News August 9, 2025

ஹேப்பியா இருக்கணுமா? 10 நிமிடம் ஓடுங்க!

image

தினமும் 10 நிமிடம் ஓடுவதன் மூலம் மகிழ்ச்சியான மனநிலை ஏற்படும் என்கின்றனர் ஜப்பானிய ஆய்வாளர்கள். ஓடுவதால் பெருமூளையில் ரத்த ஓட்டம் அதிகரித்து, மூளையின் செயல்பாடும் சுறுசுறுப்பாகிறது. இதனால் மூளையில் ஆக்சிஜன் அளவு அதிகரிப்பதுடன், மூளையின் முன்புரணி தூண்டப்படுகிறது. இதனால், ஒட்டுமொத்த மனநிலை மேம்பட்டு, மகிழ்ச்சியான உணர்வு ஏற்படுமாம். ஓடத் தயாரா?

News August 9, 2025

பீர் அடிச்சா… இதெல்லாம் சாப்பிடாதீங்க!

image

பீர் அருந்தும் போது கலோரி அதிகமான Non-Veg உணவுகள் சாப்பிடுவது நல்லதல்ல. காரமான உணவுகள் நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லையை ஏற்படுத்தலாம். Bread, Dark chocolate ஆகியவையும் நல்லதல்ல. Beer, Bread இரண்டிலும் ஈஸ்ட் அதிகம். இது செரிமானத்தை பாதிக்கும். அதிகம் உப்பு சேர்த்த உணவுகளில் Sodium அதிகம் உள்ளதால், Dehydration, BP ஏற்படலாம். மொத்தத்தில் உடல்நலத்துக்கு கேடான பீரை தவிர்ப்பது நலம் என்கின்றனர் டாக்டர்கள்.

News August 9, 2025

அதிமுகவுடன் கூட்டணியில்லை.. பிரேமலதா அறிவிப்பு

image

<<17341369>>பிரேமலதா – அதிமுக Ex அமைச்சர் KC வீரமணி<<>> இடையேயான சந்திப்பு கூட்டணிக்கு அச்சாரமா என்ற கேள்வியை எழுப்பி இருந்தது. இந்நிலையில், அவரது ஹோட்டலில் தங்கி இருந்ததால் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாகவும், இதனால் அதிமுகவுடன் கூட்டணி என சொல்ல முடியாது எனவும் பிரேமலதா விளக்கியுள்ளார். 2026 ஜன. 9-ல் கட்சி மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என்றும் அவர் கூறினார்.

News August 9, 2025

கடன் வட்டி தள்ளுபடி.. தமிழக அரசு அறிவிப்பு

image

வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்டத் தவறியதால் அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபாரத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2015 மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், இந்த சலுகை 2026 மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News August 9, 2025

சஞ்சுவை எடுக்க இரு அணிகள் ஆர்வம்

image

RR-ல் இருந்து தன்னை விடுவிக்குமாறு சஞ்சு சாம்சன் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகின. இதனால் அவர் CSK-வுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி பேசிய ஆகாஷ் சோப்ரா, CSK போன்றே KKR-க்கும் ஒரு இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவைப்படுவதால், அவர்களும் சஞ்சுவை எடுக்க முன்வரலாம். கடந்த IPL-ல் ₹24 கோடிக்கு ஏலம் எடுத்த வெங்கடேஷ் ஐயரை விடுவித்தால் அவர்களால் சஞ்சுவை எடுக்க முடியும் என்றார்.

News August 9, 2025

இந்திய அரசியலில் தந்தையை விஞ்சிய மகன்கள்!

image

அன்புமணி கை ஓங்கியுள்ள நிலையில், இந்திய அரசியலில் தந்தையை விஞ்சிய மகன்களின் பட்டியல் இதோ: * 38 வயதில் தன்னை CM ஆக்கிய முலாயம் சிங்கை, SP தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கினார் அகிலேஷ் * 2006-ல் தேவகவுடாவின் எதிர்ப்பை மீறி CM பதவிக்காக பாஜகவுடன் சேர்ந்த குமாரசாமி, கட்சியையும் தன்பிடிக்குள் கொண்டுவந்தார் * மோடியை எதிர்த்ததால் யஷ்வந்த் சின்ஹாவை விமர்சித்த ஜெயந்த் சின்ஹா, பாஜக முக்கிய தலைவரானார்.

News August 9, 2025

300 கிமீ தொலைவில் பாக்., விமானத்தை வீழ்த்திய இந்தியா

image

ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, நம் விமானப்படை தளபதி ஏபி சிங் உறுதிப்படுத்தியுள்ளார். குறிப்பாக எல்லையில் இருந்து 300 கிமீ தொலைவில், இந்திய விமானங்களை கண்காணித்த AWACS ரேடார் விமானத்தை, ரஷ்ய தயாரிப்பான S-400 வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக அவர் தெரிவித்தார். 300 கிமீ தொலைவில் உள்ள விமானத்தை surface-to-air-ல் வீழ்த்தியது ஒரு உலக சாதனையாகும்.

News August 9, 2025

சளி என்று போனால் நாய்கடி ஊசி போடுகிறார்கள்: EPS

image

தற்போது அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், நர்ஸுகள், மருந்துகள் போதியளவில் இல்லை என இபிஎஸ் குற்றம் சுமத்தியுள்ளார். அருப்புக்கோட்டையில் பேசிய அவர், சளி என்று அரசு மருத்துவமனைக்கு சென்றால் நாய்க்கடிக்கு ஊசி போடுவதாக விமர்சித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் கையில்லாதவருக்கு கைகள் கொடுத்தோம். திமுக ஆட்சியில் காலோடு போனால் கால் இல்லாமலும், உயிரோடு போனால் உயிரில்லாமல் வருவதாகவும் சாடினார்.

News August 9, 2025

இந்த கோடுகளின் அர்த்தம் தெரியுமா?

image

‘Bleed lines’ என்ற இந்த கோடுகள் ரூபாய் நோட்டுகளில் ஏன் இருக்கின்றன என தெரியுமா? இவற்றை தேய்த்து தான் கண்பார்வை இல்லாதவர்கள் நோட்டின் மதிப்பை அறிகின்றனர். இந்த கோடுகள் நோட்டுகளின் மதிப்பிற்கு ஏற்ப கூடும், குறையும். ₹100 நோட்டின் இருபுறமும் 4 கோடுகள் இருக்கும். அதுவே, ₹200 நோட்டுகளில் 4 கோடுகளுடன் 2 பூஜ்ஜியங்கள் இருக்கும். ₹500 நோட்டுகளில் 5 கோடுகளும், ₹2,000 நோட்டில் 7 கோடுகளும் இருக்கும்.

News August 9, 2025

புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வேண்டுமா?.. இதை பண்ணுங்க!

image

புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி இருந்தால் பட்டா பெற முடியுமா? ஆம், 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும். அடையாள அட்டை, வசிப்பிட சான்று, மின்கட்டண ரசீது உள்ளிட்டவற்றுடன் பட்டா கோரி வட்டாட்சியர் அலுவலக இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதிகாரிகள் நிலத்தை ஆய்வு செய்து எந்த பிரச்னையும் இல்லையெனில் பட்டா வழங்குவார்கள். SHARE IT.

error: Content is protected !!