India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 94,392 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.
மாணிக்கம் தாக்கூர் (காங்கிரஸ்) – 87,390 வாக்குகள்
ராதிகா சரத்குமார் (பாஜக) – 34,463 வாக்குகள்
கெளசிக் (நாதக) – 18,885 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு ஜூன் 9இல் பதவியேற்க உள்ளார். ஆட்சியமைக்கத் தேவையான 88 இடங்களைத் தாண்டி, TDP தற்போது 134 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால், சந்திரபாபு நாயுடு 4வது முறையாக முதல்வராக பொறுப்பேற்பது, உறுதியாகியுள்ளது. போட்டியிட்ட 21 தொகுதிகளில் 20 இடங்களில் ஜன சேனா முன்னிலை வகிக்கும் நிலையில், பவன் கல்யாண் எதிர்கட்சித் தலைவராக அமரக்கூடும் எனத் தெரிகிறது.
ராமநாதபுரத்தில் போட்டியிட்ட Ex CM ஓபிஎஸ் உள்பட 5 ஓபிஎஸ்-களும் பின்னடவை சந்தித்துள்ளனர். திமுக கூட்டணியில், IMUL வேட்பாளர் நவாஸ் கனி 89,278 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். Ex CM ஓபிஎஸ் 50,323 வாக்குகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளார். இதேபோல ஒச்சப்பன் பன்னீர்செல்வம் – 416, ஒய்யாதேவர் பன்னீர்செல்வம் – 206, ஒய்யாரம் பன்னீர்செல்வம் – 157, ஒச்சாதேவர் பன்னீர்செல்வம் – 79 வாக்குகள் பெற்றுள்ளனர்.
கடலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 1.29 லட்சம் வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து 83,058 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 50,820 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் மணிவாசகன் 15,435 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
பஞ்சாப்பின் காதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில் காலிஸ்தான் ஆதரவாளரும் ’வாரிஸ் பஞ்சாப் தே’ கட்சித் தலைவருமான அம்ரித்பால் சிங் போட்டியிட்டுள்ளார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், நாட்டின் இருபெரும் (NDA & INDIA) கூட்டணிகளுக்கு தலைவலி அளிக்கும் போட்டியாளராக களத்தில் உள்ளார். சிறையில் இருக்கும் அவர் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பலத்த அடியாக அமைந்துள்ளது. குமரியில் நாம் தமிழர் கட்சி 3ஆவது இடம் பிடித்த நிலையில், அதிமுக 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பல தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3ஆவது இடத்தை பிடிக்க போராடி வருகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்காசியில் நாம் தமிழர் தற்போது வரை 64,000 வாக்குகளை பெற்றுள்ளது.
கர்நாடகாவிலும், தெலங்கானாவிலும் காங்., ஆட்சியமைப்பதற்கு அடித்தளமாக இருந்த சசிகாந்த் செந்தில், திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். இந்த தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய அவர் ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டத்தில் உள்ளார். இதனால் அவர், தமிழ்நாடு காங்கிரஸின் எதிர்காலம் என சொல்லப்படுகிறது.
தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி 20 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 5ஆம் சுற்று நிறைவடைந்த நிலையில், திமுக வேட்பாளர் மணியை விட 20,421 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். கடலூர் தொகுதியில் போட்டியிடும் சவுமியாவின் சகோதரரும், அன்புமணியின் மைத்துனருமான விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்) 56 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் பாஜக, ஜனசேனா உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி 21 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அங்கு ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதேசமயம், INDIA கூட்டணி அங்கு ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்கவில்லை.
பாஜகவின் கோட்டையாக கருதப்படும் உத்தரப் பிரதேசத்தில், தனிப்பெரும் தலைவராக சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அகிலேஷ் யாதவ் உருவெடுத்துள்ளார். பாஜகவுக்கு கடும் போட்டி தரும் வகையில், சமாஜ்வாடி தொடர்ந்து 33 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் புல்டோசர் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அகிலேஷுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.