India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவையில் காங்கிரஸ் எம்பிக்கள் பலம் 99ஆக உயர்ந்துள்ளதால், அக்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து வழங்கப்படவுள்ளது. டெல்லியில் இன்று நடைபெறும் அக்கட்சியின் எம்பிக்கள் கூட்டத்தில், அந்தப் பதவிக்கு ராகுல் தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. ராகுல் அப்பதவியை விரும்பவில்லையெனில், மணிஷ் திவாரி, கவுரவ் கோகாய், வேணுகோபால், சசிதரூர் ஆகியோரில் ஒருவர் தேர்வாகலாம் எனத் தெரிகிறது.
உலகக் கோப்பை T20 தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பேட்டிங் செய்து வரும் நியூசிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் டக் அவுட் ஆகிய நிலையில், கான்வே, வில்லியம்சன், மிட்செல் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆகி வெளியேறினர். தற்போது அந்த அணி 10 ஓவரில் 54/7 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. ரஷித்கான், ஃபசல்ஹக் பாரூக்கி தலா 3 விக்கெட்டை கைப்பற்றினர்.
எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த காரணத்தினாலோ என்னவோ ராமோஜி ராவுக்கு எப்போதுமே விவசாயிகள் மீது தனிப்பாசம் இருந்தது. 1969இல் விவசாயிகளுக்காக ‘அன்னதாதா’ என்ற இதழைக் கொண்டு வந்தார். உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நடைமுறைகள், தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்கள் ஒரு வழிகாட்டி போல வெகுசனங்களிடம் கொண்டு சேர்த்தது. அவரது ஈ டிவி தான் விவசாயம் குறித்து தனி நிகழ்ச்சி நடத்திய முதல் தொலைக்காட்சியாகும்.
தமிழ்நாட்டில் ஜூன் 17ஆம் தேதி (திங்கள்) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து மூன்று நாள்கள் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வருகிறது. ஆம்!, ஜூன் 15 (சனி), ஜூன் 16 (ஞாயிறு) மற்றும் பக்ரீத் பண்டிகை நாளான ஜூன் 17 (திங்கள்கிழமை) அரசு பொதுவிடுமுறை என தொடர்ந்து 3 நாள் விடுமுறை வருகிறது. விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வோர் இப்போதே திட்டமிடுங்கள்.
674 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட உலகின் மிகப்பெரிய திரைப்பட ஸ்டுடியோ வளாகமான ராமோஜி ஃபிலிம் சிட்டியை ஹைதராபாத்தில் அமைத்தவர் செருகூரி ராமோஜி ராவ் (87). ஒருங்கிணைந்த ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பெடபருப்புடியில் 16 நவ 1936 அன்று எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். B.Sc., பட்டதாரியான அவர், விளம்பர ஏஜென்ஸி பணியாளராக தனது வாழ்வைத் தொடங்கிய பின்னாளில் தனிமனித ஆளுமையாக உருவெடுத்தார்.
1962இல் மார்க்கதரிசி நிதி நிறுவனத்தைத் தொடங்கிய அவர், கால் பதிக்காத துறைகளே இல்லை என்ற அளவில் அனைத்து துறைகளிலும் முத்திரைப் பதித்தார். ராமோஜி குழுமத்தின் பெயரில் ஈநாடு பத்திரிக்கை, ஈ டிவி தொலைக்காட்சி, விளம்பர ஏஜென்ஸி, கல்வி, விடுதி, சுற்றுலா, திரைப்படத்துறை என தனி சாம்ராஜ்ஜியத்தையே அவர் உருவாக்கினார். 2016இல் பல்துறை வித்தகரான அவருக்கு மத்திய அரசு, பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவித்தது.
மத்தியில் அமையவுள்ள மோடி தலைமையிலான அரசுக்கு தெலுங்கு தேசம் தனது ஆதரவை அளித்துள்ளது. இதையடுத்து புதிய அமைச்சரவையில் அக்கட்சிக்கு 4 இடங்கள் அளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் 2 கேபினட் அமைச்சர் பதவி என்றும், எஞ்சிய 2 பதவிகள் இணை அமைச்சர் பதவி என்றும் கூறப்படுகிறது. பவன் கல்யான் கட்சிக்கும் இணை அமைச்சர் பதவி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் விடியவிடிய மழை பெய்த நிலையில், தற்போது குமரி மாவட்டத்தின் கோதையார், குற்றியார், மோதிரமலை, பேச்சிப்பாறை, ஆறுகாணி, பத்துகாணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) குமரி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஸ்தார் பகுதியில் ரகசியத் தகவலின்பேரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும் அவர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. இதில் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். பாதுகாப்புப் படை வீரர்களும் 3 பேர் காயமடைந்தனர்.
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு நெருக்கமான 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய தலைமை செயலாளராக நீரப் குமார் பிரசாத் பணியில் அமர்த்தப்பட்ட முதல் நாளிலேயே, ஜெகன்மோகன் ரெட்டியின் அலுவலகத்தில் பணியாற்றி வந்த பூனம் மாலகொண்டய்யா, நாராயண பரத் குப்தா, முத்தியால ராஜு ஆகிய மூவரும் உடனடியாக பொது நிர்வாக துறையில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.