News August 21, 2025

அஜித் மரணத்தில் புதிய குற்றவாளி.. அதிர்ச்சி தகவல்

image

அஜித் குமார் மரண வழக்கில், CBI ஒரே மாதத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 5 காவலர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 6-வது குற்றவாளியாக தனிப்படை வாகன டிரைவர் ராமச்சந்திரன் பெயரையும் சேர்த்திருப்பது குற்றப் பத்திரிகை மூலம் தெரியவந்துள்ளது. இதனிடையே, நிகிதாவின் நகைத் திருட்டு வழக்கு விசாரணையை CBI தொடங்க இருப்பதால், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

News August 21, 2025

PM மோடி எந்த போன் யூஸ் பண்ணுறார் தெரியுமா?

image

நம்முடைய போனே ரொம்ப Privacy-யானது என்றால், PM மோடி யூஸ் பண்ணும் போன் குறித்து யோசிங்க. Rudra எனப் பெயரிடப்பட்டுள்ள, RAX(Restricted Area Exchange) என்ற போனை அவர் உபயோகிக்கிறார். இந்த போன், ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள அலைவரிசையில் செயல்படுகிறது. மேலும், எவராலும் ஹேக் பண்ண முடியாத அளவிற்கு சிப் ஒன்றும் போனில் பொருத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அவரிடம் Rudra 2 என்ற இன்னொரு போனும் உள்ளது.

News August 21, 2025

மருத்துவ, ஆயுள் காப்பீட்டுக்கு ஜிஎஸ்டி வரி குறைகிறது

image

GST வரி விதிப்பு முறைகளில் மாற்றங்களை செய்ய நிதியமைச்சகம் ஆலோசித்து வருகிறது. GST 2.0-ல் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கான வரியை 18% இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மூத்த குடிமக்களுக்கு பெரிதும் பயனளிக்கும். உதாரணமாக 20 ஆயிரம் ரூபாய் காப்பீடுக்கு வரியாக ரூ.3,600 செலுத்த வேண்டும். இனி 0% வரியாக இருந்தால் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே கட்டினால் போதும்.

News August 21, 2025

விஜய்யின் கொள்கை சரியில்லை : சீமான் அட்டாக்

image

விஜய்யின் கொள்கை, கோட்பாடு ஏற்புடையதல்ல என சீமான் விமர்சித்துள்ளார். தவெக மாநாட்டில் அண்ணாவின் புகைப்படத்தை வைத்துவிட்டு, திமுகவை எதிரியாக விஜய் குறிப்பிடுவது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்த மாநாட்டில் எம்ஜிஆர் படம், அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, EPS படம் வைப்பீர்களா என்றும் அவர் விஜய்யை சாடியுள்ளார். சீமான் கேள்வி குறித்து உங்கள் கருத்து என்ன? கமெண்ட் பண்ணுங்க.

News August 21, 2025

முதல்முறையாக இந்தியா வரும் ஃபிஜி PM

image

ஃபிஜி நாட்டின் PM சிடிவேனி லிகமமடா ரபுகா, முதல்முறையாக ஆக.24-ல் இந்தியா வருகிறார். ஆக.26 வரை இங்கு இருக்கும் அவர், ஜனாதிபதி முர்மு, PM மோடியைச் சந்திக்கிறார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே 3 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. மேலும் டெல்லியில் உள்ள உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் ‘அமைதி பெருங்கடல்’ (Ocean of peace) என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.

News August 21, 2025

பொது அறிவு வினா- விடை பதில்கள்!

image

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17471264>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. சுகுமார் சென்.
2. 1608.
3. திருமூலர்.
4. தமிழ்.
5. வெறுங்கை அல்லது வெறுங்கயுடன் விளையாடுதல்.
எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க.

News August 21, 2025

இந்த நடிகை போல நீ ஆகணும்.. டார்ச்சர் செய்த கணவர்!

image

‘நடிகை நோரா பதேகி போல நீ மாறணும்’ என கூறி உ.பி.யை சேர்ந்த கணவர் ஒருவர், தனது மனைவியை கொடுமை செய்துள்ளார். தினமும் 3 மணி நேரம் உடற்பயிற்சி, இல்லையென்றால் அன்று சாப்பாடு கட் என கண்டிஷன்களை வைத்தவர், கர்ப்பிணியான அவருக்கு சீக்ரெட்டாக கருக்கலைப்பு மாத்திரையும் கொடுத்துள்ளார். இந்த கொடுமையை அனுபவிக்க அப்பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டுக்கு 50 லட்சம் வரதட்சணை கொடுத்துள்ளனர். இவர்களை என்ன சொல்வது?

News August 21, 2025

அண்ணாமலைக்கு டிரான்ஸ்ஃபர்.. அடுத்து என்ன?

image

ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்து ஒதுங்கியிருப்பது போல அண்ணாமலை காட்டிக்கொண்டாலும், தனது ஆதரவாளர்கள் மூலம் நயினாருக்கு அவர் குடைச்சல் கொடுப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதையறிந்த டெல்லி பாஜக, கூட்டணிக்கு சேதாரம் வரக்கூடாது என்பதற்காக மேற்கு வங்க தேர்தல் பொறுப்பாளராக அவரை நியமிக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 21, 2025

BREAKING: பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில், வரும் 26-ம் தேதி திட்ட விரிவாக்கத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஏற்கெனவே காலை உணவுத் திட்டத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெறும் நிலையில், தற்போது விரிவாக்கம் செய்வதன் மூலம், மேலும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவர்.

News August 21, 2025

Post Man மூலம் Mutual Fund திட்டம்.. விரைவில் அமல்

image

தபால்காரர்கள் மூலம் பொதுமக்களை மியூச்சுவல் ஃபண்டில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆந்திரா, பிஹார், ஒடிசா, மேகாலயா ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக 1 லட்சம் தபால்காரர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் குறித்த பயிற்சி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் ‘மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்டிரிபியூட்டர்ஸ்’ என அழைக்கப்படுவர்.

error: Content is protected !!