India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் பிஹாரை காங்கிரஸ் முழுவதுமாக சீரழித்துவிடும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பிஹாரில் என்டிஏ கூட்டணி வென்றால் இரட்டை எஞ்சின் ஆட்சியை கொடுப்போம் என்ற அவர், காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் வென்றால் வறுமையும், கலவரமும் தான் இருக்கும் என்றார். மேலும், பிஹாரில் 40 இடங்களிலும் பாஜக கூட்டணியே வெல்லும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஹர்திக் பாண்டியாவை கிண்டல் செய்ய வேண்டாம் என கிரிக்கெட் ரசிகர்களுக்கு ராபின் உத்தப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் பரப்பப்படும் கிண்டல், கேலிகளால் ஹர்திக் மிகவும் காயப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். எந்த ஒரு மனிதர் மீதும் இவ்வளவு வன்மம் இருக்கக் கூடாது. இதற்கு பாண்டியா விதிவிலக்கல்ல, அவர் தொடர்பான பதிவுகளை கடந்து செல்வதே சிறந்த பண்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா நடிப்பில் ‘அறம்’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த கோபி நயினார், தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், முன்னணி ஹீரோக்கள் தன்னை கண்டுகொள்வது இல்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். ஹீரோயின்கள்தான் மதித்து வாய்ப்பு கொடுக்கிறார்கள். நல்ல படங்களை இயக்குபவர்களிடம் பெரிய ஹீரோக்கள் கதை கேட்பதில்லை என குற்றம்சாட்டினார்.
அரசியலமைப்புக்கு முடிவுகட்ட வேண்டுமென பாஜக தலைவர்கள் திரும்ப திரும்ப பேசி வருவதாக தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். ராஞ்சியில் நடைபெற்று வரும் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், அரசியலமைப்பு ஏதோ ஒரு பாபாவால் எழுதப்படவில்லை, அது பாபா சாகேப் அம்பேத்கரால் எழுதப்பட்டது என்றார். பாஜக தலைவர்கள் அரசியலமைப்புக்கு முடிவுகட்ட நினைத்தால், மக்கள் அவர்களுக்கு முடிவுகட்டிவிடுவார்கள் என்றார்.
டிக்கிலோனா பட நடிகை ஷிரின் காஞ்ச்வாலாவிற்கும், தொழிலதிபர் அசார் என்பவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இந்நிலையில், தற்போது தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், நேற்றைய தேதியை குறிப்பிட்டு மோதிரம் மாற்றியதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இவருக்கு திருமணம் முடிந்துவிட்டதாக கூறி நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரசார பாடலில் இருந்து இந்து, ஜெய் பவானி வார்த்தைகளை நீக்க முடியாது என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். தெலங்கானா, கர்நாடகாவில் பரப்புரைகளில் பிரதமர் ‘பஜ்ரங் பலி கி ஜெய்’ எனக் கூறி வாக்கு சேகரிக்கிறார். அமித் ஷா தேர்தலுக்குப் பிறகு ராமர் கோயிலுக்கு அழைத்து செல்வோம் எனக் கூறுகிறார். இதை எல்லாம் அனுமதிக்கும் தேர்தல் ஆணையம், இந்து என்ற வார்த்தையை அனுமதிக்க மறுப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 222/6 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய பிலிப் சால்ட் 48, ஷ்ரேயஸ் ஐயர் 50, ரசல் 27*, ரமந்தீப் 24* ரன்கள் எடுத்தனர். RCB தரப்பில் அதிகபட்சமாக யஷ் தாயாள், க்ரீன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து, RCBக்கு 223 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றிபெறும்?
கருத்துக்கணிப்புக்களை பொய்யாக்கி அதிமுகவுக்கே அதிக இடங்களில் வெல்லும் என வைகை செல்வன் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கிடைக்கும், 40 தொகுதிகளும் வெற்றி கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது. பாஜக குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தை வேண்டுமானால் பெறலாம். ஆனால் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறாது என்ற அவர், எடப்பாடி கைகாட்டும் நபரே அடுத்த பிரதமர் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேகதாதுவில் நிச்சயம் புதிய அணை கட்டுவோம் என மஜத தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். சட்ட ரீதியாக அனைவரையும் சமாதானம் செய்து அணை கட்டுவதற்கான முயற்சியில் விரைவில் ஈடுபடுவோம். மேகதாது கர்நாடாகாவின் தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்யும். தமிழர்களும் இந்த அணை மூலம் அதிக அளவில் பலன் பெறுவார்கள் என்று கூறியுள்ளார். குமாராசாமி மாண்டியா தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக தேர்தலில் போட்டியிடுகிறார்.
குஜராத்தின் பண்டாரோ பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் சுமார் 15 மீட்டர் நீளமுள்ள ராட்சத பாம்பின் படிமத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். வாசுகி என பெயரிடப்பட்ட இந்த பாம்பு, 4.7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 1,000 கிலோ எடை கொண்ட பாம்பு எனக் கூறப்படுகிறது. 1921ஆம் ஆண்டு ஒரு பச்சை அனகோண்டா உலகின் மிக நீளமான பாம்பு என்ற கின்னஸ் சாதனை பெற்றது. அதன் நீளம் 10 மீட்டர் அகும்.
Sorry, no posts matched your criteria.