India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்துள்ளதால் இன்றுமுதல் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் https://www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், இ-சேவை மையம் மூலமாகவும் புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் தங்கள் நிலையை தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்று முதல் கார்டில் திருத்தங்களும் மேற்கொள்ளலாம்.
பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்த ‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள விமான நிலையத்தில், நடிகர்கள் கமல், சிம்பு, அசோக் செல்வன் கொண்ட சண்டைக் காட்சி படமாக்கப்பட்டதாகவும், இதனால் படத்தின் 60% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அடுத்தகட்ட படப்பிடிப்பை கேரளாவிலும், வெளிநாடுகளிலும் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
நாடு முழுவதும் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த மக்களுக்கு, பாஜக சார்பில் 3 மாதங்களுக்கு ‘இலவச ரீசார்ஜ்’ வழங்கப்படுவதாக சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அந்த செய்தியுடன் வரும் லிங்கை க்ளிக் செய்தால், மொபைல் எண்ணை கேட்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இது பொய்யான தகவல் என தெளிவுபடுத்தியுள்ள போலீசார், அந்த லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா ஆகியோரிடம் பேசி அதிமுகவை ஒருங்கிணைக்க இருப்பதாக, அதிமுக ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. ஆனால், இதற்கான வாய்ப்பு குறைவுதான் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதிமுகவில் இணைய ஓபிஎஸ், சசிகலா தயாராக இருப்பதாக கூறும் அரசியல் வட்டாரங்கள், அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர் இபிஎஸ் தான் எனவும், அவர்களை கட்சியில் இணைக்க இபிஎஸ் சம்மதிக்க மாட்டார் என்றும் ஆருடம் கூறுகின்றனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டி, நாளை இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்காக தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கிய இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்த தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மற்றும் ஹாட்ஸ்டாரில் காணலாம்.
மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 இடங்களில் வெற்றிபெற்றது. இதில் சட்டமன்றத் தொகுதி வாரியாக திமுக அதிகபட்சமாக 221 தொகுதிகளில் முதலிடமும், அதிமுக 2ம் இடமும் (8) பெற்றுள்ளன. பாமக 3, தேமுதிக 2 இடங்களில் அதிக வாக்குகளை பெற்றுள்ள நிலையில், பாஜக ஒரு இடத்தில் கூட அதிக வாக்குகளை பெறவில்லை. இது 2026 சட்டமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டி20 உலகக் கோப்பைத் தொடர் களைகட்டி வருவதாக, இணையத்தில் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் பதிவிட்டு வருகின்றனர். இதுவரை நடந்த போட்டிகளில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்துள்ளன. நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் போன்ற முன்னணி அணிகள், அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற சிறிய அணிகளிடம் தோல்வி அடைந்துள்ளன. மைதானங்கள் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால், போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அதிமுக 7 இடங்களில் டெபாசிட் இழந்தது வருத்தம் அளிப்பதாக, அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார். இனிமேலும் தோல்வியை தொண்டர்கள் தாங்க மாட்டார்கள் எனவும், அவர் கவலை தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய கே.சி.பழனிசாமி, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென பலரும் வலியுறுத்துவதாகவும், எந்த அணியையும் சாராமல், அதிமுகவை ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
நிதிஷ்குமாருக்கு பிரதமர் பதவியை வழங்க INDIA கூட்டணி முன்வந்ததாகவும், ஆனால் அதனை அவர் மறுத்துவிட்டதாகவும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிர்வாகி கே.சி.தியாகி தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே தொடருவோம் என்றும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய ஜனதாதளம், தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைத்தால், INDIA கூட்டணி மத்தியில் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு, தொழிலதிபர் நிகோலாய் சச்தேவுடன் மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், திருமண அழைப்பிதழை சரத்குமார், ராதிகா, வரலட்சுமி மற்றும் குடும்பத்தினர் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கியுள்ளனர். அந்தப் புகைப்படங்களை X தளத்தில் பதிவிட்டுள்ள வரலட்சுமி, தேர்தலில் வெற்றிபெற்ற முதல்வருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.