India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐபிஎல் ரன்குவிப்பில் ராகுல் டிராவிட்டை ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வால் முந்தியுள்ளார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 60 பந்துகளில் 104 ரன்களை அவர் விளாசினார். இதன்மூலம் ராஜஸ்தான் அணி சார்பில் அவர் குவித்த ரன்கள் எண்ணிக்கை 1,397ஆக அதிகரித்தது. ராகுல் டிராவிட் 1,324 ரன்கள் குவித்து, ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன் எடுத்த வீரர் பட்டியலில் 5ஆவதாக இருந்தார். அதை நேற்று ஜெய்ஸ்வால் முந்தினார்.
ரஜினியின் ‘கூலி’ பட டீசரை பார்த்த ரசிகர்கள் அதனை டீகோடிங் செய்யத் தொடங்கியுள்ளனர். இதில் தங்கம் தொடர்பான காட்சிகள் அதிகம் இருப்பதால், படம் தங்கக் கடத்தல் தொடர்புடையதாக இருக்கலாம் என ஊகித்துள்ளனர். அப்பாவும், தாத்தாவும் வந்தார்கள் என ரஜினி பேசும் வசனத்தை ஏற்கெனவே அவர் ‘ரங்கா’ படத்தில் பேசி இருக்கிறார். அத்துடன், இது சூர்யா தோன்றும் ‘ரோலக்ஸ்’ பாத்திரத்தின் முன்கதை என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
அதிமுகவின் சின்னமான “இரட்டை இலை”யை கேரளத்தில் கேரள காங்., எனும் மாநில கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதனால் அங்கீகாரம் பெற்ற கட்சியான அதிமுகவின் சின்னத்தை இன்னொரு மாநில கட்சிக்கு வழங்க முடியுமா? என கேள்வி எழுகிறது. அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியின் சின்னத்தை கட்சி போட்டியிடாத வேறு மாநில கட்சிக்கு வழங்குவது நடைமுறைதான். ex: தெலுங்கு தேசத்தின் சைக்கிள் சின்னத்தை தமிழகத்தில் தமாகா பெற்றது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியில் விசிக 2 தொகுதிகளில் போட்டியிட்டது. தமிழகம் தவிரத் தெலங்கானாவில் 10 தொகுதிகளிலும், கர்நாடகத்தில் 6 தொகுதிகளிலும், கேரளத்தில் 3 தொகுதிகளிலும் விசிக போட்டியிடுகிறது. இந்நிலையில், விசிக தலைவர் திருமாவளவன் கர்நாடகத் துணை முதல்வர் சிவக்குமாரைச் சந்தித்து காங்கிரஸ் கட்சிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநிலத் தொழிலாளர்களுக்கு அம்மாநிலங்களில் தேர்தல் நடக்கும் அன்று விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்தகட்டமாக தேர்தல் நடக்கும் ஏப்.26ஆம் தேதி, அனைத்து நிறுவனங்களும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் அளித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஏப்.19இல் ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதனால் அவர் மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு தலைமைச் செயலகம் செல்லவில்லை. சுமார் ஒரு மாதத்திற்கு மேல் நீடித்த தேர்தல் பரபரப்பு தற்போது ஓய்ந்த நிலையில், இன்று அவர் மீண்டும் தலைமைச் செயலகம் சென்றார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் பத்திரிகைகளில் பெரிய விளம்பரம் வெளியிட பாபா ராம்தேவ் முடிவு செய்துள்ளார். உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையின்போது, முன்னரே மன்னிப்பு விளம்பரம் வெளியிடாமல் நேற்று வெளியிட்டது ஏன்? பெரிய அளவில் வெளியிடப்பட்டதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, விரைவில் பெரிய விளம்பரம் வெளியிட இருப்பதாக ராம்தேவ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எண்ணெய், மளிகைப்பொருட்கள் விலை உயர்வால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.2000 கூடுதல் செலவு ஆகிறது. எனவே, விலைவாசி உயர்வை தமிழக அரசு உடனே கட்டுப்படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலின் அளவை 2 கிலோவாக உயர்த்த வேண்டும். மளிகைப் பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
விளம்பரங்கள் வெளியிடப்பட்ட அதே பக்கத்தில் அதே அளவுக்கு மன்னிப்பு பிரசுரிக்கப்பட்டதா என பாபா ராம்தேவ், பதஞ்சலி சிஇஓ பாலகிருஷ்ணாவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. வழக்கு விசாரணையில் ராம்தேவ் சார்பில், ₹10 லட்சத்தில் 67 பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
விமான சிக்னலை முடக்கும் ரகசிய ஆயுதத்தை ரஷ்யா உருவாக்கியுள்ளதாக தி சன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ரஷ்யா தயாரித்துள்ள இந்த ஆயுதத்தின் பெயர் டோபோல் என்றும், அதனை லித்துவேனியா-போலந்து இடையே நிறுத்தியிருக்கிறது என்றும் கூறியுள்ளது. மேலும், பால்டிக் கடல் மீது பறந்த விமானங்களின் சிக்னல்கள் முடக்கப்பட்டதற்கு இதில் தொடர்புண்டு என்றும் அப்பத்திரிகைச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.