India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இமயமலைக்கு ஒரு வாரம் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், கேதார்நாத், பத்ரிநாத் கோயில்களில் வழிபாடு நடத்தினார். தற்போது, தனது பயணத்தை முடித்துள்ள அவர் டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வார் என இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர். ரஜினி இமயமலையில் இருந்து வந்ததும் தேர்தலில் வெற்றிபெற்றதற்கு ஸ்டாலின், மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
டிவி சேனல்களுக்கான டிஷ் கட்டணம் 5 – 8% வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஸ்னி ஸ்டார், ஜி, சோனி, Viacom18 ஆகிய பொழுதுபோக்கு மற்றும் கிரிக்கெட் ஒளிபரப்பு சேனல் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு டிஷ் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏர்டெல் டிஜிட்டல் ஏற்கெனவே கட்டணத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு கைதான சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் வலுவான கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற முடிவெடுத்தார். இதற்காக, பாஜகவுடன் கூட்டணி பேச டெல்லி சென்ற அவருக்கு, பிரதமர் அலுவலகம் அனுமதி தராததால் ஆந்திரா திரும்பினார். பிறகு ஒரு வழியாக பாஜகவை கூட்டணியில் இணைத்தார். ஆனால், இன்றோ காட்சிகள் அப்படியே தலைகீழாக மாறியுள்ளன. சந்திரபாபுவின் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.
மோடியை மீண்டும் பிரதமராக்க, டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவர்களுடன் நடைபெற்ற ஆலோசனையின் போது, NDA கூட்டணி கட்சித் தலைவர்கள் இதற்கு ஒப்புதல் தெரிவித்தனர். இதனையடுத்து 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, மீண்டும் இந்தியாவில் கூட்டணி ஆட்சி நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பப் பதிவு கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 2.35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 1.87 லட்சம் பேர் கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர். விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் <
பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னதாக, அமைச்சரவைக் கூட்டத்தில் மோடி பங்கேற்றார். அப்போது, வெற்றியும், தோல்வியும் அரசியலில் ஒரு அங்கம் எனவும், கடந்த 10 ஆண்டுகளில் பாஜக சிறப்பாக பணியாற்றி இருப்பதாகவும், வரும் காலங்களிலும் அதைத் தொடர்வோம் என தெரிவித்ததாக, தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்த பாஜக, இம்முறை ஆட்சி அமைக்க கூட்டணியை நம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் INDIA கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெறாத நிலையில், எந்த மாதிரியான முடிவு இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. என்டிஏ கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்படுமா? அல்லது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து ஆட்சிக்கு நெருக்கடி தரலாம் என்று முடிவு எடுக்கப்படுமா? என்பது சில மணி நேரங்களில் தெரிய வரும்.
7 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தமிழ்நாடு, பஞ்சாப், சிக்கிம், மேகாலயா, மிசோராம், நாகலாந்து, மணிப்பூர், புதுவை மற்றும் சண்டிகரில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெற்றிபெறவில்லை. தமிழகத்தில் திமுக தலைமையிலான INDIA கூட்டணி 39 இடங்களிலும், பஞ்சாப்பில் உள்ள 13 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் 7, ஆம் ஆத்மி 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.
ஒடிஷாவில் தனிப்பெரும்பான்மை பெற்ற பாஜக, முதல்முறையாக ஆட்சியமைக்க உள்ளது. முதல்வர் பதவிக்கான ரேஸில் அம்மாநில பாஜக மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி நிலவுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தேசிய துணைத் தலைவர் வைஜெயந்த் பாண்டா, அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஜுவல் ஓரம், சம்பித் பத்ரா ஆகியோர் இந்த ரேஸில் உள்ளனர். இவர்கள் அனைவரும் மக்களவைத் தேர்தலில் வென்றது குறிப்பிடத்தக்கது.
மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைய சுயேச்சை, சிறு கட்சிகளை சேர்ந்த மேலும் 10 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 240 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி கட்சிகளை பாஜக நம்பியிருக்கிறது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 10 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இது பாஜகவுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.