News April 24, 2024

BREAKING: உச்சத்தில் காய்கறி விலை

image

கோடை காலத்தையொட்டி காய்கறி விலை உயர்ந்துள்ளது. கிலோ ஒன்றுக்கு ₹60க்கு விற்பனையான பீன்ஸ் தற்போது ₹180க்கும், கிலோ ₹50க்கு விற்பனையான அவரை ₹100க்கும், ₹60க்கு விற்பனையான கேரட் ₹100க்கும் விற்பனையாகிறது. முள்ளங்கி, நூக்கல், முருங்கைக்காய் போன்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. தண்ணீர் தட்டுப்பாடு, வெப்பத்தை பயிர்கள் தாங்க முடியாத நிலை போன்றவற்றால் விளைச்சல் குறைந்தால், விலை உயர்ந்துள்ளது.

News April 24, 2024

காபி குடித்தால் கொழுப்பு குறைய வாய்ப்பு

image

காலையில் எழுந்தவுடனும், தலைவலி உள்ளிட்ட நேரங்களின்போதும் சூடான காபி, டீ அருந்துவதை சிலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் காபி அருந்துவது ஸ்டமினாவை அதிகரிக்க செய்யும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், காபி அருந்துவது நமது கவனத்தைக் கூர்மையாக வைத்திருக்கவும், உடலில் உள்ள கொழுப்பை கரைக்கவும் உதவும் என்றும், தலைவலி மற்றும் பசியைக் கட்டுப்படுத்துவதோடு, உடல் எடையை குறைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

News April 24, 2024

மேற்கு நோக்கி காட்சியளிக்கும் திருவான்மியூர் கோயில் சிவன்

image

திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயில், 7ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது. இறைவன் மருந்தீஸ்வரர் என்றும், தாயார் திரிபுரசுந்தரி என்றும் வணங்கப்படுகின்றனர். இத்தலம், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதரால் பாடப்பெற்றது. இங்குள்ள இறைவன், வெள்ளத்தில் நீந்தி வந்த பக்தருக்கு காட்சியளிக்க மேற்குநோக்கி திரும்பி காட்சியளித்ததாகச் சொல்லப்படுகிறது.

News April 24, 2024

பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை

image

தமிழக அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 4 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு இன்றோடு (23.04.2024) நிறைவு பெறுகிறது. ஆகையால், நாளை முதல் அவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. கடந்த ஏப்.13ஆம் தேதியுடன் முடிய வேண்டிய தேர்வுகள் மக்களவைத் தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் எனத் தெரிகிறது.

News April 24, 2024

8 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு

image

அருணாச்சலில் கடந்த 19ஆம் தேதி நடந்த நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலுடன் சட்ட சபைக்கும் வாக்குப்பதிவு நடந்தது. இதில், சில இடங்களில் வன்முறை சம்பவங்களும், சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் சேதமடைந்தன. இதனால் அங்கு 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தொடர்ந்து, நாளை (ஏப்.24) அங்கு மறு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

News April 24, 2024

தர்பூசணி, இளநீர் விற்பனை, விலை அதிகரிப்பு

image

தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருவதால் தர்பூசணி, எலுமிச்சை, இளநீர் விற்பனை அதிகரித்துள்ளது. அதேசமயம், இவற்றின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ ₹30க்கு விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை, தற்போது 3 மடங்கு அதிகரித்து ₹120க்கு விற்பனையாகிறது. தர்பூசணி கிலோ ₹15-20 வரையும், இளநீர் ₹50-70 வரையும் விற்பனையாவதால் மக்கள் கோடை வெப்பத்தை தணிக்க அதிகம் செலவிட வேண்டியுள்ளது.

News April 24, 2024

உங்க வீட்டில் தினமும் இரவில் மின்தடை இருக்கா?

image

தமிழகத்தில் இரவில் ஒரு மணி நேரம் மின்தடை ஏற்படத் தொடங்கி உள்ளதாக மக்கள் குமுறுகின்றனர். 2006 -2011 வரையிலான திமுக ஆட்சியில் தினமும் இரவில் மின்தடை ஏற்பட்டதால், 10 ஆண்டு ஆட்சிக்கு வரமுடியவில்லை. அதேபோலவே, கடந்த ஒரு வாரமாக சென்னை உள்பட பல பகுதிகளில் மின்தடை ஏற்படத் தொடங்கி இருக்கிறது. இதை உடனே சரி செய்ய வேண்டும். இல்லையென்றால், திமுக ஆட்சிக்கே பாதகமாக அமைந்துவிடும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

News April 24, 2024

ராணுவம்: இந்தியாவை விட 3.5 மடங்கு அதிகம் செலவிடும் சீனா

image

ராணுவத்துக்கு இந்தியாவை விட சீனா 3.5 மடங்கு அதிகம் செலவிடுவது தெரிய வந்துள்ளது. ஸ்டாக்ஹோம் இன்டர்நேசனல் பீஸ் ரிசர்ச் அமைப்பு ஆய்வு நடத்தி வெளியிட்ட அறிக்கையில், ராணுவத்துக்கு சீனா ₹24.67 லட்சம் கோடி (296 பில்லியன் அமெரிக்க டாலர்) செலவிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே ஆய்வு அறிக்கையில் இந்தியா ராணுவத்துக்கு ₹7 லட்சம் கோடி (84 பில்லியன் டாலர்) செலவிடுவதாகக் கூறப்பட்டுள்ளது.

News April 24, 2024

ராணுவத்துக்கு ₹7 லட்சம் கோடி செலவிட்ட இந்தியா

image

ராணுவத்துக்கு ₹7 லட்சம் கோடியை (84 பில்லியன் அமெரிக்க டாலர்) இந்தியா செலவிடுவது புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஸ்டாக்ஹோம் இன்டர்நேசனல் பீஸ் ரிசர்ச் அமைப்பு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியலில் முதல் 3 இடங்களில் அமெரிக்கா, சீனா, ரஷ்யாவும், 4ஆவது இடத்தில் இந்தியாவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2024

லண்டனில் நடக்கிறது அம்பானியின் மகன் திருமணம்

image

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்டின் திருமணம் லண்டனில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் மாதத்தில் குஜராத்தின் ஜாம்நகரில் இவர்களது திருமணத்துக்கு முந்தையக் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிலையில், ஜூலை மாதத்தில் லண்டன் ஸ்டோக் பார்க்கில் இவர்களது திருணம் நடக்க உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!