India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளன. புதுச்சேரி, தென்காசி, வடசென்னை, மத்திய சென்னை, தஞ்சை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.
ஆந்திர அரசியல் வரலாற்றில் திடீர் திருப்பமாக நடிகரும், ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் எதிர்கட்சித் தலைவராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அவரது கட்சி போட்டியிட்ட 21 தொகுதிகளில் 20 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள நிலையில், ஆளும்கட்சியாக இருக்கும் YSR காங்., 15 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதனால் பவன் கல்யாண் கட்சி 2ஆம் இடத்தைப் பிடித்து எதிர்க் கட்சியாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் தொகுதியில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் செல்வம் 94,925 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 61,602 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேஷ் 26,740 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
தமிழ்நாட்டில் 3ஆவது பெரிய கட்சி என்ற அந்தஸ்துக்கு பாஜக – நாதக இடையே கடும் போட்டி நிலவி வந்தது. ஆனால், இதுவரை வெளியான தேர்தல் முன்னணி நிலவரப்படி பாஜக பல இடங்களில் 3ஆவது இடத்தையும், சில இடங்களில் 2ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. அதேசமயம், நாம்தமிழர் வாக்கு வித்தியாசமும் கணிசமாக குறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், வாக்கு வித்தியாசத்தில் அக்கட்சி தொடர்ந்து 4ஆவது இடத்தில் உள்ளது.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சிக்கியவர் முன்னாள் எம்.பி., பிரிஜ் பூஷன் சிங். இதன் காரணமாக அவருக்கு பதிலாக அவரது மகன் கரன் பூஷன் சிங்குக்கு கைசர்கஞ்ச் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, கரன் பூஷன் சிங் மற்ற வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
திருப்பூர் தொகுதியில் இந்திய கம்யூ., வேட்பாளர் சுப்பராயன் 37,477 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் 29,242 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தம் 13,258 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி 6,977 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹபூபா முப்தி போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் மியான் அல்டாப் அகமது 2.17 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மெஹபூபா முப்தி 96 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று 1.20 லட்சம் வாக்குகள் பின்தங்கியுள்ளார்.
நாகப்பட்டினம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜ் 22,536 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.
சுர்ஜித் சங்கர் (அதிமுக) – 14,014 வாக்குகள்
கார்த்திகா (நாதக) – 5,040 வாக்குகள்
ரமேஷ் (பாஜக) – 3,402 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
கேரள மாநிலம் இடதுசாரி கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படுகிறது. அங்கு இடதுசாரி கூட்டணி 2ஆவது முறையாக ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதன் கூட்டணி பின்னடைவைச் சந்தித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 13 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. வலதுசாரியாக அறியப்படும் பாஜக 2 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதன் மூலம் இடதுசாரிகளின் கோட்டைக்குள் ஊடுருவும் எனத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடக்கும் நிலையில், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னெப்போதும் இல்லாததை விட அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தெலங்கானா மாநிலத்தில் 8 தொகுதிகளிலும், கர்நாடக மாநிலத்தில் 17 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. ஆந்திராவில் 3 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
Sorry, no posts matched your criteria.