India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 இடங்களில் எஸ்கேஎம் கட்சி அபார வெற்றிபெற்றுள்ளது. 2019ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சரான எஸ்கேஎம் கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைகிறது. பிரதான எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பாஜக, காங்., ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.
*சாம்பார் செய்து இறக்குவதற்கு முன், 2 தக்காளியை மிக்சியில் அரைத்து சேர்த்தால் அதிக ருசி கிடைக்கும். *பரோட்டாவிற்கு மாவு பிசையும் போது, அதில் சிறிதளவு மில்க் மெயிட் சேர்க்க சுவையாக இருக்கும். *உளுந்து வடை மாவில் சிறிது நெய் சேர்த்தால் வடை மொறு மொறுப்பாக இருப்பதோடு, அதிக எண்ணெய்யும் செலவாகாது. *பூண்டினை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தால், அதன் மேல் தோலை எளிதாக நீக்கலாம்.
ஐபிஎல் மூலமாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றவர் வெங்கடேஷ் ஐயர். ஐபிஎல் தொடரில் KKR அணியின் ஸ்டார் வீரரான இவருக்கும், அவரது காதலி ஸ்ருதி ரங்கநாதனுக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது, உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், திருமண புகைப்படங்களை பகிர்ந்து, ரசிகர்கள் புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கருத்துக்கணிப்புகளை கொண்டு, தேர்தல் முடிவின் ட்ரெண்டை கணிக்க முடியுமே தவிர, வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கையை கணிப்பது சிரமம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்படும் வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதாவது, மொத்த வாக்காளர்களில் 0.5%க்கும் குறைவான நபர்களிடமே கருத்துக்கணிப்பு நடத்தப்படுவதால் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது.
தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 46 இடங்களை கைப்பற்றி முதல்வர் பெமா காண்டு தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கிறது. பெமா கண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 50 தொகுதிகளில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக 46, காங்., 1, என்பிபி 5, சுயேச்சை 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
விவேகானந்தர் தன்னுடை வழிகாட்டியாகவும், தன் தவத்தின் ஆதாரமாகவும் இருந்துள்ளார் என விவேகானந்தர் நினைவு பாறை பதிவேட்டில் மோடி குறிப்பிட்டுள்ளார். விவேகானந்தர் பாறையில் தியானம் செய்தது, தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என்றும் தனது வாழ்வின் ஒவ்வொரு கணமும், தன் உடலின் ஒவ்வொரு துகளும் தேசத்தின் சேவைக்காக எப்போதும் அர்ப்பணிக்கப்படும் என மீண்டும் ஒருமுறை உறுதியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வான் பரப்புடன் போட்டிப்போடும் விதமாக கண்களை வியக்க வைக்கும் மலைச்சிகரங்கள் உலகெங்கும் ஏராளம் உள்ளன. அவை ஒரே நாட்டுக்குள் அமைந்திருக்காமல் அண்டை நாடுகளின் எல்லைகளை கடந்தும் நீண்டு காட்சி அளிக்கின்றன. அத்தகைய மலைச்சிகரங்கள் சில உங்கள் பார்வைக்கு 1. எவரெஸ்ட் (நேபாள் – திபெத் எல்லை) 2.மகாலு 3.லோட்சே 4. சோ ஓயு (நேபாள் – சீனா எல்லை) 5.நங்கா பர்பத் (ஜம்மு-காஷ்மீர்) 6.கே2 (பாகிஸ்தான் – சீனா எல்லை).
அரசியலில் மதங்களை தவிர்த்து, மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றிய விவாதங்களே இருக்க வேண்டும் என துரை வைகோ தெரிவித்துள்ளார். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், மதத்தின் பெயரால் பிரிவினை கருத்துக்களை ஊக்குவிக்க கூடாது எனக் கூறியுள்ளார். INDIA கூட்டணி சார்பில் மக்கள் நலன் சார்ந்த வாதங்களை பரப்புரையில் முன்வைத்ததாக கூறிய அவர், மக்கள் எதை ஏற்றார்கள் என்பது வாக்கு எண்ணிக்கையில் தெரிய வரும் என்றார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை வரம்பை ( Gratuity limit) 25% உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதாவது அதிகபட்ச கருணைத் தொகை ₹20 லட்சத்தில் இருந்து ₹25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கருணைத் தொகை ஜனவரி 1, 2024 முதல் தொடங்குகிறது. பணிக்கொடைக்கு தகுதி பெற ஒரு ஊழியர் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். முன்னதாக மார்ச் 7ஆம் தேதி 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.
Sorry, no posts matched your criteria.