India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரானுடன் வர்த்தகத் தொடர்பில் ஈடுபட்டால், பொருளாதார தடை விதிக்க நேரிடுமென பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. 3 நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபை சந்தித்து பேசினார். அப்போது, இருநாடுகள் இடையே பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாக 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த சூழலில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேரறிவின் சிறுப்பிள்ளைத் தனங்களும், சிற்றறிவின் மேதா வித்தனங்களும் நிறைந்த மண்ணின் மைந்தர்களில் ஒருவரான எழுத்தாளர் ஜெயகாந்தன் பிறந்த நாள் இன்று. ‘என் வாசகனுக்குப் பிடித்தவிதமாக எல்லாம் எழுத முடியாது. நான் எழுதுவதை விரும்புகிறவனே எனது வாசகன்’ என எண்ணுவதை அப்பட்டமாக வெளிப்படுத்துவதில் இவருக்கு நிகர் யாருமில்லை. தமிழ் இலக்கிய உலகில் ஜெயகாந்தனின் படைப்புகள் காலம் கடந்தும் என்றும் நிலைத்திருக்கும்.
விமானப் பயணத்தின் போது 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்களின் அருகிலேயே இடம் ஒதுக்க வேண்டுமென விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுடன் அமர முடியாமல் போனது குறித்து பயணிகள் புகார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, விமானப் பயணத்தின் போது குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உடனிருப்பதை உறுதி செய்ய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
➤ 1800 – அமெரிக்க காங்கிரஸ் நூலகம் நிறுவப்பட்டது. ➤ 1916 – அயர்லாந்துக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக டப்ளினில் போராட்டங்களில் இறங்கினர். ➤ 1967 – சோயூஸ் 1 விண்கலத்தில் பயணித்த ரஷ்ய வீரர் விளாடிமிர் கொமரோவ் தனது பாராசூட் திறக்கப்படாததால் உயிரிழந்தார். இவரே விண்வெளிப் பயணத்தில் உயிரிழந்த முதல் விண்வெளி வீரர் ஆவார். ➤ 1992 – இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டு வரப்பட்டது.
மேற்கத்திய ஊடகங்கள் தகவல் தெரியாமல் அல்ல, தாங்களும் இந்தியத் தேர்தலில் போட்டியிடுவதாகக் கருதுவதால், நமது ஜனநாயகத்தை விமர்சித்து வருவதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மேற்கத்திய ஊடகங்கள் நமது நாட்டின் தேர்தல் முறை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், தேர்தல் ஆணையம், காலநிலை என அனைத்தையும் பற்றி கேள்வி கேட்பார்கள் எனவும் சாடினார்.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) கடந்த மார்ச் 26இல் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் 83% இளைஞர்கள் வேலையின்மையால் அவதிப்படுவதாகக் கூறியிருந்தது. இந்த அறிக்கைக்கு மத்திய அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், சர்வதேச அளவிலான தொழிலாளர்கள் புலம்பெயர்வு, பல்வேறு பணிபுரியும் தொழிலாளர்களின் வளர்ச்சியை ஐஎல்ஓ கணக்கில் கொள்ளவில்லையென மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க பொதுத்துறை வங்கிகளுக்கு அதிகாரமில்லையென மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வங்கிகளிடம் கடன் வாங்கி, திருப்பி செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வோரைத் தடுக்க, 2018இல் மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளுக்கு இந்த அதிகாரத்தை அளித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசின் அறிவிப்பு, அரசியலமைப்புக்கு எதிரானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: வான் சிறப்பு
▶குறள் எண்: 11
▶குறள்: வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
▶பொருள்: உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.
ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 28ஆம் தேதி சென்னை – ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நாளை (ஏப்.25) நடைபெறுகிறது. நாளை காலை 10.40 மணிக்கு பேடிஎம் மற்றும் www.insider.in தளத்தில் டிக்கெட் விற்பனை நடைபெறும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. டிக்கெட் விலை ரூ.1,700 முதல் அதிகபட்சமாக ரூ.6,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் தெற்கில் அமைந்துள்ள குவாங்டாங் மாகாணம் முழுவதும் கனமழைக் காரணமாக வெள்ளத்தில் மிதந்து வருகிறது. வயல்வெளிகள், கிராமங்கள் மற்றும் நகர்ப்பகுதிகளில் வெள்ளம் வடியாமல் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். கனமழைக்கு 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 10 பேர் மாயமாகி உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.