India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ளதால், பங்குச்சந்தைகள் இன்று புதிய உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் கிஃப்ட் நிஃப்டி 600 புள்ளிகள் அதிகரித்து 23,334 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. இதே ட்ரெண்ட் இந்திய பங்குச்சந்தையிலும் இன்று காணப்படும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் நாளை காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 14 மேஜைகள் என 3,300 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியில் 10,000 பேர், உதவியாளர்கள் 24,000 பேர், நுண் பார்வையாளர்கள் 4,500 பேர் என 35,000க்கும் அதிகமானோர் பணியில் ஈடுபடவுள்ளனர். பாதுகாப்புப் பணிக்காக 15 கம்பெனி துணை ராணுவப் படையினர் தமிழகம் வந்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நாளை நடைபெறவுள்ளன. ஏப்ரல் 19ஆம் தேதி முதல் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றன. பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நாளை (4.6.24) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளன. மதியம் 12 மணிக்குள் முன்னிலை நிலவரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரவில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக கரூர், ஓசூர், விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் நங்கநல்லூர், பள்ளிக்கரணை, கோடம்பாக்கம், மேடவாக்கம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது.
குஜராத் பால் உற்பத்தியாளர் சங்கத் தயாரிப்பு நிறுவனத்தால் அமுல் பால், நாடு முழுவதும் விற்கப்படுகிறது. கடைசியாக 2023 பிப்ரவரி மாதம் பால் விலையை அமுல் உயர்த்தியிருந்தது. இந்நிலையில், அமுல் நிறுவனம் இன்று முதல் பால் விலையை லிட்டருக்கு ₹2 உயர்த்தியுள்ளது. இதன்படி, அமுல் தாசா பால் விலை லிட்டருக்கு ₹2 உயர்ந்து ₹56ஆகவும், அமுல் கோல்ட் விலை லிட்டருக்கு ₹2 அதிகரித்து ₹68ஆகவும் விற்பனையாகிறது.
தமிழகத்தில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அக்னி நட்சத்திரம் முடிந்தும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று வெயிலின் அளவு, வழக்கத்தைவிட 1-3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக் கூடும்.
மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. முத்தமிழ் அறிஞர் எனப் போற்றப்பட்ட கருணாநிதி, திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் 1924 ஜூன் 3ஆம் தேதி பிறந்தார். சிறு வயது முதலே பொது வாழ்க்கையில் அதீத ஈடுபாடு கொண்டிருந்த அவர், தமிழக அரசியல் 5 முறை முதல்வராகவும், களத்தில் 13 முறை MLAவாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
*நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை காலை 8 மணிக்கு எண்ணப்பட உள்ளது.
*INDIA கூட்டணியில், ஸ்டாலின், அகிலேஷ், தேஜஸ்வி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர் – மம்தா பானர்ஜி புகழாரம்
*மேற்கு வங்கத்தில் இன்று 2 வாக்குச் சாவடிகளில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
*WC T20 தொடரில் இன்று நமீபியா-ஓமன், தென்னாப்பிரிக்கா-இலங்கை அணிகள் மோதல்.
சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், ஜூலை 31 வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் ஜூலை 31 வரை லேசர் ஒளி, பலூன்கள் உள்ளிட்ட பொருள்கள் எதையும் பறக்க விடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 6 மணிக்கு நடைபெற உள்ள 3ஆவது லீக் போட்டியில், நமீபியா – ஓமன் அணிகள் மோதுகின்றன. பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. உலகக் கோப்பை T20 தொடரில், இந்த இரு அணிகளும் குரூப் B பிரிவில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.