India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் பணியாளர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் 5 இலட்சத்திற்கும் அதிமானவர்களை பணியில் அமர்த்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் அதன் உற்பத்தி திறனை 40 பில்லியன் டாலராக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது 1.5 இலட்சம் இந்தியர்கள் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். I.N.D.I.A கூட்டணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இரு கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர். அப்போது, கூட்டத்திற்குள் திடீரென இரண்டு கட்சியினரும் நாற்காலிகளை கொண்டு தாக்கிக் கொண்டனர். பாஜக இதனை ‘வன ராஜ்ஜியம்’ என்று விமர்சனம் செய்துள்ளது.
KKR அணி வீரர் சுனில் நரைன் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். RCB அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர், ஒரு அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய நபர் என்ற சாதனை படைத்துள்ளார். KKR அணிக்காக 172 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரைத் தொடர்ந்து மலிங்கா (170-MI), புவனேஷ்வர் குமார் (150-SRH) மற்றும் பிராவோ (140-CSK) ஆகியோர் உள்ளனர்.
கடலூரில் திமுகவிற்கு வாக்களிக்காத பெண்ணை திமுக நிர்வாகிகள் அடித்தே கொன்றுவிட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் தமிழக காவல்துறை, அது பொய்யான தகவல் என்று விளக்கமளித்துள்ளது. முன் விரோதம் காரணமாக நடந்த கொலையை அரசியல் ரீதியாக திசை திருப்புவது தண்டனைக்குரிய குற்றம் என்று காவல்துறை கூறியுள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. PBKS தரப்பில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 35, ஹர்பிரீத் பிரார் 29 ரன்கள் எடுத்தனர். GT சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாய் கிஷோர் 4, நூர் அஹமது, மோஹித் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து GT அணிக்கு 143 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ரெனே ரெமண்ட் – லிண்டா என்ற வயதான தம்பதி சுவிட்சர்லாந்துக்குச் சுற்றுலா சென்றனர். வெளிநாட்டில் அவர்கள் ரோமிங் மொபைல் டேட்டாவை பயன்படுத்தியுள்ளனர். சுற்றுலா முடிந்து வீடு திரும்பிய அவர்களுக்கு, அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, வெளிநாட்டு டேட்டாவை பயன்படுத்தியதால் ரூ.1.19 கோடிக்கு மொபைல் கட்டணம் வந்துள்ளது. நீண்ட போராட்டத்திற்குப் பின் கட்டணம் ரத்து செய்யப்பட்டது.
கேரளாவில் இருந்து கோழி மற்றும் வாத்துக்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவிவரும் நிலையில், கேரளாவிலும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு – கேரளா எல்லைப் பகுதிகளில் நோய்த் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாஜக தன்னையும், தனது உறவினர் அபிஷேக் பானர்ஜியையும் குறிவைப்பதால் பாதுகாப்பற்றதாக உணர்வதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். இன்று தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், பாஜகவின் நடவடிக்கைகளைக் கண்டு நாங்கள் பயப்படப் போவதில்லை. திரிணாமுல் காங்., தலைவர்களுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் பின்னப்படும் சதிவலைகளை அனைவரும் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்திற்கான புதிய பயணம் தேர்தலிலிருந்து தொடங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாவீர் ஜெயந்தி விழாவில் பங்கேற்று பேசிய அவர், உலகளாவிய மோதல்களுக்கு மத்தியில் ஆன்மிக குருக்களின் போதனைகள் தேவைப்படுவதாகக் கூறினார். யோகா, ஆயுர்வேதம் போன்ற பாரம்பரியத்தை அரசு ஊக்குவித்து வருகிறது. புதிய தலைமுறை இளைஞர்களும் நாட்டின் பாரம்பரியத்தை அடையாளமாகக் கருவதாகக் கூறினார்.
கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியிருப்பதால் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் மீன்களின் விலை உயர்ந்துள்ளது. மீன்களின் இனப்பெருக்கம் நடைபெறுவதால் கோடைக்காலத்தில் 45 நாட்கள் மீன் பிடிக்க தடை விதித்துள்ளது அரசு. இந்த தடை ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கிய நிலையில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வந்தது. அசைவப் பிரியர்கள் அதிக பேர் மீன் வாங்கக் குவிந்ததால் விலை இரட்டிப்பானது.
Sorry, no posts matched your criteria.