India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்காசி (தனி) தொகுதியில் திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன், அதிமுக சார்பில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணா சுவாமி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
ஆந்திரா மக்களவைத் தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 3 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. பாஜக, ஜனசேனா உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி 18 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி 1 தொகுதியில் மட்டும் முன்னிலையில் உள்ளது.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அரக்கோணம் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்து வருகிறார். பாமக வேட்பாளர் பாலு 2ஆவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் விஜயன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் பாஜக + மஜத கூட்டணி 18 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக பாலியல் வழக்கில் சிக்கி வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து தற்போது கைதான மஜத பிரமுகரும் ஹாசன் தொகுதி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலையில் உள்ளார். அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
இவிஎம் மெஷின்களில் உள்ள வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியுவுடன் பாஜகவின் முன்னிலை எண்ணிக்கை குறைந்து வருகிறது. பாஜக 300 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்த நிலையில் தற்போது ட்ரெண்ட் மாறி பாஜக 268ஆக குறைந்துள்ளது. காங்கிரஸ் 200 தொகுதிகளைக் கடந்து முன்னிலை வகிக்கிறது. மற்ற வேட்பாளர்கள் 21 இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர்.
நெல்லையில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ஃப்ரூஸ் 3,563 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். முன்னிலையில் இருந்த பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், 2,058 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில், ஹைதராபாத்தில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சித் தலைவர் ஒவைசி, பாஜக சார்பில் மாதவி லதா கொம்பெல்லா, காங்கிரஸ் கட்சி சார்பில் முகம்மது வாலியுல்லா சமீர் உள்பட 30 பேர் போட்டியிடுகின்றனர். அத்தொகுதியில் ஒவைசி பின்தங்கியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் மாதவி லதா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.
ராமநாதபுரம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளில் 30 சதவீதம் வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முறையான கையெழுத்து இல்லை போன்ற காரணங்களால் 30% வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. ராமநாதபுரம் தொகுதியில் ஓபிஎஸ் (பாஜக கூட்டணி), நவாஸ்கனி (திமுக கூட்டணி), ஜெயபெருமாள் (அதிமுக), சந்திரபிரபா (நாதக) போட்டியிடுகின்றனர்.
ஒடிஷா சட்டசபை தேர்தலில் பாஜக 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சற்றுமுன் கிடைத்த தகவலின் படி, ஆளும் கட்சியான ஜனதா தளம் ஒரு இடத்திலும், காங்., ஒரு தொகுதியிலும், பாஜக 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகளை WAY2NEWS செயலியில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் சுதா முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் ஸ்டாலின், அதிமுக வேட்பாளர் பாபு, நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.