India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், ஸ்டார் வேட்பாளர்களின் நிலவரம் குறித்து அறிய தமிழ்நாட்டு மக்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அந்த வகையில், தென் சென்னையில் பாஜக சார்பில் தமிழிசை செளந்தரராஜன், திமுக சார்பில் சிட்டிங் எம்.பி தமிழச்சி தங்க பாண்டியன், அதிமுக சார்பில் ஜெயவர்தன் போட்டியிடுகின்றனர். கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் தேர்தல் முடிவு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிதம்பரம் தொகுதியில், கடந்த முறை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற விசிக தலைவர் திருமாவளவன் இம்முறை அதே தொகுதியில் களம் கண்டுள்ளார். ராமநாதபுரம் தொகுதியில் பாஜக சார்பில் சுயேச்சையாக களமிறங்கிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தேர்தல் முடிவு எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. நெல்லையில் பாஜக சார்பில் களம் கண்ட நயினார் நாகேந்திரனின் தேர்தல் முடிவு கவனம் பெறும்.
விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன், பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரின் தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. தேனி தொகுதியில் அமமுக வேட்பாளர் தினகரன், தருமபுரியில் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி களம் கண்டுள்ளனர். அதே போல, தூத்துக்குடியின் சிட்டிங் எம்.பி கனிமொழி, நீலகிரி தொகுதியில் 3 முறை தொடர்ந்து வென்ற ஆ.ராசா ஆகியோரின் தேர்தல் முடிவுகளும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் எவ்வளவு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது என்பதை அறிய பலரும் ஆர்வமுடன் இருக்கின்றனர். அதாவது, நாட்டில் அதிகபட்சமாக ₹500 நோட்டுகள் 86.7% புழக்கத்தில் உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக ₹100 நோட்டுகள் 5.9%, ₹200 நோட்டுகள் 4.4%, ₹50 நோட்டுகள் 1.3%, ₹20 நோட்டுகள் 0.8%, ₹10 நோட்டுகள் 0.7%, ₹5 நோட்டுகள் 0.1% ₹2 நோட்டுகள் 0.1% புழக்கத்தில் உள்ளன.
T20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 77 ரன்களில் சுருண்டுள்ளது. SA அணி பவுலர்களின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து, 19.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 77 ரன்கள் மட்டுமே எடுத்தது. SA தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நோர்க்யா 4, ரபாடா 2, மகாராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக, இஸ்ரேலியர்கள் மாலத்தீவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய கடற்கரைகளில் இஸ்ரேலியர்கள் தங்கள் சுற்றுலா விடுமுறையை கழிக்குமாறு, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதரகம் அழைப்பு விடுத்துள்ளது. மேலும், இந்தியாவின் பிரசித்தி பெற்ற கடற்கரைகளான கோவா, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு மற்றும் கேரளா உள்ளிட்டவற்றை தனது X பக்கத்தில் பரிந்துரைத்துள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் நட்சத்திர தொகுதியான கோவை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் நாளை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. மொத்தம் 24 சுற்றுகள், ஒரு சுற்றுக்கு 25 நிமிடங்களாகும் என்பதால், உத்தேசமாக வாக்கு எண்ணிக்கையை முடிக்க 12 மணி நேரம் தேவைப்படும். முன்னணி நிலவரம் மதியம் 2 மணிக்கு தெரியவரும் என்றாலும், முழுமைமையான முடிவு வெளியாக இரவு 8.30 மணியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜாமின் முடிந்து நேற்று மீண்டும் திகார் சிறையில் சரணடைந்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை பாஜக அரசு மேலும் துன்புறுத்துவதாக டெல்லி அமைச்சர் அதிஷி விமர்சித்துள்ளார். டெல்லியில் கடும் வெயில் கொளுத்திவரும் நிலையில், கெஜ்ரிவாலுக்கு சிறையில் கூலர் கூட வழங்காமல் பாஜக அரசு வதைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கெஜ்ரிவாலை பொய் வழக்கில் சிறையில் அடைத்தும், பாஜக சமாதானம் அடையவில்லை என சாடியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் திருப்தி தராத பட்சத்தில், குடியரசு தலைவரிடம் முறையிட INDIA கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் அரசமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நகர்வுகள், தொங்கு நாடாளுமன்றத்திற்கான அறிகுறியா? என்ற கேள்வியை மக்கள் மத்தியில் எழுப்புகிறது.
அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கத்தில், ஜேடி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘பயமறியா பிரம்மை’. இப்படத்தில் குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.