India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் 8%க்கும் மேல் வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சி, அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது. இதனால் அக்கட்சி கேட்கும் சின்னத்தை அளிக்கும் நிலை ECக்கு உருவாகியுள்ளது. கரும்பு விவசாயி சின்னம், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட மைக் சின்னம் வேண்டாமென சீமான் கருதுவதாகவும், இதனால் விவசாயத்தைக் குறிக்கும் வேறு புது சின்னம் கேட்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகை ரஷ்மிகா மந்தனா தனது தோழியும், சக நடிகையுமான சமந்தா குறித்து மனம் திறந்துள்ளார். சமந்தா ஒரு அற்புதமான பெண்மணி, அவர் எல்லாவற்றிலும் வெற்றி காண வேண்டும் என தான் விரும்புவதாகத் தெரிவித்தார். சமந்தாவின் உடல்நிலை குறித்து தனக்குத் தெரியும் என்றும், ஆனால் அவர் அதுகுறித்து பேச விரும்புகிறாரா எனத் தெரியாததால், அதைப்பற்றி அவரிடம் அதிகம் பேசவில்லை எனவும் ரஷ்மிகா கூறினார்.
ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் மோடி வழங்கினார். தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில், அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான கடிதத்தை தற்போது அவர் ஜனாதிபதியிடம் வழங்கிய நிலையில், ஆட்சி அமைக்க அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை மறுநாள் அவர் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிர்மலா சீதாராமனுக்கு நிதியமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பில்லை என டெல்லி வட்டாரங்கள் கருதுகின்றனர். மீடியாக்களை கையாண்ட விதம், அவரது கல்வி குறித்து எழுந்த சர்ச்சை ஆகியவற்றை கருதி, மீண்டும் நிதியமைச்சர் பதவி வழங்க பாஜக தலைமை தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளும் நிதியமைச்சர் பதவிக்கு ஆர்வம் காட்டுவதால், தேர்தலில் போட்டியிடாத நிர்மலாவுக்கு அப்பதவி கிடைப்பது சிரமம் என்கிறார்கள்.
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் உள்ள பிராந்திய கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) வெளியிட்டுள்ளது. இதில், அலுவலக உதவியாளர், துணை மேலாளர் உள்ளிட்ட 9,995 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள பட்டதாரிகள் இன்று முதல் வரும் ஜூன் 27ஆம் தேதி வரை <
INDIA கூட்டணி கட்சிகள் ஒருபோதும் நாட்டுக்காக உழைத்தது இல்லை என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். NDA ஆலோசனை கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் மோடி தலைமையில் இந்தியா தொடர்ந்து வளர்ந்து வருவதாக பாராட்டிய அவர், எதிர்க்கட்சிகள் நாட்டின் நலனுக்காக இதுவரை துரும்பைக்கூட அசைத்ததில்லை என்றார். INDIA கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த நிதிஷ் குமார், பிறகு பாஜக கூட்டணியில் திடீரென இணைந்தார்.
*அதிக மலைப்பிரதேச நிலப்பரப்பை கொண்டிருக்க வேண்டும் *குறைந்த மக்கள் தொகை இருக்க வேண்டும் *பழங்குடியின மக்கள் கணிசமான அளவில் இருக்க வேண்டும். *அண்டை நாடுகளுடனான எல்லைகளில் அமைந்திருக்க வேண்டும். * பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலமாக இருக்க வேண்டும். *நிதி பற்றாக்குறை கொண்ட மாநிலமாக இருக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்றை பூர்த்தி செய்யும் மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கும்.
நார்வே செஸ் தொடரின் 9ஆவது ஆர்மகெடான் சுற்றில், தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்துள்ளார். அமெரிக்க வீரர் ஃபேபியானோ கருவானாவுக்கு எதிரான இந்தப் போட்டியில், பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். தொடக்கம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஒருசில தவறுகளால் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார். இதனால், 13 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறார்.
மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு (பாஜக) வாழ்த்து தெரிவிக்காத விஜய், 40 தொகுதிகளை வென்றெடுத்த திமுக பெயரை கூட சொல்லவில்லை. ஆனால், மாநில அந்தஸ்து பெற்றுள்ள நாதக, விசிக பெயரைக் குறிப்பிட்டு வாழ்த்து கூறியுள்ளார். 2026 பேரவைத் தேர்தலை குறிவைத்து அரசியல் காய் நகர்த்தும் அவர், அரசியலில் இருபெரும் சக்தியாக உருவெடுத்துள்ள தலைவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தது கூட்டணிக்கான சமிஞ்கை என சொல்லப்படுகிறது.
சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் என்ன செய்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய பிரதேச எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘அந்த இருவரும் எப்போதும் தங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று பாஜக நினைத்தால் அது நடக்காது. தற்போது அமைய இருப்பது மோடி அரசு அல்ல, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு’’ என்று கூறினார்.
Sorry, no posts matched your criteria.