேர்தலில், இந்திய அளவில் பாஜக கூட்டணி 300 இடங்களில் வெல்லும் என்று அரசியல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் கூறிவந்தது தெரிந்ததே. இந்நிலையில், நேற்று வெளியான EXIT POLLS முடிவுகள் அவரது கணிப்பையொற்றியே இருந்தன. இது குறித்து முதன்முறையாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “தேர்தல் அரசியல் குறித்து பத்திரிகையாளர்கள், அறிவுஜீவிகளின் அலசல்களைப் பார்த்து நேரத்தை வீணடிக்காதீர்கள்” என அறிவுரைக் கூறியுள்ளார்.
திரைப்படங்கள், ஆல்பங்களில் பலவகை இசை இருக்கும். அதில் மற்ற இசைப் பாடல்களை விட மெலடி இசைப் பாடல்கள் ஹிட் ஆவதை பார்த்திருப்போம். இதற்கு பாடல் வரிகள் ஒரு காரணமாக கூறப்பட்டாலும், உளவியல் காரணமும் உண்டு. மனிதர்கள் அனைவரும் ஏதேனும் ஒருவகையில், எமோஷனல் உணர்வை கொண்டிருப்பர். மெலடி இசையை கேட்கையில் அந்த உணர்வு பூர்த்தியாகி மனம் திருப்தியடைவதை உணர்வர். மெலடி இசை ஹிட்டாக இதுவே காரணமாக கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்பது குறித்த கருத்துக் கணிப்பை Times Now வெளியிட்டுள்ளது. பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக தரப்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் அங்கு களம் கண்டனர். இதில், அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சிந்திரனே வெற்றிபெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கோவையில் முழுக்க முழுக்க தமிழ் எழுத்துக்களால் ஆன திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. குறிச்சிக்குளம் ஏரிக்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சிலை, 25 அடி உயரம் கொண்டது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடுகளைக் கொண்டு துரு பிடிக்காத வகையில் அமைக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் சிலையை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இந்தியன்-2 படத்திற்கு உறுதுணையாக நின்ற தம்பி உதயநிதி ஸ்டாலினுடன் தான் நிற்கும் நேரம் வரலாம் என்று நடிகரும் ம.நீ.ம தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்தியன் 2 பாடல் வெளியிட்டு விழாவில் பேசிய அவர், “மக்களை பிரித்தாளும் முயற்சி இந்தியாவில் எடுபடாது. தமிழன் இந்தியாவை ஆள வேண்டும். அதையும் நாம் செய்து காட்டுவோம். என்னுடைய அடையாளம் தமிழன், இந்தியன் என்பதுதான். அதை யாராலும் மாற்ற முடியாது” என்றார்.
இந்தியாவின் நம்பர் 1 கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, கடந்த மே மாதம் விற்பனையான கார்கள் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் 1.57 லட்சம் கார்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2023 மே மாதத்துடன் (1.51 லட்சம்) ஒப்பிடுகையில் 4% அதிகம். அதேநேரத்தில் வெளிநாட்டு ஏற்றுமதி 26,477இல் இருந்து 17,367ஆக குறைந்துள்ளதாகவும் மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.