India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்து வரும் விடாமுயற்சி படம், தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 20 முதல் எஞ்சியுள்ள காட்சிகளை ஒரே கட்டமாக எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வரும் சூழலில், படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்வது உறுதியானதால் திட்டமிட்டபடி படம் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் (87) உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
18ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இம்மாதம் 15 – 22 வரை நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. NDA கூட்டணி அமைச்சரவை நாளை பதவியேற்ற பிறகு, மாலை நடைபெறும் கூட்டத்தில் இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. முதல்நாள் எம்.பி.,க்கள் பதவி பிரமாணம் நிகழ்வும், அவையின் தலைவர் தேர்வும் நடக்கும். அதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் அவையில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக் கோப்பை T20 தொடரில் நியூசிலாந்து அணிக்கு 160 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஃப்கானிஸ்தான் அணி. 14ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற NZ முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய AFG நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீரர்கள் குர்பாஸ் 80, இப்ராஹிம் 44, ஓமர்சாய் 22 ரன்கள் எடுத்தனர். NZ தரப்பில் ஹென்றி, போல்ட் தலா 2 விக்கெட், ஃபெர்குசன் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 21 திமுக வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். அதைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற உள்ள புதிய MP-க்கள் கூட்டத்தில், மக்களவைக்கான தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த முறை டி.ஆர்.பாலு தலைவராக இருந்த நிலையில், இந்த முறையும் அவரே தேர்வு செய்யப்படலாம் என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாட்டிலேயே வடக்குப் பார்த்தபடி, தனிக் கோவில் கொண்டருளும் விஷ்ணுதுர்க்கை வீற்றிருக்கும் திருத்தலம் பேராவூரணி பாலத்தளியில் மட்டுமே உள்ளது. சோழ வேந்தர்கள் திருப்பணி செய்து, வணங்கிய போர் தெய்வமான இந்த பாலத்தளி விஷ்ணுதுர்க்கைக்கு செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் செஞ்சந்தனகாப்பு செய்து, சிவப்பு சாற்றி, எலுமிச்சை தீபமேற்றி, பால் பாயசம் படைத்து வழிபட்டால் நினைத்தவை யாவும் கைகூடும் என்பது ஐதீகம்.
அண்ணாமலை மத்திய அமைச்சரானால், தமிழக பாஜக தலைவராக வானதி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. தற்போது, திடீர் திருப்பமாக முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மாநில தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான பாஜக மாநில துணை தலைவர் நாராயணனிடம் கேட்டபோது, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் செய்தியை நம்ப வேண்டாம் என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் நூலகர் பணியிடத்தை நீக்கியதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது தொடர்பான வழக்கு ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2018 முதல் அந்தப் பணியிடத்தை நீக்கியதாக அரசு கூறியது. அப்போது, தமிழக அரசின் கொள்கை முடிவா இது என கேள்வி எழுப்பிய கோர்ட், நூலகர்களின் உதவியின்றி நூலகங்களை சிறப்பாக கையாள முடியுமா என வினவியது. மேலும், ஜூன் 13க்குள் கல்வித்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டது.
*மக்களவைத் தேர்தலில் வென்ற திமுக MP-க்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று சந்திப்பு.
*மழை காலத்தில் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்: தங்கம் தென்னரசு உத்தரவு.
*கணிப்பு பொய்த்ததால் தொகுதி எண்ணிக்கை குறித்து இனி பேச மாட்டேன்: பிரசாந்த் கிஷோர்.
*நடிகை கங்கனா ரனாவத்தை அறைந்த, விமான நிலைய பெண் காவலர் குல்வீந்தர் கவுர் கைது
*உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெறுகிறது.
நடிகையும், பாஜக MP-யுமான கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த பெண் காவலர் குல்வீந்தர் கவுர் கைது செய்யப்பட்டுள்ளார். சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த குல்வீந்தர், டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை கொச்சைப்படுத்தியதாகக் கூறி கங்கனாவின் கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.