India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வெயில் காலத்தில் மின்விசிறி, ஏசி பயன்பாடு கூடியிருப்பதால், மின்கட்டணம் அதிகரிக்கக்கூடும். இதை கீழ்காணும் வழிகளைக் கடைபிடித்தால் குறைக்கலாம். 1) பழைய விளக்குகளை அகற்றிவிட்டு எல்இடி பல்புகளைப் பொருத்தவும் 2) ஃப்ரிட்ஜ், டிவி உள்ளிட்ட மின்சாதனங்களை 5 ஸ்டார் உள்ளதாக வாங்கவும் 3) பயன்படுத்தாத நேரத்தில் மின்சாதனங்களை ஸ்விட்ச் ஆப் செய்யவும் 4) ஏசியை 24 டிகிரி டெம்ப்ரேச்சரில் பயன்படுத்தவும்.
ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,680க்கும், கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.6,710க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.86க்கும், கிலோவிற்கு ரூ.500 குறைந்து ரூ.86,000க்கும் விற்பனையாகிறது.
அலுமினிய பாத்திரங்களில் சமையல் செய்து உட்கொள்வதால் மூளை செயலிழப்பு, நியூரோடாக்ஸிசிட்டி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என ஸ்லோவாக் நச்சுயியல் சங்கம் அதிர்ச்சிகரத் தகவலை வெளியிட்டுள்ளது. அதன் ஆய்வறிக்கையில், அதிக அமிலத்தன்மை கொண்ட தக்காளி, வினிகர் போன்றவற்றை அலுமினிய பாத்திரத்தில் சமைத்தால் உணவுகளில் வேதியல் மாற்றம் ஏற்படும். அந்த உணவை உண்பதால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பந்துவீச்சில் எங்கள் திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியவில்லை என குஜராத் கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். தோல்விக்கான காரணம் குறித்து பேசிய அவர், டெல்லி அணியை 200 – 210 ரன்களுக்குள் சுருட்டுவோம் என நினைத்தேன். ஆனால், கடைசி ஓவர்களில் சொதப்பி விட்டோம். சிறிய மைதானம் என்பதால், அதிக ரன்களை கொடுத்து விட்டோம். மேலும், இம்பாக்ட் பிளேயர் விதி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது எனக் கூறினார்.
இந்திய வணிகக் கடற்படையில் 4,000 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. Sea Man , Deck & Engine Rating உள்ளிட்ட பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு. வயது வரம்பு: 18-27. விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 30. தேர்வு: நேர்காணல். ஊதிய வரம்பு: ₹35,000 – ₹55,000 /-. கூடுதல் தகவல்களுக்கு <
கோவை அதிமுகவின் கோட்டை, திமுக, பாஜக வெல்ல வாய்ப்பு இல்லை என அதிமுகவின் ஐ.டி.விங் துணைச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கூட்டணிக் கட்சிகளை மிரட்டி திமுக, தன்னுடன் வைத்திருப்பதால், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு திமுக கூட்டணி உடையும் எனக் கூறிய அவர், அண்ணாமலை ட்விட்டரில் தேர்தல் நடத்தி வெற்றி பெற்றுக்கொள்ளலாமே தவிர, கள அரசியலில் வெற்றிபெற முடியாது; அவர் படுதோல்வி அடைவார் எனத் தெரிவித்தார்.
ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் இருந்தபோது அவரது உத்தரவின்பேரில், சச்சின் பைலட்டின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாக அவருடைய முன்னாள் உதவியாளர் லோகேஷ் ஷர்மா குற்றம்சாட்டியுள்ளார். 2020இல் அசோக் கெலாட், சச்சின் இடையே மோதல் வெடித்து, பிறகு சமாதானமாகினர். இக்காலகட்டத்தில் பைலட்டின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும், அவரது செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டதாகவும் ஷர்மா தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் ஜெயமோகன் போன்றவர்களின் விமர்சனத்தை கண்டுக்கவே மாட்டேன் என்று ‘ஆவேஷம்’ இயக்குநர் ஜித்து மாதவன் கூறியுள்ளார். ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், ஒரு படத்தை இப்படித்தான் எடுக்க வேண்டும் என படைப்பாளிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது. ஒரு விஷயத்தை வைத்து ஒரு மாநிலத்தையே மோசமென பொதுமைப்படுத்திச் சொல்லக்கூடாது. ஏன் இப்படி சொல்கிறார்கள் என்றுத் தெரியவில்லை எனக் கூறினார்.
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ், சென்னை திரும்பினார். கனடாவில் இருந்து விமான மூலம் சென்னை வந்த அவருக்கு, 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர், தமிழக அரசின் ஊக்கம் தனக்கு உறுதுணையாக இருந்தது. இந்தாண்டு இறுதியில் நடைபெறும் உலக சாம்பியன் போட்டியில், நிச்சயம் வெல்வேன் எனத் தெரிவித்தார்.
வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தைப் போக்க சந்தன பானகத்தைப் பருகலாமென ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. சந்தன பானகத்தை செய்வது எப்படி என பார்க்கலாம். முதல் நாள் இரவு மண்பானைத் தண்ணீரில் ஊறவைத்த செஞ்சந்தனத்துடன் பனை வெல்லம் சேர்த்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதனுடன் உப்பு, சுக்கு, மிளகு கலந்தால் பானகம் ரெடி. இப்பானகத்தைக் குடித்தால் தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் நீங்குமாம்.
Sorry, no posts matched your criteria.