India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 எம்.பி தேர்தலில் 280 பேர் முதல் முறையாக எம்பிக்களாக தேர்வாகியுள்ளனர். 2019 தேர்தலில் 263 பேர் தேர்வான நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. மேலும், ஒருவர் 8ஆவது முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒருவர் 2 தொகுதிகளில் எம்பியாக தேர்வாகி உள்ளார். 9 பேர் பிற கட்சிக்கு மாறிச் சென்று எம்பியாகியுள்ளனர். தேர்தலில் போட்டியிட்ட 53 அமைச்சர்களில் 35 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் இன்று இரவோடு விலக்கிக் கொள்ளப்படுகிறது. இதனையடுத்து, கிடப்பிலிருக்கும் பல்வேறு திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேர்தலில் மக்கள் அளித்த அமோக வெற்றிக்கு பரிசாக பல புதிய திட்டங்களை அறிவிக்கவும் திமுக அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என அண்ணாமலை அறிவித்திருந்தார். இந்நிலையில், 2026இல் அதிமுகவுடன் கூட்டணி உண்டா?, இல்லையா? என்பதை டெல்லி பாஜக தலைமை தான் முடிவு செய்யும் எனக் கூறிய தமிழிசை, அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்தால் திமுகவுக்கு தற்போது கிடைத்துள்ள இடங்கள் கிடைத்திருக்காது என்பதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் எனவும் அண்ணாமலை கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இபிஎஸ் குறித்தும், எஸ்.பி.வேலுமணி குறித்தும் பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை என அதிமுக ஐ.டி.விங் பதிலடி கொடுத்துள்ளது. ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாத அதிமுக, பாஜவுடன் சேர்ந்தால் மட்டும் எப்படி வெற்றிபெறும் என அண்ணாமலை கூறிய நிலையில், ஆடு, ஓநாய், நரி என எது வந்தாலும் அதிமுகவை அசைத்துக்கூட பார்க்க முடியாது என ஐ.டி.விங் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
சிஏஏ சட்டத்திற்கு எதிராக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற நடிகை நிமிஷா சஜயன், “திருச்சூரைக் கூட தராத நாங்கள், இந்தியாவை பாஜகவிடம் தந்துவிடுவோமா?” என பேசியிருந்தார். திருச்சூரில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி இருமுறை தோல்வியுற்றதை அவர் மறைமுகமாக சாடியிருந்தார். இந்நிலையில், சுரேஷ் கோபி தற்போது வெற்றிபெற்றுள்ளதை குறிப்பிட்டு, பாஜக தொண்டர்கள் அவரை இணையத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
உட்கட்சி தலைவர்களை விமர்சிக்கும் பாஜக ஐடி விங் மற்றும் அண்ணாமலை வார் ரூம் குழுக்களுக்கு தமிழிசை பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். தன்னை பற்றி அவதூறு பரப்பும் பாஜக இணையதளவாசிகள் மீது, முன்னாள் தலைவர் என்ற முறையில் கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த அவர், அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் பாஜகவுக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைத்திருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்த வழக்கை, ஆட்கொணர்வு மனுவை விசாரிக்கும் டிவிஷன் அமர்வுக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. முன்னதாக, சவுக்கு சங்கர் மீது காவல்துறையினருக்கு எந்த தனிப்பட்ட பகைமை உணர்வும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ள காவல் ஆணையர், அவரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சா அளவு வணிக அளவில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
40 ஆண்டுகளுக்கு பிறகு அலகாபாத் தொகுதியில் காங்கிரஸ் வென்றுள்ளது. இத்தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸை சேர்ந்த உஜ்வல் ராமன் சிங் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில், பாஜக வேட்பாளர் நீரஜ் திரிபாதியை வென்றுள்ளார். இத்தொகுதியில் கடைசியாக 1984இல் காங்கிரஸ் சார்பாக நடிகர் அமிதாப் பச்சன் வெற்றி பெற்றிருந்தார். முன்னாள் பிரதமர் சாஸ்திரி 1957 மற்றும் 1962 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்றார்.
தெலுங்கு தேசம் கட்சிக்கு சபாநாயகர் பதவி வழங்க பாஜக மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவை சேர்ந்த ஒருவருக்கு சபாநாயகர் பதவியை வழங்குவதில் அமித் ஷா மற்றும் நட்டா உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் சபாநாயகர் பதவி மீது ஆர்வம் காட்டி வருகின்றன. எம்பிக்களை பதவி நீக்கம் செய்வதில், சபாநாயகரே இறுதி முடிவு எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பீர்களா? என்று பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதனால், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் மற்றும் புதிய கட்சி தொடங்கியுள்ள விஜய்யின் தவெக என ஐந்து முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.