News April 24, 2024

இந்தியாவிலேயே ஈரோடு மாவட்டம் 3ஆவது இடம்

image

இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பாவில் அதிகபட்ச வெப்பம் பதிவானது. அதற்கு அடுத்தப்படியாக ஈரோட்டில் வெப்ப அலை வீசியதாகவும், 43 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெயிலால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் கவனமாக இருக்கவும்.

News April 24, 2024

வாக்களிக்க வைக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது

image

மக்களை வாக்களிக்க வைக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் பலருடைய பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும், தனது குடும்பத்தில் சிலரது பெயரும் இல்லை என்றும் கூறிய அவர், இந்த குளறுபடி குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும், இதுபோன்று சொதப்பலாக ஒரு தேர்தல் நடந்ததில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

News April 24, 2024

விஜயகாந்துக்கு பத்மபூஷன் தாமதம்

image

மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு டெல்லியில் நேற்று நடந்த விழாவில் பத்மபூஷன் விருது வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு விருது அளிக்கவில்லை. தாமதமாக விருதை அறிவித்துவிட்டு அதனை வழங்குவதிலும் தாமதம் செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, விருதுகள் அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரே நேரத்தில் வழங்கப்படாது. அடுத்தகட்டமாக அவருக்கு விருது வழங்கப்படும் என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

News April 24, 2024

பிரதமர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

image

பிரதமர் மோடியின் அவதூறு பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில காங். தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். காங். தேர்தல் அறிக்கையில் கூறாததை மோடி திரித்துக் கூறியிருப்பதாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிரான விஷமத்தனமான கருத்துக்களைப் பேசி வருவதாகவும் சாடினார். மேலும், அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கும் அவருக்கு மக்கள் உரிய படிப்பினை வழங்குவார்கள் என்றும் கூறினார்.

News April 24, 2024

சர்ச்சையாக பேசுவதை பிரதமர் தவிர்க்க வேண்டும்

image

இஸ்லாமிய மக்கள் குறித்து பிரதமர் மோடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு இபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேஷ கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வாக்கு வங்கி அரசியலுக்காக இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்தை வெளிப்படுத்துவது உகந்ததல்ல. இதுபோன்ற கருத்துகள் சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது எனத் தெரிவித்துள்ளார்.

News April 24, 2024

மன்மோகன் சிங் மீது மோடி மீண்டும் குற்றச்சாட்டு

image

முஸ்லிம்களுக்கே நாட்டின் வளங்கள் மீது முதல் உரிமை இருப்பதாக மன்மோகன் சிங் தெரிவித்ததாக பிரதமர் மோடி மீண்டும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இதே குற்றச்சாட்டை மோடி அண்மையில் முன்வைத்தபோது, அதை காங்கிரஸ் மறுத்திருந்தது. இந்நிலையில் ராஜஸ்தானில் இன்று பேசிய மோடி, காங்கிரஸ் கட்சி எப்போதும் திருப்திபடுத்துதல், வாக்கு வங்கி அரசியலை நினைத்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.

News April 24, 2024

BREAKING: தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்

image

தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம், கர்நாடகாவின் உள் மாவட்டங்கள், ஒடிசா, உ.பி, பிஹார் மாநிலங்களுக்கு மஞ்சள் அலர்ட், மேற்கு வங்கத்திற்கு அதிக வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பிற்பகல் நேரத்தில் வெயில் அதிகளவில் இருக்கும் என்பதால், குழந்தைகள், முதியோர் வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளது.

News April 24, 2024

அரசியலமைப்பை வைத்து விளையாடும் காங்கிரஸ்

image

அரசியலமைப்பை வைத்து காங்கிரஸ் விளையாடுவதாக மோடி குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தான் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், 2004இல் ஆட்சிக்கு வந்ததும் எஸ்சி-எஸ்டி இடஒதுக்கீட்டை குறைத்து முஸ்லிம்களுக்கு அளிக்க காங்கிரஸ் முயன்றதாகத் தெரிவித்தார். இது அரசியலமைப்புக்கு எதிரானது என தெரிந்தும் காங்கிரஸ் செய்ததாகவும், அரசியலமைப்பு மீது அக்கட்சிக்கு அக்கறை இல்லையென்றும் மோடி குறிப்பிட்டார்.

News April 24, 2024

தற்கொலைக்கு முன் ஷர்மிளா எழுதிய கடிதம்

image

ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனது காதல் கணவர் பிரவீனுடன் வாழ ஆசையாக இருந்தேன். ஆனால், அவரை என்னிடம் இருந்து பிரித்து விட்டீர்கள். அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நானும் அவன் கூடவே போறேன் என உருக்கமாக கூறியுள்ள ஷர்மிளா, தனது தற்கொலைக்கு பெற்றோரும், சகோதரர்களுமே காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

News April 24, 2024

மீண்டும் பாஜகவில் இணைவேன்

image

மக்களவைத் தேர்தலில் சீட் தராததால், கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா ஷிவமொக்கா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதனால் நேற்றைய தினம் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து அவர், கட்சியில் இருந்து நீக்கியதற்கு தான் அஞ்சவில்லை என்றும் தனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாஜகவில் இணைவேன் என்றும் கூறினார்.

error: Content is protected !!