India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உலகில் உள்ள 184 நாடுகளில் பயன்படுத்தும் வகையில் சர்வதேச ரோமிங் திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. பிற நாடுகளுக்குச் செல்வோர் வசதிக்காக, ஒரு நாளைக்கு ₹133 முதல் ₹2998 வரை பயணத்தின் கால அளவைப் பொறுத்துத் திட்டங்களைத் தேர்வு செய்யலாம். எந்த நாட்டுக்குச் சென்றாலும் ஏர்டெல் தேங்ஸ் ஆப் மூலமாக இந்த ரீசார்ஜ் திட்டத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
லக்னோவுக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய ருதுராஜ் 108*, சிவம் துபே 66 ரன்கள் அடித்தனர். வழக்கம்போல அதிரடியாக ஆடிய துபே இன்று 7 சிக்ஸர்கள் விளாசினார். இதையடுத்து LGS அணிக்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. LSG சார்பில் ஹென்றி, மோசின் கான், யஷ் தாகூர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி அசத்தியுள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வரும் அவர், 56 பந்துகளில் 11 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 103 ரன்களை எட்டினார். சேப்பாக்கம் மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்து வரும் சென்னை அணி தற்போது வரை 18 ஓவர்களில் 178/3 ரன்கள் குவித்துள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்னு கமெண்ட்ல சொல்லுங்க.
பணிபுரியும் பெண்களுக்குக் குழந்தைப் பராமரிப்பு விடுப்பு வழங்க மறுப்பது அடிப்படை உரிமையை மீறும் செயல் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இமாச்சலைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியை, தனது குழந்தையைக் கவனிக்க விடுப்பு வழங்க மாநில அரசு மறுப்பதை எதிர்த்து வழக்குத் தொடுத்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட், தாய்மார்களுக்கு விடுப்பு வழங்க மறுப்பது, அவர்களைப் பணியை விட்டே வெளியேற்றுவதற்குச் சமம் எனக் கூறியுள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நிதானமாக ஆடிவரும் சென்னை அணி முதல் 10 ஓவர்களில் ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. ரஹானே, மிட்செல், ஜடேஜா மூவருமே ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் ஆட்டமிழந்தனர். பின்னர் 12ஆவது ஓவரில் களமிறங்கிய ஷிவம் தூபே 12.5ஆவது ஓவரில் முதல் சிக்ஸரைப் பதிவு செய்தார். அதன்பின் ருதுராஜ் 14.1ஆவது ஓவரில் தனது முதல் சிக்ஸரை அடித்தார்.
2024ஆம் ஆண்டின் 4ஆவது பௌர்ணமியான இன்று பிங்கு மூன் எனப்படும் சூப்பர் மூனைப் பார்க்க முடியும். கிழக்கு அமெரிக்காவில் வசந்தக் காலத் தொடக்கத்தில் Moss pink என்ற பூ பூக்கும். அதே காலக்கட்டத்திலும், நேரத்திலும் இந்த நிலவு தோன்றுவதால் பிங்க் மூன் என்று அழைக்கப்படுகிறது. பெரிதாகத் தோன்றும் நிலவை அமெரிக்காவில் இன்று மாலை 7.49 மணிக்கும், இந்தியாவில் நாளை காலை 5.18 மணிக்கும் பார்க்க முடியும்.
தனது உறவினரான அபிஷேக் பானர்ஜியை பாஜகவினர் கொலை செய்ய முயன்றதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவினருக்கு எதிராகப் பேசும் அனைவரையும் கொல்லவோ, சிறையில் தள்ளவோ முயல்வதாகக் கூறிய அவர், தேர்தலில் வெற்றிபெறுவீர்கள் என நம்பிக்கை இருந்தால் மக்களை ஏன் மிரட்டுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தன்னையும், அபிஷேக்கையும் பாஜக குறிவைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
‘மான் கராத்தே’ படத்தை இயக்கிய திருக்குமரன், நடிகர் அருண் விஜய்யின் 36ஆவது படத்தை இயக்கவுள்ளார். சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இந்நிலையில், அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ‘ரெட்ட தல’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டரை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது X பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் தண்ணீர்ப் பந்தல்களை அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் இன்று மாவட்டச் செயலாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைப்பதைச் சுட்டிக்காட்டி, அதில் இருந்து மக்களைக் காக்க ஏப்ரல் 25 முதல், தமிழகத்தில் தண்ணீர்ப் பந்தல்களை உருவாக்கி மக்களுக்கு இலவசமாகத் தண்ணீர் வழங்க அறிவுறுத்தினார்.
லக்னோ அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிவரும் ருதுராஜ் அரைசதம் கடந்துள்ளார். தற்போது வரை 36 பந்துகளை எதிர்கொண்ட அவர் 9 பவுண்டரிகளுடன் 64* ரன்கள் அடித்துள்ளார். இதையடுத்து CSK அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி அதிக முறை (17) 50+ ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்ததாக டு ப்ளஸி (16) உள்ளார். CSK 11 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.