India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திரைத்துறையில் போராட்டமும், உழைப்பும் மட்டுமே என்றும் நிலையானது என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். மேலும், ‘என்னுடைய குழந்தைப் பருவத்தில் நான் சொகுசாக இருந்ததில்லை, நிறைய கஷ்டங்களைப் பார்த்துதான் வளர்ந்தேன். வாழ்க்கையில் சாதித்துவிட வேண்டும் என்பதில்தான் என் முழு கவனமும் இருந்தது. திரைத்துறையில் நல்ல நிலையை அடைந்த பின்பும், அதைத் தக்கை வைக்க கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது’ என்று கூறியுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற புதிய சாதனையை பஞ்சாப் அணி படைத்துள்ளது. நேற்று கொல்கத்தா அணி நிர்ணயித்த 262 ரன்கள் இலக்கை 18.3 ஓவரிலேயே எட்டிய பஞ்சாப் அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 108 ரன்கள் குவித்த ஜோனி பேர்ஸ்டோ ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், மற்றொரு வீரர் சஷாங்க் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார்.
இன்று (ஏப்ரல் 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
அம்பானி, அதானி ஆகியோரின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்த பிரதமர் மோடி, விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யவில்லையென கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, விவசாயிகளின் ரூ.72 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தார். கர்நாடக முதல்வராக இருக்கும் நானே 27 லட்சம் விவசாயிகளின் ரூ.8,165 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
*உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாகும் *உயர் இரத்த அழுத்தத்துக்கு (BP) அதிகமான உப்பு முதன்மை காரணம் *உப்பு அதிகமானால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், இதனால் நோய்கள் அதிகரிக்கும் *குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது *ஒருவருக்கு ஒரு நாளைக்கு அதிகப்பட்சமாக 5 கிராம் உப்பு போதுமானது *அதேநேரம் உடலுக்கு குறைந்த அளவு உப்பு தேவை.
*88 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. *EVM வாக்குகளுடன் பதிவாகும் விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க கோரிய அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது *2ஆம் கட்ட வாக்குப்பதிவில் NDA கூட்டணிக்கு கிடைத்த ஆதரவு, எதிர்க்கட்சிகளுக்கு மேலும் ஏமாற்றமளிக்கப் போவதாக மோடி கருத்து *கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
இன்று (ஏப்ரல் 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com -க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
தேர்தலில் வெற்றிபெறும் போதெல்லாம் காங்கிரஸ், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எந்தவொரு கேள்வியையும் எழுப்பாதென பாஜக அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தற்போது மக்களவைத் தேர்தலில் தோற்று போய் விடுவோமென்ற பயத்தில், இவிஎம் நாடகத்தை நடத்தி வருவதாக விமர்சித்துள்ள அவர், மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானில் உள்ள பாஜக 25 இடங்களிலும் வெற்றிவாகை சூடுமென தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரில் 261/6 ரன்கள் குவித்தது. 262 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு, பேர்ஸ்டோ (108*) – சஷாங்க் சிங் (72*) ஜோடியின் அதிரடி ஆட்டத்தால், 18.3 ஓவரில் 262/2 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது.
✦குடற்புண்களைக் குணமாக்க உதவுகிறது. ✦வறட்டு இருமலுக்கு அதிமதுரத்துடன் இலவங்கப்பட்டைச் சேர்த்துப் பொடியாக்கி சிறிது சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும். ✦சுவாசக்கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது. ✦தாய்ப்பாலை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு. ✦தலைபாரம் இருக்கும் போது இதை நீர்விட்டு அரைத்து பற்றுப்போட விரைவில் பாரம் இறங்கும். நாள்பட்ட நோய்களுக்கு அருமருந்தாக இலவங்கப்பட்டை உள்ளது.
Sorry, no posts matched your criteria.