News April 25, 2024

மே தின நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்படுமா?

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து விட்டாலும், தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் உள்ளன. இந்நிலையில், தொழிலாளர் தினமான வரும் மே 1ஆம் தேதி நிகழ்ச்சிகளை நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அனுமதி கோரப்பட்டது. இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, மே தின நிகழ்ச்சிகள் தொடர்பான அனுமதிகளை, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வழங்குவார்களென தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

செவ்வாய் கிரகம் போல மாறிய ஏதென்ஸ் நகரம்

image

கிரீஸ் நாட்டின் தலைநகரமான ஏதென்ஸ் நகரின் வானம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறத்தில் மாறியது. தொன்மையான நகரம் திடீரென நிறம் மாறியதால், சுற்றுலாப் பயணிகளுடன் உள்ளூர் மக்களும் பீதியடைந்தனர். இது குறித்து நாசா, மேகக் கூட்டத்துடன் சஹாரா பாலைவனத்தின் மண் துகள்கள் கலந்ததால் இது போன்று ஆரஞ்சு நிற போர்வை போர்த்தியது போல் மாறியதாகவும், மேலும் 2 நாட்களுக்கு இதுபோன்ற நிலை தொடருமெனவும் விளக்கமளித்துள்ளது.

News April 25, 2024

காங்., வேட்பாளருக்கு எதிராக பிரசாரம் செய்யும் காங்கிரஸ்!

image

ராஜஸ்தானின் பன்ஸ்வாரா-துங்கர்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாமென காங்கிரஸ் பிரசாரம் செய்து வருகிறது. காங்கிரஸ், பாரத் ஆதிவாசி கட்சியுடன் திடீரென கூட்டணி அமைத்த நிலையில், முன்னர் அறிவித்த வேட்பாளரான அரவிந்த் தாமோர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற மறுத்துவிட்டார். இதனால், கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டாமென பிரசாரம் செய்யும் சூழலுக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது.

News April 25, 2024

உலகக்கோப்பை வில்வித்தை: இந்தியா அசத்தல்

image

உலகக் கோப்பை வில்வித்தை இறுதிப்போட்டிக்கு இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி முன்னேறி அசத்தியுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் காம்பவுண்ட் அணிகள் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்திய ஆண்கள் அணி 235-233 என்ற புள்ளி கணக்கில் தென்கொரிய அணியை வீழ்த்தியது. இதேபோன்று, மற்றொரு அரையிறுதி சுற்றில், இந்திய பெண்கள் அணி 235 – 230 என்ற புள்ளி கணக்கில் எஸ்தோனியா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

News April 25, 2024

திரிணாமுல் கட்சியில் சேர காத்திருக்கும் பாஜகவினர்!

image

மே.வங்கத்தில் பாஜகவை சேர்ந்த 10 முக்கியத் தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸில் இணைய காத்திருப்பதாக திரிணாமுல் கட்சியின் மூத்த தலைவரான அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். முர்ஷிதாபாதில் ரோடு ஷோவில் பங்கேற்று பேசிய அவர், கட்சிகளை உடைக்கும் விளையாட்டில் பாஜக தற்போது ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார். ஆனால் இதனை மறுத்துள்ள பாஜக, தேர்தலுக்கு பின் திரிணாமுல் கட்சி சீட்டுக்கட்டு போல சரியுமென கூறியுள்ளது.

News April 25, 2024

இந்தியாவின் விலை உயர்ந்த டீத்தூள் இதுதான்!

image

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் உற்பத்தியாகும் வெள்ளை டீத்தூள் ஒரு கிலோ ரூ.1.5 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. அங்குள்ள உயர்ந்த மலைச்சிகரங்களில் வளரும் இளம் தேயிலையை பறித்து தயாரிக்கப்படும் இந்த டீத்தூள் ஆண்டுக்கு 15 முதல் 20 கிலோ அளவுக்கு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு முன்னர், 2022ஆம் ஆண்டு அசாம் டீத்தூள் ஒரு கிலோ ரூ.1.15 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டதே சாதனையாக இருந்தது.

News April 25, 2024

ஏப்ரல் 25 வரலாற்றில் இன்று!

image

➤ 1792 – கில்லட்டின் கருவி மூலம் முதலாவது மரண தண்டனை பாரிசில் நிறைவேற்றப்பட்டது. ➤ 1945 – ஐக்கிய நாடுகள் அவையை நிறுவுவதற்கான ஆலோசனைகள் சான் பிரான்சிஸ்கோவில் 50 நாடுகளின் பங்களிப்போடு தொடங்கின ➤ 1974 – போர்ச்சுகலில் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது. ➤ 2015 – நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 9,100 பேர் உயிரிழந்தனர்.

News April 25, 2024

நாளை மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு!

image

மக்களவை இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, 89 தொகுதிகளில் நாளை (ஏப்.26) நடைபெறுகிறது. இதனையொட்டி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடைபெற்று வந்த தீவிர பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. ராகுல், சசிதரூர், எச்.டி குமாரசாமி, டி.கே.சுரேஷ், தேஜஸ்வி சூர்யா, ஹேமமாலினி, அருண் கோயில் ஆகியோர் 2ஆம் கட்டத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர்.

News April 25, 2024

நாகரிகமற்ற முறையில் பேசும் பிரதமர் மோடி!

image

தோல்வி பயத்தால் கலவரத்தை ஏற்படுத்தவும், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவும் மோடி நாகரிகமற்ற முறையில் பேசி வருவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை சாடியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், வடமாநிலங்களில் 100 இடங்களில் பாஜக வெற்றி பெறாதென வடநாட்டு பத்திரிகையாளர்கள் கூறுவதாகவும், வயநாடு தொகுதியில் ராகுல் 5 1/2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாரென்றும் தெரிவித்தார்.

News April 25, 2024

கென்யாவில் கனமழைக்கு 32 பேர் பலி

image

கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள சாலைகள் ஆறாக மாறியுள்ளன. ஐ.நா வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, கென்யாவில் கனமழைக்கு இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். மழை, வெள்ளத்தால் மோசமான பாதிக்கப்பட்ட தலைநகர் நைரோபியில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். துபாய், சீனாவை தொடர்ந்து, கென்யாவில் பெய்த வரலாறு காணாத கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

error: Content is protected !!