News April 29, 2025

தங்கம் விலை சவரனுக்கு ₹320 உயர்ந்தது

image

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.29) சவரனுக்கு ₹320 உயர்ந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹8,980-க்கும், ஒரு சவரன் ₹71,840-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹520 குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹111-க்கும், பார் வெள்ளி ஒரு கிலோ ₹1,11,000-க்கும் விற்பனையாகிறது.

News April 29, 2025

ஹாஸ்பிடலில் பாக்., பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அட்மிட்!

image

இந்தியாவுக்கு எதிராக போர் பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலில், பாக். பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளிவருகின்றன. திடீரென அவருக்கு உடல்நலம் மோசமானதால், அவர் ராவல்பிண்டியின் ராணுவ ஹாஸ்பிடலில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் என Confidential மருத்துவ அறிக்கை ஒன்று சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இருப்பினும் இத்தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

News April 29, 2025

எல்லையில் 4வது நாளாக துப்பாக்கி சண்டை

image

காஷ்மீர் எல்லையில் 4-வது நாளாக இந்தியா, பாகிஸ்தான் படையினர் இடையே துப்பாக்கிச் சண்டை நீடிக்கிறது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, 2 நாடுகள் இடையே பதற்றம் நிலவுகிறது. 2 நாட்டுப் படையினரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். குப்வாரா, பாரமுல்லா, அக்னூரில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர்.

News April 29, 2025

தமிழக உளவுத்துறையின் தோல்வி: இபிஎஸ் தாக்கு

image

தமிழகத்தில் எதிர்க்கட்சிகளை கண்காணிக்கும் பணியில் மட்டுமே உளவுத்துறை பயன்படுத்தப்படுவதாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் கொலைகள், கொள்ளைகளை சுட்டிக்காட்டியுள்ள இபிஎஸ், சட்டம் ஒழுங்கை காக்கும் பணியில் தமிழக உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டதாக சாடியுள்ளார். தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திமுக அரசு திணறுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

News April 29, 2025

தமிழக உளவுத்துறையின் தோல்வி: இபிஎஸ் தாக்கு

image

தமிழகத்தில் எதிர்க்கட்சிகளை கண்காணிக்கும் பணியில் மட்டுமே உளவுத்துறை பயன்படுத்தப்படுவதாக இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் கொலைகள், கொள்ளைகளை சுட்டிக்காட்டியுள்ள இபிஎஸ், சட்டம் ஒழுங்கை காக்கும் பணியில் தமிழக உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டதாக சாடியுள்ளார். தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திமுக அரசு திணறுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

News April 29, 2025

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட ஹாஷிம் மூஸா Ex பாக்., வீரர்!

image

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட ஹாஷிம் மூஸா பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் பாரா கமாண்டோ(Para SF) என NIA தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத சம்பவத்தை அரங்கேற்ற அவர் தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயல்பட்டதாகவும் NIA தெரிவித்துள்ளது. மேலும், 2024-ல் கந்தர்பாலில் நடந்த தீவிரவாத தாக்குதலிலும் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக NIA அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது.

News April 29, 2025

குரூப் 4 தேர்வு: 5-வது கட்ட கலந்தாய்வு பட்டியல் வெளியீடு!

image

9,491 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு 2024 ஜூன் 9-ல் நடைபெற்று, 2024 அக். 28-ல் முடிவுகள் வெளியாகின. இதனையடுத்து, கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், தற்போது 5வது கட்ட பட்டியல் https://www.tnpsc.gov.in/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான கலந்தாய்வு மே 5-ல் சென்னை TNPSC அலுவலகத்தில் நடைபெற உள்ளது. SHARE IT.

News April 29, 2025

நீங்க 14 வயசுல என்ன பண்ணிட்டு இருந்தீங்க..?

image

இந்த கேள்விதான் இந்திய அளவில் ட்ரெண்டிங். ‘உங்க 14 வயசுல நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க?’ 14 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் உலகை அதிரவைத்து விட்டான். கிரிக்கெட்டை ரசிப்பவர்கள் அவரை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து, இன்டர்நெட் சமூகம் இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறது. இது ஒப்பிடுவதற்காக அல்ல. வெறும் ஜாலிக்காக மட்டுமே. சரி சொல்லுங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க?

News April 29, 2025

‘டூரிஸ்ட் பேமிலி’: முதல் ரிவ்யூ!

image

‘டூரிஸ்ட் பேமிலி’ பெரும் எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. இந்நிலையில், படத்தை லைகா நிறுவனத்தின் GKM தமிழ்குமரன் பாராட்டியுள்ளார். அவரின் X பதிவில், படம் தன் மனதை உருக்கியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், படம் மாபெரும் வெற்றி பெற தனது வாழ்த்துகளையும் தெரிவித்ததோடு, படத்தில் நடித்த கலைஞர்களையும், இயக்குநரையும் வெகுவாக பாராட்டினார். நீங்க படம் போறீங்களா?

News April 29, 2025

காஷ்மீரில் 48 சுற்றுலாத் தலங்கள் மூடல்!

image

பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் 48 சுற்றுலாத் தலங்களை மத்திய அரசு மூடியுள்ளது. காஷ்மீரில் உள்ள 87 சுற்றுலா பகுதிகளில் குரேஸ் பள்ளத்தாக்கு, வுலர் வான்டேஜ் பூங்கா, யஸ்மார்க், தூத்பத்ரி உள்ளிட்ட 48 இடங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் ஆயுதப்படை பாதுகாப்பு வழங்கப்பட்ட பின்னர் விரைவில் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!