News April 24, 2024

களைகட்டும் சித்திரைத் திருவிழா

image

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நாளை அதிகாலை நடைபெற உள்ளது. இதற்காக, கோரிப்பாளையம் பாலம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. கோரிப்பாளையம் பகுதியில் பக்தர்கள் குவிந்துள்ளதால் திருவிழா களைகட்டியுள்ளது. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் 2,400 பேர் மட்டுமே ஆற்றில் இறங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News April 24, 2024

நீதிமன்றத் தீர்ப்புகளில் பாஜக ஆதிக்கம்

image

நீதிமன்றத் தீர்ப்புகளில் பாஜக தலைவர்களின் ஆதிக்கம் உள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் கடந்த 2016இல் 25,753 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாகக் கூறி அம்மாநில உயர்நீதிமன்றம் அந்த நியமனத்தை ரத்து செய்தது. இந்நிலையில், தேர்தல் பரப்புரையில் பேசிய மம்தா, பாஜக நீதித்துறை மற்றும் தீர்ப்புகளில் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

News April 24, 2024

கிட்னி செயலிழப்புக்கான அறிகுறிகள்

image

1) சிறுநீர் அடிக்கடி கழித்தல்
2) இரத்தத்தில் அசுத்தம் சேர்வதால் மிக சோர்வாக உணர்தல்
3) இரத்த அழுத்தம் அதிகரித்தல்
4) பசியின்மை மற்றும் குமட்டல்
5) தோல் வறட்சி
6) தூக்கமின்மை
7) கால்களில் வீக்கம்
ஆகியவை கிட்னி செயலிழப்புக்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

News April 24, 2024

ராஜஸ்தான் அணிக்கு 180 ரன்கள் இலக்கு

image

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 179/9 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை அணி சார்பில் சிறப்பாக ஆடிய திலக் வர்மா 65, நேஹல் வதேரா 49 ரன்கள் எடுத்தனர். RR சார்பில் சாஹல் 1, ஆவேஷ் கான் 1, போல்ட் 2, சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து RR அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2024

யாருக்கெல்லாம் இடஒதுக்கீடு கிடைக்கும்?

image

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை இன்று முதல் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவற்ற குழந்தைகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இவர்களுக்கு அடுத்தே மற்றவர்களுக்கு வழங்கப்படும்.

News April 24, 2024

20 வருடங்களுக்கு பிறகு இணைந்த ஜோடி

image

மோகன்லால் – ஷோபனா இணைந்து நடிக்கும் ‘L 360′ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. மோகன்லாலுடன் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளதாக நடிகை ஷோபனா சில நாள்களுக்கு முன் கூறியிருந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இது மோகன்லாலுடன் ஷோபனா இணைந்து நடிக்கும் 56ஆவது படமாகும். மோகன்லாலுக்கு இது 360ஆவது படம் ஆகும். ஷோபனா 20 வருடங்களுக்கு பிறகு மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார்.

News April 24, 2024

கே.எஸ்.ஈஸ்வரப்பா பாஜகவில் இருந்து நீக்கம்

image

கர்நாடகாவில் முன்னாள் துணை முதல்வர் கே.எஸ்.ஈஸ்வரப்பா பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அடுத்த 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்த முறை பாஜக போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஈஸ்வரப்பா, ஷிவமொக்கா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இதனால் பாஜகவில் இருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார்.

News April 24, 2024

இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக மோடி பேச்சு

image

முத்தலாக் தடைச் சட்டம் மூலம் இஸ்லாமிய பெண்களின் வாழ்க்கை பாதுகாக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உ.பி., அலிகாரில் பேசிய அவர், இஸ்லாமிய மக்களுக்காக பல்வேறு உதவிகளை பாஜக செய்து வருகிறது. ஹஜ் பயணத்திற்கான நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குவதாக தெரிவித்தார். முன்னதாக, நேற்று இஸ்லாமியர்கள் தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்த அவர், இன்று அதற்கு நேர் எதிராக பேசியுள்ளார்.

News April 24, 2024

முதல் ஓவரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள்

image

இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் முதல் ஓவரிலேயே மும்பை வீரர் ரோஹித் ஷர்மாவை வீழ்த்தியதன் மூலம் போல்ட் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் போட்டிகளில் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகளை (28) வீழ்த்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவரைத் தொடர்ந்து புவனேஷ் குமார் (27), பிரவீன் குமார் (15), சந்தீப் ஷர்மா (13), தீபக் சாஹர் (12), ஜாஹீர் கான் (12) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

News April 24, 2024

தலைமை ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை

image

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றிவந்த முருகன், 4ஆம், 5ஆம் வகுப்பைச் சேர்ந்த 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். 10 ஆண்டுகளாக விசாரிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது.

error: Content is protected !!