India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திராவிட அரசியலில் எம்ஜிஆர் பார்ப்பனியத்தை புகுத்தியதாக விமர்சித்த திருமாவுக்கு OPS கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்த திருமாவளவனின் கருத்து அவருக்கு நல்லதல்ல, அவரின் அரசியல் மேம்பாட்டிற்கு வழிவகுக்காது என்று எச்சரித்த OPS, கூடுதல் தொகுதிக்காகவும், அமைச்சர் பதவிக்காகவும் திமுக தலைவர்களை புகழ்ந்து பேசுவதாகவும், அதிமுக தலைவர்களை தாக்குவதாகவும் விமர்சித்துள்ளார்.
பிஹாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வழங்க முடியாது என SC-ல் ECI பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும், நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டியது கட்டாயமல்ல எனவும் நீக்கத்திற்கான காரணம் குறித்து கூறமுடியாது எனவும் திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஜனநாயக சீர்த்திருத்த அமைப்பு தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம்(ECI) இந்த முடிவை தெரிவித்துள்ளது. உங்கள் கருத்து என்ன?
கேட்டால் வித்தியாசமாக, விசித்திரமாக தோன்றும். ஆனால், உலகின் பல இடங்களிலும் அப்படியான சில சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அப்படி உலகின் வித்தியாசமான சட்டங்களில் ‘டாப் 5’ மேலே உள்ள அடுத்தடுத்த படங்களில் கொடுத்துள்ளோம். நீங்கள் கேள்விப்பட்ட சில விசித்திரமான சட்டங்களை கமெண்டில் பதிவிடவும். இதில் எந்த சட்டம் உங்களுக்கு ரொம்ப விசித்திரமாக தெரிகிறது.
கால்பந்தை பிரபலப்படுத்த AIFF(இந்திய கால்பந்து சம்மேளனம்) ரிலையன்ஸின் FSDL (Football Sports Development Limited) நிறுவனத்துடன் 2010-ல் 15 வருட ஒப்பந்தம் போட்டது. இதற்கு ₹50 கோடியை AIFF-க்கு FSDL கொடுக்க வேண்டும். 2014-ல் தொடங்கப்பட்ட ISL பெரும் நஷ்டத்தை சந்தித்து வருவதால், டிசம்பரில் முடியும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க FSDL தயாராக இல்லை. அதனால் தொடர் நடக்குமா என்ற இழுபறி நீடிக்கிறது.
பூம்புகாரில் இன்று மாலை 3 மணிக்கு ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்க மாநில மகளிர் மாநாடு நடைபெறவுள்ளது. நேற்று இரவே மாநாட்டு திடலுக்கு சென்ற ராமதாஸ் ஏற்பாடுகளை பார்வையிட்டார். இந்த மாநாட்டில் வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பொதுக்குழு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சிவன் கோயிலுக்கு சென்றால், சில நிமிடமாவது அமர்ந்துவிட்டு வரவேண்டும். காரணம், சிவன் கோவிலில் இருந்து எதையுமே வீட்டுக்கு கொண்டு வரக் கூடாது என்பதால், சில நிமிடங்கள் அமர்ந்து விட்டு புறப்பட வேண்டும். ஆனால், பெருமாள் கோயிலுக்கு சென்றால், நேரடியாக வீட்டுக்கு வந்துவிடலாம். காக்கும் கடவுளான விஷ்ணுவை வணங்கினால், வருமானம் அதிகரித்து, செல்வம் பெருகும் என்பது ஐதீகம். SHARE IT.
ரஜினி- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவர இருக்கும் ‘கூலி’ படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பு ப்ரீ புக்கிங்கிலேயே வெளிப்படுகிறது. கன்னட திரையுலகின் மெகா ஹிட் படமான ‘KGF 2’-வை விட பெங்களூருவில் ‘கூலி’ படத்துக்கு தான் அதிக புக்கிங் ஆகியுள்ளது. ‘கூலி’ படத்துக்கு வெறும் 37 நிமிடங்களில் 10 ஆயிரம் டிக்கெட்கள் விற்றுள்ளன. அதே நேரத்தில், KGF 2-க்கு 45 நிமிடங்களில் தான் 10 ஆயிரம் டிக்கெட்கள் விற்றன.
TN-ல் கடந்த 4 ஆண்டுகளில் 50% மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக சவுந்தரராஜன் கூறியுள்ளார். கடலூரில் TNEB அமைப்பின் 18-வது மாநில மாநாட்டில் பேசிய அவர், மின்சாரம், போக்குவரத்து துறைகளில் லாபம், நஷ்டம் பார்க்கக்கூடாது எனவும் சேவை நோக்குடன் இயக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், தொழிலாளர்களுக்கு எதிராக பல துறைகளில் தனியார்மயமாக்கல் நடத்துவதை நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றார்.
2026 தேர்தலுக்கான அறிக்கையை தயாரிப்புப் பணியில் தவெக தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் இடம்பெறுவது வழக்கம். ஆனால், தவெக தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் எதுவும் இடம்பெறக் கூடாது என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறாராம். மக்களை நேரில் சந்தித்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்களை கேட்டறிய நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.