India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உரங்களுடன் பிற இடுபொருள்களை வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்தக்கூடாது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தியுள்ளார். உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விதிகளை மீறி உரங்களை பதுக்கினால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. மேலும், கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. குடையை ரெடியா வையுங்க மக்களே..!
நாம் பொதுவாகவே யாருடனாவது நம்மை ஒப்பிட்டுக்கொள்வோம். நம் கவலைகளில் பாதி, இந்த ஒப்பிடல் மூலம் தான் வரும். உங்களைவிட ஒருவர் வெற்றிகரமாக இருக்கிறார் என்றால் அவருடைய சூழல், குடும்ப வழிகாட்டல்கள் என அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதனால் நீங்கள் ஒன்றும் குறைவானவரில்லை. முதல் படியில் இருந்து நீங்கள் முன்னேறி வருவதற்கு மகிழ்ச்சிக் கொள்ளுங்கள். உங்களாலும் முடியும்!
கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்திய 2025 வருமான வரி மசோதாவை, நிர்மலா சீதாராமன் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெற்றுள்ளார். அதேநேரம், வரி செலுத்துவோருக்கு பயன் தரும் வகையில் ஆக.11-ல் புதிய வருமான வரி மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. TDS, TCS விரைவாகவும், எளிதாகவும் மாற்றும் வகையிலும், வீட்டுக் கடனுக்கான வட்டி டிடக்ஷனில் கூடுதல் பலன் போன்ற பல மாற்றங்களுடன் புதிய மசோதா தாக்கலாகிறது.
TN அரசு வெளியிட்டுள்ளது மாநில கல்விக் கொள்கை அல்ல தேசிய கல்விக் கொள்கையின் காப்பி(Copy) கொள்கை என நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். மாணவர்களின் நலனுக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையில்(NEP) மும்மொழி கொள்கை மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாக கூறினார். இதே கருத்தை அக்கட்சியின் மூத்த தலைவர்களான தமிழிசை, <<17341526>>அண்ணாமலை<<>> உள்ளிட்டோரும் கூறியுள்ளனர்.
மத்திய அரசின் தொலைதூர மருத்துவ சேவை தான் இ-சஞ்சீவனி (esanjeevani.in) திட்டம். இதன்மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும் தொலைபேசி / வீடியோ கால் அழைப்பு மூலம் உங்கள் நோய்கள் மற்றும் சிகிச்சைகள் பற்றி டாக்டரிடம் ஆலோசனை பெறலாம். ஆலோசனையுடன் டாக்டர் இ-பிரிஸ்கிரிப்ஷனும் கொடுப்பார். இதை பார்மஸியில் காட்டி மருந்துகளும் வாங்கலாம். ஆயுர்வேத டாக்டர்களிடமும் ஆலோசனை பெறலாம்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் வீழ்ச்சியடைந்து ₹87.71 ஆக உள்ளது. உள்நாட்டு பங்குச்சந்தைகளின் சரிவால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்து வருகிறது. குறிப்பாக இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த நிச்சயமற்ற தன்மையால் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள தாக்கம் முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
★சின்சினாட்டி ஓபன்: முதல் சுற்றில் 4- 6, 4- 6 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ஜெசிகாவிடம் வீனஸ் வில்லியம்ஸ் தோல்வி.
★ZIM-க்கு எதிரான 2-வது டெஸ்ட்: 2-வது நாளில் NZ 601/ 3 குவிப்பு. நிக்கோல்ஸ் 150*, ரச்சின் 165* ரன்கள் குவிப்பு.
★பணப்பிரச்னையால் முடங்கிய ISL: இந்த ஆண்டு நடக்காது எனவும் தகவல்.
★சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ்: 2-வது சுற்றில் அர்ஜூன் எரிகைசி நெதர்லாந்தின் ஜோர்டென் வானுடன் டிரா செய்தார்.
‘கூலி’ இண்டர்வெல் பிளாக் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இருக்கும் என அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இதுவரை யாரும் இப்படி ஒரு இடைவேளை காட்சியை வைக்க முயற்சி செய்யவில்லை எனவும், அதை தான் செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. வரும் 14-ம் தேதி இப்படம் ரிலீஸாக உள்ளது.
புதிய வரிவிதிப்புகளால் அமெரிக்கா பயனடைந்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் பங்குச்சந்தைகள் உச்சத்தை அடைந்து, கோடிக்கணக்கான பணம் நாட்டிற்கு வருவதாகவும், புதிய வரிவிதிப்புகளுக்கு கோர்ட் தடை போட்டால், அது 1929 Great depression நிலைக்கு நாடு சென்றுவிடும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தமது நாட்டிற்கு வெற்றியும், மகத்துவத்துமும் தான் தேவை, தோல்வி அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.