India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு பலர் அரசியலில் இருக்கிறார்கள் என்ற நிதிஷ்குமாரின் கருத்துக்கு தேஜஸ்வி யாதவ் பதிலளித்துள்ளார். நிதிஷ் எதைச் சொன்னாலும் அதை ஆசிர்வாதமாகவே கருதுவோம். ஏனெனில், அவர் வயதில் மூத்தவர். ஆனால், இதைச் சொல்வதால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை எனக் கூறினார். முன்னதாக லாலுவை குறிவைத்து நிதிஷ் தேர்தல் பரப்புரையில் இவ்வாறு பேசினார். லாலுவுக்கு 7 மகள் 2 மகன்கள் உள்ளனர்.
சென்னைக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், லக்னோ வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் புதிய சாதனை படைத்துள்ளார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்த அவர், 13 Four, 6 Six என விளாசி அசத்தினார். 63 பந்துகளில் 124* ரன்கள் குவித்த அவர், CSK அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார். ஒற்றை ஆளாகப் போராடி அணிக்கு வெற்றித் தேடித் தந்த அவருக்கு, ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இன்று முதல் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், ஜூன் 4 தேர்தல் முடிவு, வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தனியார் பள்ளிகளில் 1-9ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள முக்கியமான 90 ஏரிகளில் 54 டி.எம்.சி, அதாவது 24 சதவீதம் மட்டுமே நீர் இருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏரிகளுக்கு வரத்து இல்லாத நிலையில், குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போது கோடையில் வெப்பம் அதிகரிப்பால், தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க முடியவில்லை. இதனால் கோடைக்காலத்தை குடிநீர் தட்டுப்பாடு இன்றி சமாளிப்பது கேள்விக்குறியாகி உள்ளது.
மத வேறுபாடின்றி அனைவருக்கும் நீதி வழங்குவதே காங்கிரஸின் நோக்கமென முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மேலும், ஏதேனும் ஒரு சமூகத்தை திருப்திப்படுத்துவது போல், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஒரு பத்தியாவது இருப்பதாக காட்ட முடியுமா என்று பிரதமர் மோடிக்கும், பாஜக தலைவர்களுக்கும் சவால் விடுத்துள்ள சிதம்பரம், பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஒன்றுமே இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் 3ஆம் கட்டமாக குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு மே 7இல் நடைபெறவுள்ளது. 96 இடங்களுக்கு போட்டியிட 2,963 பேர் மனு செய்து இருந்தனர். வேட்புமனு பரிசீலனைக்கு பின்பு 1,563 மனுக்கள் தகுதியானதாக ஏற்கப்பட்டது. நேற்றுடன் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிந்த நிலையில், 1,351 பேர் கொண்ட இறுதி வேட்பாளர்கள் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
▶ஏப்ரல் – 24 | ▶ சித்திரை – 11 ▶கிழமை: புதன் | ▶திதி: பிரதமை ▶நல்ல நேரம்: காலை 09:30 – 10:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை ▶கெளரி நேரம்: காலை 10:30 – 11:30 வரை, மாலை 06:30 – 07:30 வரை ▶ராகு காலம்: 12:00 – 01:30 வரை ▶எமகண்டம்: காலை 07:30 – 09:00 வரை ▶குளிகை: காலை 10:30 – 12:00 வரை ▶சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
மதுரை வண்டியூர் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி கள்ளழகர் மோட்சம் அளிக்கும் வைபவம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, இன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்வு நடைபெற உள்ளது. வரும் 25ஆம் தேதி பூப்பல்லக்கு நடைபெறும். 26ஆம் தேதி மதுரையில் இருந்து புறப்படும் கள்ளழகர், 27ஆம் தேதி அழகர் மலைக்கு திரும்புகிறார்.
சீனாவில் நுழைவுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தும், பூனையைத் துன்புறுத்தியதற்காக மாணவர் ஒருவருக்கு கல்லூரியில் சேர வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அங்கு சமீபத்தில் சூ (Xu) என்ற மாணவர் பூனையை அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதனால் நான்ஜிங் பல்கலைக்கழகம், இயற்பியல் படிப்பில் சூ முதல் மதிப்பெண் பெற்றிருந்தாலும், நடத்தை அடிப்படையில் நிராகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கருப்பு உலர் திராட்சையில் பாஸ்பரஸ் மற்றும் போரான் கால்சியம் சத்துக்கள் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்த உதவும். மேலும், ரத்த சோகை உள்ளவர்கள், இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து கருப்பு உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கும்.
Sorry, no posts matched your criteria.