India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2ஆம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நாளை மறுநாள் (ஏப்ரல் 26) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். ராகுல் காந்தி மாலை அமராவதியிலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா கேரளாவிலும் இன்று இறுதிக்கட்ட பரப்புரையை மேற்கொள்கிறார்கள்.
LSG-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், CSK கேப்டன் ருதுராஜ் மோசமான சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். பொறுப்புடன் விளையாடிய அவர், 108*(60) ரன்கள் குவித்து, CSK அணிக்காக சதம் அடித்த முதல் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார். ஆனால், போட்டியில் தோல்வி அடைந்ததால், சதம் அடித்தும் தோல்வி அடைந்த கேப்டன்கள் வரிசையில் சஞ்சு சாம்சன் (119), சச்சின்(110*), கோலி (110*) ஆகியோரைத் தொடர்ந்து 4ஆவதாக இணைந்துள்ளார்.
தேர்தல் முடிவு வந்த உடன் அமைச்சரவையை மாற்றம் செய்ய திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலில் அமைச்சர்களின் செயல்பாடு, வாங்கிக் கொடுக்கும் வாக்குகள், பொறுப்பு அமைச்சராக கடந்த இரண்டரை ஆண்டுக்காலச் செயல்பாடு, சமூக ரீதியான பிரதிநிதித்துவம் அடிப்படையில் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமாம். தேர்தலில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு முக்கிய துறைகளும் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் 40ஆவது லீக் போட்டியில் டெல்லி அணியை குஜராத் அணி இன்று எதிர்கொள்கிறது. டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ள இரு அணிகளும் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோற்ற குஜராத் அணி இந்த போட்டியில் பதிலடி தருமா என ரசிகர்கள் கமெண்டில் கூறலாம்.
படத்திற்கு தேவைப்பட்டதாலேயே ‘ரெட்ட தல’ என்று பெயரிட்டுள்ளதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார். அஜித் ரசிகர்களுக்கு என்னை பிடிக்கும் என்பது உண்மை என்றாலும் அஜித் ரசிகர்களை கவர இந்த டைட்டிலை வைக்கவில்லை. படம் வெளியான உடன் அது புரியும் வரும் என்ற அவர், இந்த தலைப்பை ஈடு செய்யும் வகையில் உழைத்திருப்பதாகவும் தெரிவித்தார். ‘ரெட்ட தல’ படத்தின் போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டிருந்தனர்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குளறுபடியாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார். பல தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நீக்கப்பட்டுள்ளார்கள். எதையுமே தேர்தல் ஆணையம் முறையாகச் செய்யவில்லை. வாக்குப்பதிவை கூட தினமும் மாற்றி அறிவிக்கிறார்கள் என்ற அவர், 2 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்றும் கூறினார்.
CSK-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், மார்கஸ் ஸ்டாய்னிஸின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. இதுவே, சென்னைக்கு எதிராக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ஏப்ரல் 19ஆம் தேதி நடந்த முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிரான 2 போட்டிகளிலும் மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இயற்கை பேரிடர்களால் 2023இல் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இந்தியா, மேலும் பல இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளும் அபாயத்தில் இருப்பதாக உலக வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஆய்வாளர்கள், இந்தியாவில் பழுப்பு நிலக்கரி, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை அதிகம் பயன்படுத்துவதால் வெப்ப அலை வீசுகிறது. பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை நிறுத்தும் வரை வெப்பநிலை மென்மேலும் அதிகரிக்கும் என எச்சரிக்கின்றனர்.
தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனு ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரி சிவகங்கையை சேர்ந்த கருப்பையா காந்தி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, மனுதாரர் ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் சிலிண்டர் பாதுகாப்பு சோதனையை இலவசமாக மேற்கொள்ளும் வசதியை எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் ரப்பர் குழாயின் தன்மை, ரெகுலேட்டர் இயக்கம், சிலிண்டர் இயக்கம் போன்றவற்றை ஆய்வு செய்ய ஏஜென்சி ஊழியர்கள் ₹200 கட்டணமாக வசூலித்தனர். ஆனால், இனி சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்களே, இலவசமாக சோதனைச் செய்து, தங்களின் மொபைல் போன் செயலியில் பதிவு செய்வர்.
Sorry, no posts matched your criteria.