India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாலியல் சர்ச்சையில் சிக்கி கைதான மஜத வேட்பாளர் பிரஜ்வால் ரேவண்ணா, மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்டார். அந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஸ் எம். பாட்டீல் 5 லட்சத்துக்கும் அதிகமாக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பிரஜ்வால் ரேவண்ணா தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 14 தொகுதிகளில் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. INDIA கூட்டணி 10 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காலையில் 20 தொகுதிகள் வரை பாஜக முன்னிலையில் இருந்தது. 4 தொகுதியில் முன்னிலையில் இருந்த INDIA கூட்டணி, தற்போது படிப்படியாக வெற்றிக் கணக்கை அதிகரித்து வருகிறது.
பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி 95,590 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கார்த்திக் அப்புசாமி 59,884 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக வேட்பாளர் வசந்தராஜன் 42,430 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் சுரேஷ்குமார் 11,759 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
ஒடிஷா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, பிஜு ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. முன்னதாக, அங்கு பாஜகவின் தாமரை மலரும் அறிகுறிகள் தென்பட்ட நிலையில், தற்போது பிஜு ஜனதா தளத்தின் கை ஓங்கத் தொடங்கியுள்ளது. சற்றுமுன்பு வரை பாஜக 70 இடங்களிலும், பிஜு ஜனதா தளம் 61 இடங்களிலும், காங்., 13 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. ஆட்சியமைக்க அங்கு 74 இடங்களில் வெற்றிபெற்றாக வேண்டும்.
சேலம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்வகணபதி 1.36 லட்சம் வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 1.29 லட்சம் வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாமக வேட்பாளர் அண்ணாதுரை 33,864 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும், நாம் தமிழர் வேட்பாளர் மனோஜ்குமார் 15,571 வாக்குகளுடன் 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
2019 தேர்தலைவிட இத்தேர்தலில் 3 இடங்களில் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. அதன்படி, மகாராஷ்டிராவில் 2019இல் 1 தொகுதியில் வென்ற காங்கிரஸ் தற்போது 9 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் 3 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 9 இடங்களில் முன்னிலையில் உள்ளது. உ.பியில் 1 தொகுதியில் வென்ற அக்கட்சி, தற்போது 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 2,15,203 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். அதிமுக வேட்பாளர் பிரேம் குமார் 80,902 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், தமாகா வேட்பாளர் வேணு கோபால் 56,740 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
பிஹாரில் பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 15 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தேசிய அளவில் பாஜக கூட்டணி 291இல் முன்னிலையில் உள்ளது. இதில் ஐக்கிய ஜனதா தளத்தின் 15 தொகுதிகளை கழித்தால் பாஜக கூட்டணிக்கு 276 இடங்களே உள்ளன. பிஹார் முதல்வராக பலமுறை நிதிஷ் அணி மாறியுள்ளார். அதுபோல் இந்த முறை இந்தியா கூட்டணிக்கு மாறினால், பாஜகவுக்கு நெருக்கடி ஏற்படும்.
அதிமுகவை மீட்க வேண்டும் என்ற வேட்கையோடு பாஜக கூட்டணியில் இணைந்து ராமநாதபுரத்தில் போட்டியிட்ட ஓபிஎஸ் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார். அந்த தொகுதியில் சொந்த சமூக வாக்கு அதிகமாக இருப்பதை நம்பி களமிறங்கியபோதும், அது அவருக்கு கைகொடுக்கவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரின் அடுத்த அரசியல் நகர்வு எப்படி இருக்கப்போகிறது என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது.
கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளுக்கான முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது. இதில் பாஜக கூட்டணி 18 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் பாஜக 16 தொகுதிகளிலும், மஜத 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. எதிர்திசையில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மஜத தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.