India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 42ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா அணி, பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைக்க பஞ்சாப் அணி இப்போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதுவரை இரு அணிகளும் 32 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், கொல்கத்தா அணி 21 முறையும், பஞ்சாப் அணி 11 முறையும் வென்றுள்ளன.
இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 88 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாப் 5 பணக்கார வேட்பாளர்கள் பட்டியலில் மாண்டியா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடரமண கவுடா ரூ.622 கோடி சொத்துக்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்ததாக, டி.கே.சுரேஷ் (ரூ.593 கோடி) , ஹேமமாலினி (ரூ.278 கோடி), சஞ்சய் சர்மா (ரூ.232 கோடி), குமாரசாமி (ரூ.217.21 கோடி) இடம்பெற்றுள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இதில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கின்றன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் வாக்குச்சாவடி மையங்களில் தயார் நிலையில் உள்ளன. இதில், ராகுல் காந்தி, ஹேமமாலினி, சசி தரூர், குமாரசாமி, நடிகர் சுரேஷ்கோபி ஆகிய முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ரயில் நிலைய கவுண்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், UTS செயலி மூலம் முன்பதிவில்லாத ரயில், நடைமேடை மற்றும் சீசன் டிக்கெட் ஆகியவற்றை பெற முடியும். அதில் ஜியோ ஃபென்சிங் எனப்படும் வெளிப்புற எல்லையை தற்போது ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது. இதனால் ரயில் நிலையம் தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், டிக்கெட் எடுத்த 2 மணி நேரத்திற்குள் பயணத்தை தொடங்க வேண்டும்.
ஜி7நாடுகளின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இத்தாலி சுதந்திர தினத்திற்கும் மோடி வாழ்த்து தெரிவித்தார். இத்தாலியில் வரும் ஜூன் 13 முதல் 15ஆம் தேதி வரை ஜி7 மாநாடு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்பே, அதில் பிரதமர் பங்கேற்பது குறித்து தெரியவரும்.
▶ஏப்ரல் – 26 | ▶ சித்திரை – 13 ▶கிழமை: வெள்ளி| ▶திதி: துவிதியை ▶நல்ல நேரம்: காலை 09:30 – 10:30 வரை, மாலை 04:30 – 05:30 வரை ▶கெளரி நேரம்: காலை 12:30 – 01:30 வரை, மாலை 06:30 – 07:30 வரை ▶ராகு காலம்: காலை 10:30 – 12:00 வரை ▶எமகண்டம்: மாலை 03:00 – 04:30 வரை ▶குளிகை: காலை 07:30 – 09:00 வரை ▶சந்திராஷ்டமம்: ரேவதி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் ஓட்டுக்களுடன், விவிபேடில் பதிவாகும் ஒப்புகைச்சீட்டுகளையும் 100% சரிபார்க்க கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வெளியாகிறது. சில நாள்களுக்கு முன் வழக்கு விசாரணைக்கு வந்த போது, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். அப்போது ஏற்று கொண்ட நீதிபதிகள், தீர்ப்பை இன்று ஒத்திவைத்தனர்.
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென சிநேகா தற்கொலை தடுப்பு அமைப்பின் நிறுவனர் லட்சுமி விஜயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், சினிமாவிலும் கஷ்டம் என்று வந்தால் தற்கொலை தான் தீர்வு என்பது போன்று சுட்டிக்காட்டுகின்றனர். இது, தவறான உதாரணமாக மக்களிடத்தில் பிரதிபலிக்கிறது. இதே போன்ற நிலை நீடித்தால் அடுத்த, 10 ஆண்டுகளில் தற்கொலைகள் எண்ணிக்கை அதிகமாகுமென எச்சரித்துள்ளார்.
பொதுவாக, சாப்பாட்டுக்கு முன் இளநீர் குடிப்பது நல்லது. இளநீரில் உள்ள கனிமங்கள் மற்றும் உப்புகளை முழுவதுமாக உடல் கிரகித்துக்கொள்ள, இளநீரை வெறும் வயிற்றில் தான் குடிக்க வேண்டும். ஆஸ்துமா, சளித் தொந்தரவு இருப்பவர்கள் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டாம். சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லாதபோது நீரிழிவு நோயாளிகளும், அதிகமான உப்புகள் இருப்பதால், சிறுநீரக நோயாளிகளும் இளநீர் குடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
தமிழகத்தை அதிர வைத்த பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. கல்லூரி மாணவிகளுக்கு ஆசை வார்த்தைகளை கூறி, அவர்களை உயர்க்கல்வி புள்ளிகளுக்கு பாலியல் ரீதியாக பயன்படுத்த முயன்ற வழக்கில் நிர்மலாதேவியுடன், பல்கலை பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். 7 ஆண்டுகளுக்கு இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.
Sorry, no posts matched your criteria.