India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள அவர், ஆந்திராவில் முன்னேற்றம், செழிப்பை சந்திரபாபு நாயுடு ஏற்படுத்த வேண்டும் எனக் பதிவிட்டுள்ளார். மேலும், ஆந்திர மக்களின் கனவையும், நம்பிக்கைகளையும் சந்திரபாபு நாயுடு நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக 35க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற உள்ளது. கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் 38 இடங்களில் வென்றது. 75 வருட திமுக அரசியல் வரலாற்றில் இது புதிய சாதனையாக பதிவாக உள்ளது. ஆனால், அதிமுக 35 தொகுதிகளுக்கு மேல் தொடர்ந்து 3 முறை வென்றுள்ளது. 1984, 1989 மற்றும் 1991 தேர்தல்களில் அதிமுக கூட்டணி முறையே, 37, 38 மற்றும் 39 இடங்களில் வென்றுள்ளது.
திருவனந்தபுரம் தொகுதியில் கடும் போட்டிக்கு பிறகு காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் 14,926 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகருக்கும், அவருக்கும் இடையே காலை முதல் கடும் போட்டி நிலவியது. முன்னிலை நிலவரங்கள் அவ்வபோது மாறி வந்தன. இருப்பினும், இறுதியில் சசி தரூர் வெற்றி வாகை சூடினார்.
மக்களவைத் தேர்தலில் இதுவரை நடந்து முடிந்துள்ள வாக்கு எண்ணிக்கையின்படி அதிமுக ஒரு இடத்தில் கூட முன்னிலையில் இல்லை. இந்த மோசமான வீழ்ச்சிக்கு டிடிவி, ஓபிஎஸ், சசிகலா நீக்கம் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மூன்று பேரும் நீக்கப்பட்டதால், அவர்களைச் சார்ந்த சமூக வாக்குகள் அக்கட்சிக்கு கிடைக்கவில்லை. அதேபோல், கொங்கு மண்டலத்தில் உள்கட்சி பிரச்னையால் வெற்றி பெறமுடியவில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பட் வெற்றி பெற்றுள்ளார். விளவங்கோடு MLA விஜயதாரணி, சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இதனால் அந்தத் தொகுதி காலியான நிலையில், மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில், பாஜக – நந்தினி, நாம் தமிழர் – ஜெமினி, அதிமுக – ராணி உள்ளிட்டோர் போட்டியிட்ட நிலையில், தாரகை கத்பட் வெற்றி பெற்றுள்ளார்.
இபிஎஸ் தலைமையின் கீழ் அதிமுக வந்ததில் இருந்து ஒரு தேர்தலில் கூட வெற்றிபெறவில்லை. இது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால், அதிமுக மேலும் பலவீனமடையும். எனவே, இந்த தேர்தலில் இருந்து அவர் பாடம் கற்றுக்கொண்டு, பிரிந்து சென்றவர்களை இணைக்கும் பணிகளில் இறங்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் இபிஎஸ் மீது தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கட்சியை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே 2026 சட்டமன்ற தேர்தலில் ஓரளவுக்கு வெற்றிபெற முடியும். அதுமட்டுமல்ல, ஓபிஎஸ், டிடிவி உடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மீண்டும் அவர்களை இணைக்க வேண்டும் என பலரும் கருதுகிறார்கள். இது சாத்தியமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக என்ற இரும்பு கோட்டை ஆட்டம் காண ஆரம்பித்தது. ஆரம்பத்தில் உறுதியான தலைவர்கள் இல்லாததால், தொண்டர்கள் மத்தியில் தொய்வு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, சசிகலா, தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ் என பல அணிகளாக அதிமுக பிரிந்ததால், அதிமுக என்ற கோட்டைக்கு அடித்தளமாக இருந்த தொண்டர்கள் பல்வேறு அணிகளாக சிதறி கிடக்கின்றனர். இதனால், அதிமுகவின் வாக்கு வங்கி அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது.
ஒடிஷா சட்டசபை தேர்தலில் பாஜக 80 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. சற்றுமுன் கிடைத்த தகவலின் படி, ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் 49 இடங்களிலும், காங்., 15 இடங்களிலும், பிற கட்சிகள் 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. ஆட்சியமைக்கத் தேவையான 74 இடங்களை விட, கூடுதலான இடங்களில் பாஜக முன்னிலையில் இருப்பதால், முதல் முறையாக ஒடிஷாவில் தாமரை மலர்கிறது.
ஆந்திர சட்டசபைத் தேர்தலில் ஆளும் YSR காங்., கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அக்கட்சி 13 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருப்பதால், ஆட்சி கைநழுவிப் போகிறது. தோல்வியைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து ஜெகன் மோகன் ரெட்டி விலகுகிறார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து அவர் ராஜினாமா கடிதத்தை கொடுப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. TDP அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது.
Sorry, no posts matched your criteria.