India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
TN-ல் பட்டப்பகலில் படுகொலைகள், கொள்ளைகள், பாலியல் துன்புறுத்தல் என சட்டம்-ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக OPS சாடியுள்ளார். திருப்பூர் SSI கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், மதுவால் தமிழ்நாடு கொலை நாடாக மாறிக் கொண்டிருக்கிறது எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார். ஸ்டாலினை சந்தித்த பிறகு திமுகவுடன் நெருக்கம் காட்டுவதாக கூறப்பட்டு வந்த நிலையில், திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது கவனிக்கத்தக்கது.
ஆபரணத் தங்கத்தின் விலையை தொடர்ந்து, வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹127-க்கும், கிலோ வெள்ளி ₹1000 உயர்ந்து ₹1,27,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆக.4-ம் தேதி கிலோ வெள்ளி ₹1,23,000-ஆக இருந்த நிலையில், 3 நாளில் ₹4,000 அதிகரித்துள்ளது. தொடர்ந்து உயர்வை கண்டு வரும் தங்கம், வெள்ளி விலை, வரும் நாள்களில் குறையுமா என நகை பிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியாவின் விவசாயிகள், மீனவர்கள், பால் உற்பத்தியாளர்களின் நலனே முதன்மையானது என PM மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், இந்தியர்களின் நலனின் ஒருபோதும் சமரசம் செய்ய முடியாது எனவும் அதற்காக அதிக விலை கொடுக்க நேரிடும் என்பது தங்களுக்கு நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளார். புதிய வரிவிதிப்பால் டிரம்ப், இந்தியாவை மிரட்டி வரும் நிலையில், அவருக்கு PM மோடி மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
மடத்துக்குளம் MLA மகேந்திரனின் தோட்டத்தில் மதுபோதையில் இருந்த மூர்த்தி, அவரது மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை விலக்கி விடச் சென்ற SSI சண்முகவேல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், மூர்த்தி, தங்கபாண்டி இருவரும் சரணடைந்த நிலையில், தலைமறைவாக இருந்த மணிகண்டனை பிடிக்கும் முயற்சியில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் <<17327420>>சுட்டு கொல்லப்பட்டதாக<<>> தகவல் வெளியாகியுள்ளது.
வாக்கு அரசியலுக்காக ‘ஆணவப்படுகொலைக்கு தனிச்சட்டம்’ என்ற கோரிக்கையை ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை என சமூக செயல்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், நேற்று கூட்டணிக்கட்சி தலைவர்கள் ஸ்டாலினை சந்தித்து ‘தனிச்சட்டம்’ குறித்து வலியுறுத்தினர். அதுபற்றி எதுவும் குறிப்பிடாமல், கூட்டணிக் கட்சி தலைவர்கள் உடல்நலம் குறித்து விசாரித்ததாக ஸ்டாலின், <
திருச்சி காட்டூரை சேர்ந்த செல்வ பிருந்தா(32), உண்மையான தாய்மையின் உதாரணம். கடந்த 22 மாதங்களில், தனது குழந்தைகளின் தேவைக்கு அதிகமாக சுரந்த 300.17 லிட்டர் தாய்ப்பாலை, திருச்சி மகாத்மா காந்தி ஹாஸ்பிடலுக்கு தானமாக வழங்கியுள்ளார். இதற்காக இந்தியா புக், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் அவர் இடம் பெற்றுள்ளார். ‘பிற குழந்தைகளுக்கும் பாசம் பஞ்சமில்ல’ என உணர்ந்து உதவிய இந்த தாய்க்கு பாராட்டுகள் குவிகிறது.
கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் CM ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய ஸ்டாலின், சுமார் 2 KM தூரம் <<17327639>>அமைதி பேரணி<<>> சென்றார். அவருடன் உதயநிதி, கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள், MP-க்கள், MLA-க்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
சென்னையில் தங்கம் விலை இன்று(ஆக.7) சவரனுக்கு ₹160 உயர்ந்துள்ளது. இதனால், வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹9,400-க்கும், சவரன் ₹75,200-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹127-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை உயர்வு குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க.
ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடரும் என RBI அறிவித்தது, ஐடி, மருந்து துறை பங்குகளை முதலீட்டாளர்கள் அதிக அளவில் விற்றது உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தைகள் கடும் சரிவைக் கண்டுள்ளன. இன்று(ஆக.7) சென்செக்ஸ் 213 புள்ளிகள் சரிந்து 80,330 புள்ளிகளிலும், நிஃப்டி 64 புள்ளிகள் சரிந்து 24,509 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. Tata Motors, HCL Tech, Jio Financial நிறுவனங்களின் பங்குகள் அதிகம் சரிந்துள்ளன.
தமிழ்நாட்டில் அம்மா என்றால் ஜெயலலிதா என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று என உச்ச நீதிமன்றத்தில் நேற்று திமுக தரப்பு வாதம் செய்தது. இதை சுட்டிக்காட்டி, ‘அப்பா’ என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்டவர், ‘உங்களுடன் அப்பா’ என்றல்லவா திட்டத்திற்கு பெயரிட்டிருக்க வேண்டும் என பாஜகவின் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். ஓ! மக்கள் ஏற்கவில்லை என்பதை உணர்ந்து விட்டாரா என்றும் ஸ்டாலினை சாடியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.