India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ₹2.50 உயர்ந்து ₹100.50க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தைகளில் உலோகங்களின் மதிப்பு உயர்வதால் இந்தியாவிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹54,720க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் அபரணத் தங்கத்தின் விலை இன்று ₹6,840ஆக உள்ளது. கடந்த சில நாட்களாக வெள்ளியின் விலை தங்கத்தை விட அதிகமாக உயர்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அரக்கோணத்தில் 11 செ.மீ மழை பெய்துள்ளது. தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஆகிய பகுதிகளில் தலா 10 செ. மீட்டரும், வாலாஜாபாத், தொண்டி, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், குமரி மாவட்டம் குருத்தன்கோடு ஆகிய பகுதிகளில் தலா 9 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். சுமார் 10 மணி நேர காத்திருப்புக்கு பின் பகவானை தரிசனம் செய்துள்ளனர். நேற்று மட்டும் 62,161 பேர் தரிசனம் செய்துள்ள நிலையில் 28,923 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 3.35 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.
வங்கிகளுக்கு கடன் வழங்கும் ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த ரெப்போ வட்டியின் அடிப்படையிலேயே மக்கள் பெறும் கடனுக்கான வட்டி நிர்ணயிக்கப்படும். பணவீக்கம் அதிகமாக உள்ளதால், ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாற்றமில்லை என்று அறிவித்திருப்பது லோன் பெற்றவர்களை நிம்மதியடையச் செய்துள்ளது.
IMDB-யின் 100 பிரபலங்கள் பட்டியலில் 13வது இடம் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். வாழ்க்கையில் போட்டி என்பது இயல்பான ஒன்று. மற்றவர்களின் வாழ்க்கை எனக்கு ஊக்கம் அளிக்கிறது. மற்றவர்களின் வெற்றிகளை பார்த்து நாமும் அவர்களைப் போல் முன்னேற வேண்டும். நல்ல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. இனிமேல் இன்னும் கஷ்டப்பட்டு உழைக்க விரும்புகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு புகாரில் உண்மையில்லை என NTA தெரிவித்துள்ளது. முதல் மதிப்பெண் எடுத்த 67 பேரில், 50 பேருக்கு இயற்பியல் பாடத்தில் மாற்றப்பட்ட ஒரு விடைக்காக மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது என்றும், மேலும், 6 பேருக்கு தேர்வு எழுத போதிய நேரம் அளிக்கப்படாததால் ரிட் மனுக்கள், குறைதீர் ஆணைய பரிந்துரை அடிப்படையில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வுபெற்ற கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “ஒரு கோல் அடிப்பது எளிதல்ல, சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக ஒற்றை வீரராக 94 கோல்கள் அடித்துள்ளார். இந்தியாவின் கொடியை உயர்த்திய உங்களின் மறக்க முடியாத கால்பந்து பயணத்திற்கு எனது வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.
MBA படிக்க விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு CMAT முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் CMAT தேர்வினை மாணவர்கள் மே 15ஆம் தேதி எழுதினர். அதற்கான முடிவுகள் தற்போது <
கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்தது குறித்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பெண் காவலர் குல்வீந்தர் கவுர் விளக்கம் அளித்துள்ளார். ரூ.100 அல்லது ரூ.200 கொடுக்கப்பட்டதால் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியதாக கங்கனா கூறியிருந்தார். டெல்லியில் போராடிய விவசாயிகளில் எனது அம்மாவும் ஒருவர் என பெண் காவலர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. காவலரின் இச்செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அண்மையில் வெளியான புஜ்ஜி அட் அனுப்பட்டி படம், ₹50 லட்சம் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. புதுமுக இயக்குநர் ராம் கந்தசாமி இயக்கிய இந்த படம், குடும்பப் பாங்கான படம் ஆகும். அண்ணன், தங்கை, சித்தி, சித்தப்பா போன்ற உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதால் அவர் சம்பளம் வாங்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.