India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியிடம் வழக்கு தொடர்பான அசல் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. பண மோசடி வழக்கில் ED செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14இல் கைது செய்தது. இந்த வழக்கில் அசல் ஆவணங்களை செந்தில் பாலாஜி கோரியிருந்த நிலையில், இன்று அவரிடம் ஆவணங்கள் வழங்கப்பட்டன. மேலும், 34ஆவது முறையாக அவரின் நீதிமன்றக் காவல் வரும் ஏப்ரல் 25ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர இந்தியாவில் இவ்வளவு இழிவான அரசியல் செய்யும் மோடியைப் போன்ற ஒரு பிரதமரை யாரும் கண்டதில்லை என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இஸ்லாமியர்கள் குறித்த பிரதமரின் பேச்சு கண்டனத்துக்குரியது. இரு மதத்தினரிடையே பிளவை ஏற்படுத்தி அரசியல் பிழைப்பு நடத்தப் பார்க்கும் பாஜகவுக்கு ஜூன் 4ஆம் தேதி மக்கள் முடிவுகட்டுவார்கள் எனக் கூறினார்.
நைட் பார்ட்டிகளில் வீரர்கள் பங்கேற்பதால் அவர்களின் ஆட்டத்திறன் குறைவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். பல வீரர்கள் நைட் பார்ட்டிகளில் பங்கேற்றுவிட்டு, அடுத்த நாள் நேரடியாக போட்டிகளில் பங்கேற்கிறார்கள். பல அணிகள் ஐபிஎல் சாம்பியன் ஆகாமல் இருப்பதற்கு இது முக்கிய காரணமாக இருக்கிறது என்று குற்றம் சாட்டிய அவர், இதை வீரர்கள் குறைத்துக் கொண்டால் மட்டுமே முழுமையான திறனை வெளிப்படுத்த முடியும் என்றார்.
சிபிஐ, இ.டி, ஐ.டி, தேர்தல் பத்திரம், இந்து – முஸ்லீம், மசூதி ஆகியவை இல்லையென்றால் பாஜக 100 இடங்களை கூட தாண்டாது என்று ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “வறுமை, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற உண்மையான பிரச்னைகளைப் பற்றி பேசுங்கள். நாட்டு மக்களுக்காக என்ன செய்தீர்கள் என்று கூறுமாறு மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறினார்.
முஸ்லீம்கள் தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்த பிரதமர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். பிரதமர் பதவிக்கான கண்ணியத்தை மோடி சீர்குலைத்துள்ளார். இதைத் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கக் கூடாது என்ற அவர், இந்தியாவின் மதசார்பற்ற கொள்கையும், நம்பகத் தன்மையையும் நிலைநாட்ட பிரதமர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஸ்டார்’. மே.10ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், பாடல்கள், மேக்கிங் வீடியோ வெளியாகிப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனிடையே, படத்தின் இறுதி பதிப்பைக் காணத் தயாரிப்பாளர் சகர் பெண்டேலாவை இளன் அழைத்த நிலையில், படத்தைப் பார்க்கும் முன்பே ஐதராபாத்தில் வாங்கிய நிலத்தை அவருக்குத் தயாரிப்பாளர் பரிசளித்தார்.
போலியான வங்கிச் செயலிகள் மூலம் பயனாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணமோசடி நடப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. சைபர் செக்யூரிட்டி போன்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வப் பக்கங்களில், புழக்கத்தில் இருக்கும் union-rewards.apk, ausmallfinance.apk போன்ற போலிச் செயலிகளின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, போலிச் செயலிகள் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும். SHARE IT.
கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கோரி தாக்கலான மனுவை தள்ளுபடி செய்த டெல்லி உயர் நீதிமன்றம், அதைத் தாக்கல் செய்த சட்டக் கல்லூரி மாணவருக்கு ₹75,000 அபராதம் விதித்துள்ளது. முதல்வராக இருக்கும் வரை ஜாமின் கோரிச் சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள், கெஜ்ரிவால் சார்பில் மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு உரிமை இல்லை என அறிவித்து அபராதம் விதித்து உத்தரவிட்டது.
ரயிலில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதன் விசாரணையில், தேர்தலின்போது பணம் பறிமுதல் செய்தது பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் வராது என அமலாக்கத்துறை கூறியது. இதையடுத்து, ஏப்.24க்குள் அமலாக்கத்துறை உரிய பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வணிக ரீதியாக உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 51ஆவது இடத்தைத் தக்கவைத்துள்ளதாக எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், வலுவான பொருளாதாரம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, பரந்த சந்தை வாய்ப்பு, இளையோர் எண்ணிக்கை, கொள்கை மாற்றம் நோக்கிய செயல்பாடுகள் போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யச் சிறந்த வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.