India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இதுவரை வெளியான முன்னிலை நிலவரப்படி பாஜக கூட்டணி 290க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 210க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மத்தியில் ஆட்சியமைக்க 272 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர தேர்தலில் ஆளும் YSR காங்கிரஸ் பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அம்மாநில மக்கள் பெரியளவில் வாக்களிக்கவில்லை எனத் தெரிகிறது. மாறாக மாற்றத்தை எதிர்பார்த்து, அவர்கள் சந்திரபாபு நாயுடுவுக்கு வாக்களித்திருப்பது தேர்தல் முடிவின் மூலம் தெரிய வருகிறது. பவன் கல்யாண் கட்சியும் குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்து வருகிறது.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தருமபுரி தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி 5,407 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். திமுக வேட்பாளர் மணி 2,180 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் விஜயன் 1,917 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் INDIA கூட்டணி 41 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதன்படி, INDIA கூட்டணியில் சமாஜ்வாதி 35, காங்கிரஸ் 6 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. ஆனால், பாஜக 37 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
மதுரை தொகுதியில் சு.வெங்கடேசன் (சிபிஎம்) – 1,161 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.
சரவணன் (அதிமுக) – 429 வாக்குகளும்
ராம சீனிவாசன் (பாஜக) – 494 வாக்குகளும்
சத்யா தேவி (நாம் தமிழர்) – 283 வாக்குகளும் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளனர்.
தூத்துக்குடியில் திமுக நட்சத்திர வேட்பாளர் கனிமொழி முன்னிலை வகிக்கிறார். திமுக 15,631, அதிமுக 4,039, தமாகா 2,333, நாதக 2,331 வாக்குகளும் பெற்றுள்ளன. அதேபோல், திருவள்ளூர் தொகுதியில் காங்., 4,260, தேமுதிக 2,335, பாஜக 1,621, நாதக 559 வாக்குகளும், நெல்லையில், காங்., 11,008, பாஜக 8,269, அதிமுக 1,594, நாதக 1,223 வாக்குகளும் பெற்றுள்ளன.
தபால் வாக்குகளில் பின்னடைவை சந்தித்திருந்த INDIA கூட்டணியின் கை தற்போது ஓங்கத் தொடங்கியிருக்கிறது. 9.30 நிலவரப்படி பாஜக 285 தொகுதிகளிலும் காங்கிரஸ் 221 தொகுதிகளிலும் முன்னணியில் உள்ளன. பிற கட்சிகள் 23 தொகுதிகளில் முன்னணியில் உள்ளன. மாறுமா ட்ரெண்ட்?
ஒடிஷா சட்டசபை தேர்தலில் பாஜக 11 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சற்றுமுன் கிடைத்த தகவலின் படி, ஆளும் கட்சியான ஜனதா தளம் 8 இடங்களிலும், காங்., ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தல் முடிவுகளை WAY2NEWS செயலியில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆந்திர சட்டசபை தேர்தலில் சந்திர பாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 68 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சற்றுமுன் கிடைத்த தகவலின் படி, ஆளும் கட்சியான ஜெகனின் YSR காங்., 12 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜன சேனா 13 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது. பாஜக 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் YSR காங்., கட்சி பெரும் பின்னடைவை சந்திக்கும் என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் திருமாவளவன் பின்னடைவை சந்தித்துள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரஹாசன் முன்னிலையில் இருந்து வருகிறார்.
Sorry, no posts matched your criteria.