India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளதற்கு பொறுப்பேற்று மோடி பதவி விலக வேண்டுமென காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இதற்கு பாஜக தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை. எனினும், இந்தத் தேர்தல் முடிவு மோடிக்கான பின்னடைவாகவேக் கருதப்படுகிறது. இதனால் மக்களிடம் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை மோடிக்கு ஏற்பட்டுள்ளது.
ஒடிஷா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் பாஜக 20 தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இம்மாநிலத்தை சுமார் கால் நூற்றாண்டு காலம் ஆட்சி செய்த நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. காங்கிரஸ் கட்சி கோரபுட் தொகுதியில் மட்டும் வெற்றிப் பெற்றது.
ஒடிஷா சட்டப்பேரவையில் உள்ள 147 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்சி வாரியாக பெற்ற இடங்களைத் தெரிந்து கொள்வோம்.
* பாஜக – 78
* பிஜூ ஜனதா தளம்- 51
* காங்கிரஸ் – 14
* சுயேச்சை -3
* மார்க்.கம்யூனிஸ்ட்- 1
ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளராக நீடிக்க சமாதானப்படுத்த தான் முயற்சித்ததாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். தனது கோரிக்கையை ஏற்பதற்கு டிராவிட் தயாராக இல்லை எனக் கூறிய அவர், தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து டிராவிட் விலகுவது தனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது என்றார். ராகுல் டிராவிட்டின் பதவி காலம் டி20 உலகக் கோப்பை தொடருடன் நிறைவடைய உள்ளது.
தேர்தல் முடிவுகள் பாஜக ஆட்சியமைப்பதற்கு சாதகமாக உள்ள நிலையில் அமைச்சரவையை கூட்டியிருக்கிறார் பிரதமர் மோடி. இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் மத்திய அமைச்சரவை கூடுகிறது. மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவிருக்கும் பாஜகவின் நகர்வுகள் உற்று நோக்கப்படுகின்றன. இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்படும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
பிஹார் மாநிலத்தில் 40 தொகுதிகளில் ஜேடியு, பாஜக, லோக் ஜனசக்தி, ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மறுமுனையில் காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் ஜேடியு, பாஜக தலா 12 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி 5 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா 4 தொகுதியிலும் வென்றுள்ளன. ஆர்ஜேடி 4, காங்கிரஸ் 3, மார்க்சிஸ்ட் 2, சுயேச்சை 1 தொகுதிகளில் வென்றுள்ளன.
தமிழகத்தில் பாஜக 11.2% வாக்குகள் பெற்றிருந்தாலும் சராசரி வாக்கு சதவீதம் சரிந்திருக்கிறது. 2019 தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 3.66% வாக்குகள் பெற்றது. அதாவது, சராசரியாக தொகுதிக்கு 0.7.%. ஆனால், 2024 தேர்தலில் 19 தொகுதிகளில் போட்டியிட்டு 11.2% வாக்குகள் பெற்றிருக்கும் பாஜக, சராசரியாக தொகுதிக்கு 0.58% வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறது. இதனை வளர்ச்சியாக கணக்கில் கொள்ளலாமா?
செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷத்தை ருண ரோக விமோசன பிரதோஷம் என்று சைவக்குரவர்கள் அழைக்கின்றனர். சிறப்பு வாய்ந்த அந்த பிரதோஷ நாளன்று ஈசனுக்கு விரதமிருந்து, கோயிலுக்குச் சென்று நந்தித் தேவருக்கு சிறப்பு வழிபாடு செய்து, அவரின் கொம்புகளின் வழியாகவே சிவனை தரிசித்து, வில்வ இலை மாலை சாற்றி, திருவாசகம் பாடி, நெய் விளக்கேற்றி வணங்கினால் கடன் & நோய்கள் ஆகியவை தீரும் என்பது ஐதீகம்
தமிழகத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில், அதிமுக 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். மேலும், 9 தொகுதிகளில் 3ஆம் இடத்தையும், 3 தொகுதிகளில் 4ஆம் இடத்தையும் அதிமுக பிடித்துள்ளது. 20.47% வாக்குகள் பெற்ற அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.
பாஜக – 240
காங்கிரஸ் – 99
சமாஜ்வாதி – 37
திரிணாமுல் – 29
திமுக – 22
தெலுங்கு தேசம் – 16
ஐக்கிய ஜனதா தளம் – 12
சிவசேனா (உத்தவ்) – 9
Sorry, no posts matched your criteria.